முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள்

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தகவல் 2022 ஆகஸ்ட் 31 வரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நெசப்பாக்கம் பகுதியில் பிபிசிஎல் பெட்ரோல் நிலையம் அருகே இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 பெண் பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி வழங்கினார்.   இந்திய எண்ணெய் கழகம் 19,21,340 இணைப்புகளையும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் 9,42,521 இணைப்புகளையும், பிபிசிஎல் 8,12,293 இணைப்புகளையும் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். 2021-22 நிதியாண்டில் 62,06,748 சமையல் எரிவாயு  சிலிண்டர்கள் வாங்க தமிழ்நாட்டில்  பிரதமரின்  உஜ்வாலா திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்  ரூ.413.90 கோடி எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசால் பரிவர்த்தனை செய்யப்பட்

பிரஞ்சு மொழியில் மாநில சுற்றுலா வழிகாட்டி விருது பெற்ற விரிவுரையாளர்

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினமாகும் . நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, நடனம், இசை, திருவிழாக்கள், உணவு வகைகள், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன் சுற்றுலாவின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. சுற்றுலாவில் வெற்றியாளர்கள் பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை முதல் முறையாக சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் முதன் முறையாக சிறந்த சுற்றுலா இயக்குனர்கள், சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள், அதாவது கைடுகள், சிறந்த தங்கும் விடுதிகள், சிறந்த விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட17 விருதுகளை அறிவித்து அதற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றதில் சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருதுக்கு ஐந்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டதில் சிவகங்கை மாவட்டம் காரைக்க

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனுத் தாக்கல்

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவருக்கான தேர்தலில்  மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனுத் தாக்கல் செய்தார்.               காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் அது முதன் முதலாக ஒரு சிந்தாந்த பின் புலத்தை நோக்கி நகர முயல்கிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பின்னர் ராகுல்காந்தி அதன் மிகச்சிறந்த வழி நடத்துனராக கிடைத்துள்ளார். ஆனால் ராகுல்காந்தி நேரடியாக மோதுவது ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் என்பதால் அவர் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது தான் உண்மை நிலை  பாஜகவின் அரசியல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் பிளவுகளை ஊதி விட்டு கட்சியை குழப்புகிறது என்று கட்சி நிர்வாகிகள் பேசும் நிலையில். இதை எல்லாம் மீறி இந்த அளவு காங்கிரஸ்  கட்சி தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயம்.என்ற நிலையில்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகிறார் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே- ஆனால் திக்விஜய்சிங் தலைவராகியிருந்தால் இன்னும் சிறப்பாக  இருந்திருக்கும் என்றாலும்  மல்லிகார்ஜுன கார்கே நல்ல தலைவர்தான். நாடு முழுக்க காங்கிரஸ்  கட்சி எதிர்கொள்ளும் நெருக்கடியில் இருந்து அக்கட்சியை மீட்க மல்லிகார்ஜுன கார்கே பெரித

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வரும் வரை இடைக்காலத் தடை விதிப்பு

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் நடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாதெனத் தீர்ப்பளித்தார். முந்தைய பொதுக்குழு நடைபெற்ற ஜூன் மாதம் 23-ஆம் தேதியன்று அதிமுகவிலிருந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமென நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்புக்கெதிராக எடப்பாடி கே.பழனிசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து அது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு கூட்டிய ஜூலை மாதம் 11-ஆம் தேதி கூட்டிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லுமெனத் தீர்ப்பளித்தனர். அதனால் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யபப்ட்டதும் செல்லும் என்ற நிலை வந்தது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனுவைத

உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

பவ்நகரில் ரூ 5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுபெற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் பவ்நகரில் பிராந்திய அறிவியல் மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார் சௌனி யோஜ்னா இணைப்பு 2, 25 மெகாவாட் பாலிதானா சோலார் பிவி திட்டம், ஏபிபிஎல் கொள்கலன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் சௌனி யோஹ்னா இணைப்பு 2, சோர்வட்லா மண்டல நீர் வழங்கல் திட்டம், தொகுப்பு 9 உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் "300 வருட பயணத்தில், பவ்நகர் ஒரு நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளதுடன் சௌராஷ்டிராவின் கலாச்சார தலைநகரமாக அதன் முத்திரையை பதித்துள்ளது" "கடந்த இரண்டு தசாப்தங்களில், குஜராத்தின் கடற்கரையை இந்தியாவின் செழுமைக்கான நுழைவாயிலாக மாற்ற நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" "பவ்நகர் துறைமுகம் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது" " உலகின் மிகப் பழமையான துறைமுகமான லோதல் கடல்சார் அருங்காட்சியகத்தின் கட்டுமானம் அந்த இடத்திற்கு ஒரு

ஏழைகளுக்கு உதவி செய்ய அரசின் திட்டங்களை ஊடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும்:-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

ஏழைகளுக்கு உதவி செய்ய அரசின் திட்டங்களை ஊடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல் சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய அரசின் திட்டங்களை உடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த அவர், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த கண்காட்சியையும்  பார்வையிட்டார். ஊடகவியலாளர் கலந்துரையாடலில் பேசிய மாவட்ட ஆட்சியர், பேரிடர், தேர்தல், கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் பத்திரிகையாளர்கள் மிகவும் உதவியாக இருந்ததை நினைவுகூர்ந்தார். அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பல இருந்தாலும், அவற்றை தேவையானவர்களுக்கு ஊடகங்கள் மூலமாகத்தான் செல்லவேண்டும். எனவே பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் பற்றி வெளியிடும் கட்டுரை பலருக்கு பயன்படும் என்று அவர் கூறினார்.   பத்திரிக்கை சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும், நம்மால் பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தில் பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் துவங்கி வைக்கிறார்

பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டில் தொடங்கிவைக்கிறார் மத்திய அரசின் பிரபலமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தைவானின் மின்னணு சாதன ஜாம்பவானான பெகட்ரானின் புதிய செல்பேசி தயாரிப்பு தொழிற்சாலை சென்னையை அடுத்த செங்கல்பட்டு தொழிற் பூங்காவில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கவுரவ விருந்தினராக கலந்துகொள்வார். 2014-15-ல்  செல்பேசி உற்பத்தியின் மதிப்பு ரூ. 18,900 கோடி அளவுக்கு குறைந்திருந்த நிலையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் முதல் ஆண்டுக்குள் 28 சதவீதம் அதிகரித்து, ரூ.60000 கோடி என பதிவாகியது. தற்போது மேலும் 14 மடங்கு உயர்ந்து, ரூ.2,75,000 கோடி என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது 2015-16ல் செல்பேசி ஏற்றுமதி ஏறத்தாழ பூஜ்யம் என்ற நிலையில் இருந்தது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் போன்றவற்றால் 2019-20ல் ஏற்றுமதி மதிப்பு ரூ.27,000 கோடியை தொட்டது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் ஊட்டச்சத்து விழா

கடமைப் பாதையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாளை முதல் அக்டோபர் 2 வரை ஊட்டச்சத்து விழாவை நடத்துகிறது 5-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தைக்  கொண்டாடும் வகையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செப்டம்பர் 30  முதல் அக்டோபர் 2  வரை புதுதில்லியில் உள்ள கடமைப்பாதையில் ஊட்டச்சத்து விழாவை நடத்துகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும், குறிப்பாக இளம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டின் சவால்களை எதிர்கொள்ள வயதுக்கு ஏற்ற நல்ல சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு உணர்த்துவது இதன் நோக்கமாகும். குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில், விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகள், ஊட்டச்சத்து  அணிவகுப்புகள், சுகாதார பரிசோதனை முகாம்கள், ஆரோக்கியமான உணவுக் கடைகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய செய்தியுடன் கூடிய விளையாட்டுகள் மற்றும் பிரதமருடன் ஒரு  ரியாலிட்டி அடிப்படையிலான புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பையும் இது உள்ளடக்கும் மாலை 6:00 மணிக்கு ஊட்டச்சத்து விழா மத்திய பெண்கள் மற்று

இந்தியத் தலைமையின் கீழ் ஜி 20 செயலகத்தில் பணி நியமன வாய்ப்புகள் பிரதமர் பகிர்வு

இந்தியத் தலைமையின் கீழ் ஜி 20 செயலகத்தில் பணி நியமன வாய்ப்புகளை பிரதமர் பகிர்ந்துள்ளார் ஜி 20 செயலகத்தின் ஒரு பகுதியாக வியப்பளிக்கும் வகையில் பணி நியமன வாய்ப்புகளையும் இந்திய தலைமையின் கீழ் உலகளாவிய  செயல் திட்டத்தை முறைப்படுத்துவதற்கான பங்களிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார். வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சியின் ட்விட்டர் செய்தியை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:  “இது வியப்பளிக்கும் வாய்ப்பாகும்…”

பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு (அக்டோபர் 2022-டிசம்பர்2022) மத்திய அரசு நீடித்துள்ளது 2021-ல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டமான பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ் கூடுதல் உணவுப் பாதுகாப்பு வெற்றிகரமாக அமலாவதை அடுத்து இந்த திட்டத்தின் 7-வது கட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவிருக்கும் நவராத்திரி, தசரா, மிலாது நபி, தீபாவளி, சத் பூஜா, குருநானக் தேவ் ஜெயந்தி,  கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு உதவியாக இருக்கும். நிதிச்சுமை ஏதும் இல்லாமல் சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு உணவு தானியங்கள் எளிதாக கிடைப்பதால் அவர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். இந்த நலத்திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் அனைவருக்கும்  விலையில்லாமல் ஒவ்வொரு நபருக்கும் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. தற்போது மேலும் 3 மாதங்களுக்கு இந்த திட்டம் நீடிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு ரூ.44,762 கோடி கூடுதலாக செலவாகும். 7-ம்

பணியாளர்கள், பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர்களின் ஆண்டு கூட்டத்தில் அமைச்சர் உரை

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் இந்திய குடிமைப்பணி மற்றும் இதர அகில இந்திய பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப வகை செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டுள்ளார் இந்திய குடிமைப்பணி மற்றும்  இதர அகில இந்திய பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்புவதற்கு வகை செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு ஓய்வூதியம் துறை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டுள்ளார். பணியாளர்கள், பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை கவனிக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், நமது  நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் மத்திய பணி என்பது ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அகில இந்திய பணி அதிகாரி என்பவர் மாநில, மத்திய அரசுகளின் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்தார். நடப்பு ஆண்டில், குடிமைப்பணி தேர்வு மூலம் 180 ஐஏஎஸ் அதிகா

சர்வதேச அழைப்புகளுக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத தொலைத்தொடர்பு கட்டமைப்பு கண்டுபிடிப்பு

சர்வதேச அழைப்புகளுக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத தொலைத்தொடர்பு கட்டமைப்பை தொலைத்தொடர்புத் துறை கண்டுபிடித்துள்ளது இந்தியாவில் உள்ள உள்நாட்டு மொபைல் மற்றும் வயர்லைன் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச அழைப்பு வசதியை அளிப்பதற்காக சட்டவிரோதமாக இணையதளம் மூலம் தொலைத் தொடர்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதை தொலைத்தொடர்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதுபோன்ற சட்டவிரோதமான கட்டமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும். கடந்த 4 மாதங்களில் 30 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற, சட்டவிரோத தொலைத் தொடர்பு அமைப்புகள் இருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 18001104204/1963 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு  புகார் அளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவினர் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.

இந்திய வெளியுறவுப் பணி துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தார்கள்  இந்திய வெளியுறவுத் துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவினர்(2021 பிரிவு) இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்முவை சந்தித்தனர். அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், புதியதொரு தன்னம்பிக்கையுடன் உலக அரங்கில் இந்தியா தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், வெளியுறவுத் துறையில் உங்கள் பணிகளை தொடங்குவது மிகவும் உற்சாகமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்குவதாகவும், அண்மைக் காலங்களாக பிற நாடுகளுடனான இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளில் புதிய முயற்சிகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். உலகளாவிய பல்வேறு அமைப்புகளில் இந்தியா தீர்க்கமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் இந்தியாவின் தலைமைத்துவம் சவால்களற்றதாக உள்ளது. தெற்குப் பகுதிகளின் வளர்ச்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்குவதாக கூறினார். பொருளாதார செயல்திறன