முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் பலர் காட்டில் காவலை மீறிப் பொங்கிய கூட்டாஞ்சோறு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான  இராகுல் காந்தி தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் ஒரு தேசிய தலைவர் போல இல்லாமல்  பொதுமக்களை அணுகிப் பேசியுள்ளார்.  அடுமனைக் கடைகளில் தேனீர் குடித்தார் அதோடு கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட பலருடன்  ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்றவர், கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து சமையல் மூலம் காளான் பிரியாணி தயார் செய்து சாப்பிட்டது காணொலி மூலமாக சமூக வலைத்தளங்களில் நேற்றே வைரலான நிலையில் ஒரு z பிரிவு பாதுகாப்பில் உள்ள அகில இந்தியத் தலைவர் இப்படிக் கிராமத்தில் வீட்டு முறைப்படி செய்யப்படும் சமையலை வீடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவிடும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவினர், காளான் பிரியாணி உணவினை கரூர் அருகே அரவக்குறிச்சி ரோட்டில் ஒரு முருங்கைத் தோப்பில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ராகுல்காந்தி சென்று அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார். அவர் அந்த இடத்திற்கு செல்லும் போது மிகவும் ஆவலுடன் சென்றார். அந்தக் குழுவினரும் மகிழ்ச்சி பொங்க

அதே எழுட்சி கம்பீரமாக அதே கார் அதே கொடி பெங்களூரில் கலை கட்டிய தமிழக அரசியல் களம்

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை யிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன வி.கே சசிக்கலா நடராஜன்  முதலில் தனது சகோதரர் திவாகரன் மகனான ஜெயானந்த் கன்னங்களைக் கிள்ளி வாழ்த்துக்களை தெரிவித்தார் பிறகு ஜெயா தொலைக்காட்சி விவேக் ஜெயராமனை கட்டி அணைத்து கண்கலங்கியவர் பின் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனைத் தொட்டு ஆசீர்வதித்து இன்று வரை பொதுச்செயலாளர் அதிமுக என்பதால் கட்சிக் கொடி பொருத்தப்பட்ட வாகனத்தில் புறப்பட்டுத் தன் அரசியல் பிரவேசத்தை தொடங்கியதாகவே பல அரசியல் அறிவுசார் நண்பர்கள் கருத்தாகும்  ராஜமாதாவாகவே பலரும் வி.கே சசிகலா நடராஜனை பார்க்கும் நிலை முன்னாள் பிரதமர் தேவ கௌடா வின் ஹெப்பால் பண்ணை வீட்டில்  குடும்பத்தினருடன் தங்கவுள்ளார் , ஆறு மாநில முதல்வர்களின் வாழ்த்துக்களடங்கிய  பூங்கொத்தைப் பெற்றுக்கொண்ட பின் மருத்துவமனையிலிருந்து தன் அரசியல் பிரவேசத்தை விட்ட அதே வேகத்தில் துவங்கியுள்ளார். தமிழகத்தில் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது வேறுவகையில்  . தற்போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் பதிவு துவக்கத்திலேயே சும்மா அதிர்கிறது என்பது போலத்தான் தெரிகிறது.அதிமுகவில் சசிகலாவைச் சேர்த்து கொள்ளவோ,? அமமுக

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

பிரதமர் அலுவலகம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஜனவரி 22-ஆம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடுதான் நீடிக்கிறது, வேளாண் அமைச்சர் வழங்கிய திட்ட முன்மொழிவு தற்போதும் நீடிக்கிறது: பிரதமர் நாடாளுமன்றம் சுமுகமாக இயங்குவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 ஜனவரி 30 அன்று உரை நிகழ்த்தினார். மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அன்னாருக்கு மரியாதை செலுத்திய பிரதமர், அவரது கனவுகளை நனவாக்க நாம் பாடுபடவேண்டும் என்று கூறினார்.  அமெரிக்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை இன்று காலை அவமதிக்கப்பட்ட நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்த அவர், இதுபோன்ற வெறுப்பு மிகுந்த சூழல் நமது கிரகத்தில் வரவேற்புக்குரியது அல்ல என்று தெரிவித்தார். வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சினையை அரசு திறந்த மனதுடன் அணுகுவதாக பிரதமர் உறுதியளித்தார். கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடு தான் தற்போதும் நீடிக்கிறது

வாழ்நாளில் ஆயிரம் நிலவுகண்ட அபூர்வம் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சஹஸ்ரா சந்திரதனா பூஜா

ஆயிரம் நிலவு கண்ட அபூர்வம் தனது வாழ்நாளில்  'சஹஸ்ரா சந்திரதனா ' பூஜா டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் திருமதி சுவாமிக்கும்  2021 ஜனவரி 29 ஆம் நாள்  வெள்ளிக்கிழமை காலை புது டில்லியின் பெஜாவர் மடத்தில் நடைபெற்ற விழாவில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி வாழ்க்கையில் 82 ஆண்டுகளில், அவர் 1000 முழு நிலவுகளைப் பார்த்திருப்பார். ஹவன் மற்றும்  பூஜை மற்றும் யாகம் மற்றும் மந்திரங்கள் முழக்கப்பட்டது நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வி.எச்.எஸ் மகாராஷ்டிராவின் திருமதி. அருணா ஆச்சார்யா  மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கோடாட் கிராமத்தின் பொறுப்பாளராக உள்ளவர் இந்த ஏற்பாட்டைச் சிறப்பாகச்செய்தார்  டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அதை  ஏற்றுக்கொண்டார்.

தகவலைத் தெரிந்து கொள்வதைவிட நடத்தை மாற்றமே முக்கியம் --கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா

தகவலைத் தெரிந்து கொள்வதைவிட நடத்தை மாற்றமே முக்கியம் --கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா வலியுறுத்தல் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொதுமக்கள் எளிதில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்கின்றனர்.  சமூக ஊடகங்களும் தகவல்களை எளிதில் பரப்புகின்றன.  கொரோனாவைப் பற்றி தகவல் தெரியாத ஒரு நபர்கூட இருக்க முடியாது.  தகவல்களைத் தெரிவிப்பது, தகவலைத் தெரிந்து கொள்வது என்பது மாற்றத்திற்கான முதல் படிதான்.  மக்களிடம் நடத்தை மாற்றம் ஏற்படுவதே தேவையான கடைசி படி ஆகும்.  முகக் கவசத்தை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதால் எந்த நன்மையும் கிடையாது.  எனவே சமூகப் பணியாளர்கள் மற்றும் தொடர்பியல் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் மக்களிடம் நடத்தை மாற்றத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று கடலூர் கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா வலியுறுத்தினார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகம், கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து இன்று குள்ளஞ்சா

வி.கே.சசிக்கலா நடராஜன் நாளை காலை 10 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வெளி வருவார்

 வி.கே.சசிக்கலா நடராஜன் நாளை காலை 10 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வெளி வருவார் .  பின் பெங்களூரில் சிறு ஓய்விற்கு பின் பிப்ரவரி முதல் வாரம் தமிழகம் திரும்புவார் எனக் கூறப்படுகிறதுகடந்த. மூன்று  நாட்களாக ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது. மருத்துவமனை விதிமுறைகளின் படி, சசிகலா நடராஜனை தாராளமாக டிஸ்சார்ஜ் செய்யலாம். இந்நிலையில்  சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவரது டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுத்துள்ளனர். அதன்படி நாளை (ஜனவரி 31) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

குறைந்தபட்ச ஆதரவு விலைப் பட்டியலில், கூடுதலாக 14 வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்கள்: பழங்குடியின நலன் ர்

 பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் குறைந்தபட்ச ஆதரவு விலைப் பட்டியலில், கூடுதலாக 14 வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்கள்: பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் அறிவிப்பு கடந்த ஓர் ஆண்டாக முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருந்தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியால் பல தரப்பு மக்களின் வாழ்வாதாரம் குறிப்பாக பழங்குடி மக்களின் அன்றாட வாழ்வு பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அத்தகைய தருணத்தில் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய ரகப் பொருட்களை, குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமாக விற்பனை செய்யும் முறை அவர்களுக்கு மிகவும் பயனளித்தது. இதனைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 14 வன உற்பத்தி சிறிய ரகப் பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலைப்பட்டியலில் சேர்க்கும் வகையில் அதில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது. வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மாற்றம் குறித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மே 26 (கூடுதலாக 23 வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன)  மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கு கூடுதலாக தற்போது மேலும் சில பொருட்களுக்கான பரிந்துரைகள்

ரூ 274 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த ஒருவர் கைது

ரூ 274 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த ஒருவர் கைது ரூ 274 கோடி மதிப்பிலான போலி ரசீதுகளை வெளியிட்டதற்காகவும், சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனாக ரூ 22.12 கோடியை மோசடி செய்ததற்காகவும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்த 32 வயதான வரி ஆலோசகர் ஒருவரை சென்னை புறநகர் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கைது செய்துள்ளது. விரிவான விசாரணைக்கு பின்னரும், ஆதாரங்களை சேகரிப்பதற்காக பல முறை சோதனைகள் செய்த பின்பும் அவரை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கைது செய்துள்ளது. 2021 ஜனவரி 26 அன்று கைது செய்யப்பட்ட அவர், சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான நீதிபதி II முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பிற நபர்களின் கேஒய்சி ஆவணங்களை தவறாக பயன்படுத்தி அவரும் அவரது கூட்டாளிகள் சிலரும் ஜிஎஸ்டி பதிவுகளை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி நிறுவனங்களின் ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களையும் தயாரிப்பதற்கான வரி ஆலோசகராக கைது செய்யப்பட்ட நபர் செயல்பட்டுள்ளார். ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள

டில்லியில் நடைபெற்ற என்சிசி முகாமில், பிரதமர் உரையாற்றினார்

பிரதமர் அலுவலகம் டில்லியில் நடைபெற்ற என்சிசி முகாமில், பிரதமர்  உரையாற்றினார் டில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற, தேசிய மாணவர் படை முகாமில், பிரதமர் திரு நரேந்திர மோடி  2021 ஜனவரி 28 ஆம் தேதி உரையாற்றினார்.  பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர், அவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.

மாநில வக்பு வாரிய அதிகாரிகளுக்கான பயிற்சி : அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உரை

 சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் மாநில வக்பு வாரிய அதிகாரிகளுக்கான பயிற்சி : அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி உரையாற்றினார். வளர்ச்சியின் அலையை, வீழ்ச்சியின் தடுமாற்றத்தால் தடுத்த நிறுத்த முடியாது. கண்ணியத்துடனான வளர்ச்சி, பாகுபாடற்ற வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாடு புரட்சிகரமான  விளைவுகளை ஏற்படுத்தியதுடன் முதன்மைப் பிரிவு வளர்ச்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் சரிசமமான கூட்டாளியாக செயல்படுவதாக மத்திய சிறுபான்மை  நலத்துறை அமைச்சர் திருமுக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். இன்று, புதுதில்லியில் மாநில வக்பு வாரியங்களின் அதிகாரிகளுக்கு மத்திய வக்பு கவுன்சில் நடத்திய பயிற்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக நாடு முழுவதும் வக்பு சொத்துக்களின் மீது சமூகப் பொருளாதார, கல்வி நடவடிக்கைகள், திறன் மேம்பாட்டுக்காக மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பை உருவாக்கியிருப்பதாகக் கூறினார். வக்பு ஆவணங்கள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதன் வாயிலாக வக்பு கொள்ளை கும்பலின் பிடியிலிருந்து வக்பு சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று தெர

மாமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் தை தெப்ப உற்சவம்.

 'மதுரைச் சங்கம் வைத்து மாபாரதம் தமிழ்படித்து' என சின்னமனூர்ச் செப்புப்பட்டயம் கூறும் கூடல் மாநகர் மாமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் தை தெப்ப உற்சவம். https://www.publicjustice.page/2021/01/blog-post_790.html மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் தை தெப்ப உற்சவம்  தை மாதத் தெப்பத்திருவிழா ஆங்கில ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் ஸ்ரீ மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல பகுதியிலுள்ள மண்டபங்களில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். 8 ஆம் நாள் விழாவில் வலைவீசி அருளிய லீலைக்காக டி.பி.மெயின் சாலையிலுள்ள மண்டபத்திலும். 9 ஆம் நாள் சப்தாவர்ண சப்பரத்தில் நான்கு  சித்திரை வீதிகளிலும் வலம் வந்த காட்சி அழகு தனி. விழாவில் 11 ஆம் நாளான  புதன்கிழமை கதிரறுப்பு வைபவம்..........ஆஹா மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த பூமி அது அதன் மைப்பகுதியாம்  சிந்தாமணியில் நடைபெற்றது. அறுவடைசெய்த நெற்பயிருடன் சுந்தரேஸ்வர்-பிரியாவிடை, ஸ்ரீ மீனாட்சி அம்மனும்  பக்தர்களுக்கு அருள

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை நிறைவேற்றிய 5வது மாநிலம் ராஜஸ்தான்

நிதி அமைச்சகம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை நிறைவேற்றிய 5வது மாநிலம் ராஜஸ்தான் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை, கொண்டு வந்த நகர்ப்புற உள்ளாட்சி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் 5வது மாநிலமாக ராஜஸ்தான் இணைந்துள்ளது. இதனால், சீர்திருத்தம் தொடர்பான கூடுதல் கடன் பெறுவதற்கு ராஜஸ்தான் தகுதி பெற்றுள்ளது. வெளிச்சந்தையில் ராஜஸ்தான், ரூ.2,731 கோடி கூடுதலாக கடன் பெற, செலவினத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், தெலங்கானா ஆகியவை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. இதன் காரணமாக இந்த 5 மாநிலங்களும் மொத்தம் ரூ.10,212 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை வலுப்படுத்தவும், மக்களுக்கு சிறப்பான பொது சுகாதார சேவைகளையும் வழங்குவதற்காக இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.  பொருளாதார ரீதியாக புத்துயிர் பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால்,  நல்ல உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த

மின்சார வாகனங்களுக்கான மாற்று மின்கல தொழில்நுட்பத்துக்கு மாற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் : நிதின் கட்கரி அழைப்பு

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மின்சார வாகனங்களுக்கான மாற்று மின்கல தொழில்நுட்பத்துக்கு மாற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் : நிதின் கட்கரி அழைப்பு மின்சார வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், மின்கல தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான முன்னணி நிறுவனங்கள் உருவாக வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.  மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில், லித்தியம் பயன்படுத்தப்படுகிறது.  இதன் இருப்புகளை கட்டுப்பாட்டில் வைப்பதில் நாம்  தற்போது சவால்களை எதிர்கொள்கிறோம். அதனால், மின்சார வாகனங்கள் துறை, வரும் ஆண்டுகளில் மாற்று தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும் என மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையில் உள்ள உலோகம் - காற்று, உலோக - அயனி மற்றும் இதர ஆற்றல் மிக்க தொழில்நுட்பங்களாக இது இருக்கலாம். . போக்குவரத்துத் துறையில் தற்சார்பு இந்தியா இலக்கை நாம் அடைய வேண்டும் என கூறியுள்ள திரு நிதின் கட்கரி, சிறப்பு நிறுவனங்கள், தொழில்நுறை, விஞ்ஞானிகள், பொற

தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட அசாமின் பழமையான காதி நிறுவனத்தை புதுப்பிப்பு

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட அசாமின் பழமையான காதி நிறுவனத்தை புதுப்பிப்பு – கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் அசாம் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடோ தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட பழமையான காதி நிறுவனத்தை, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மீண்டும் புதுப்பித்து, செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.  அசாம் மாநிலத்தின் பக்‌ஷா மாவட்டத்தில் உள்ள காதி தொழிற் கூடத்தை, போடோ தீவிரவாதிகள் கடந்த 1989ம் ஆண்டு தீ வைத்து எரித்தனர்.  அதை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் பட்டு நெசவு மையமாக புதுப்பித்துள்ளது. இங்கு 15 பெண் கலைஞர்கள் மற்றும் 5 இதர ஊழியர்களுடன் பட்டு நெசவுப் பணிகள், பிப்ரவரி 2ம் வாரத்தில்  மீண்டும் தொடங்கவுள்ளன. இது குறித்து கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா கூறுகையில், கதர் தொழிற் கூடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. காதி பணிகள் மீண்டும் தொடங்குவது, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்’’ என்றார்.  இந்த கதர் தொழிற்கூடம், கவுகாத்தியிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. கதர் கி

நிலக்கரி விற்பனைச் சுரங்கங்களின் ஏலத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பு

நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி விற்பனைச் சுரங்கங்களின் ஏலத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பு நிலக்கரி விற்பனைக்காக நான்கு நிலக்கரி சுரங்கங்களின் (செண்டிப்பாடா & செண்டிப்பாடா-II, குரலோய் (ஏ) வடக்கு மற்றும் செரேகர்ஹா) ஏல நடைமுறை மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட முகமையால் 2020 டிசம்பர் 9 அன்று தொடங்கப்பட்டது. முதல் தடவை இரண்டுக்கும் குறைவான தகுதியுடைய ஒப்பந்தப்புள்ளிகளே வந்ததால் இரண்டாம் தடவையாக ஏல நடைமுறை தொடங்கப்பட்டது. நிலக்கரி அமைச்சகத்தால் 2020 ஜூன் 1 அன்று வெளியிடப்பட்ட அலுவலக அறிவிப்பு எண் CBA2-13011/2/2020-CBA2இன் பத்தி 2.2(b)-இன் படி,  ரத்து செய்யப்பட்ட முதல் ஏல முயற்சியின் அதே விதிமுறைகளுடன் இரண்டாம் ஏல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், முதல் ஏல நடவடிக்கையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தகுதியுடைய ஏலதாரரின் அதிகபட்ச கேட்பு தொகை இரண்டாம் ஏலத்தின் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 2021 ஜனவரி 27 ஆகும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 2021 ஜனவரி 28

மகாத்மாவின் படைப்புகள் வருங்கால சந்ததியினரை நீதி, நேர்மையுடன் செயல்படத் தூண்டும்

மகா த்மா காந்தியின் தூய்மைக்கொள்கை தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாக கொண்டது மகாத்மாவின் படைப்புகள் வருங்கால சந்ததியினரை நீதி, நேர்மையுடன் செயல்படத் தூண்டும் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியாவை மரியாதையும், மதிப்பும் மிக்க நாடாக உயர்த்தவும் நம்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும் காந்திய வழியில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிகர்நிலை பல்கலைக்கழகமான காந்திகிராம் ஊரக நிறுவனத்தின் சமூக அறிவியல் பிரிவின் தலைவரும், காந்திய படிப்புகளுக்கான மையத்தின் பேராசிரியருமான திரு எம் வில்லியம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து ‘இருவார கால தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தியாகிகள் தினம்' என்ற தலைப்பில் நடத்திய இணையதள கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். ஒரு நாடு சிறப்பானதாகக் கருதப்படுவதற்கு சில அலகுகள் உள்ளன என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டுமே இந்த நிலையை வழங்க முடியாது என்றும் அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டுமே இளைஞர்கள் சார்ந