முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விடுதலையின் அம்ருத் மகோத்சவம புகைப்பட கண்காட்சி

 ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவம புகைப்பட கண்காட்சி நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ புகைப்பட கண்காட்சி கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி (KAHE) வளாகத்தில், 2021 மார்ச் 29 ஆம் தேதி முதல், மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின், கோவை மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது. கற்பகம் உயர்கல்வி அகாடமியின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சுடலைமுத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, அமைதியின் அடையாளமான புறாவை நேற்று பறக்கவிட்டார். மேலும், புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, வாக்களித்தலின் முக்கியத்துவம் குறித்த கையெழுத்து பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார். பதிவாளர் டாக்டர் எம்.பழனிச்சாமி சுதந்திரத்தின் நன்மைகள் குறித்து பேசினார். கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் டீன் டாக்டர் என்.வி.பாலாஜி, இந்த கண்காட்சியை பாராட்டி பேசினார். கூட்டத்தில் பேசிய தலைமை விருந்தினர், டாக்டர் எஸ்.சுடலைமுத்து, சமூகத்தில் சுதந்திரம் முக்கிய ப

ரூ. 28.26 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல். ஒருவர் கைது

 ரூ. 28.26 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல். ஒருவர் கைது உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில்  துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஈகே-544 விமானத்தில் சென்னை வந்த திருச்சூரைச் சேர்ந்த முகமது ஷெகில் என்பவர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 709 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 28.26 லட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் திரு எச்.டி. தேவகவுடாவுடன் பிரதமர் பேசினார்

பிரதமர் அலுவலகம் முன்னாள் பிரதமர் திரு எச்.டி. தேவகவுடாவுடன் பிரதமர் பேசினார் முன்னாள் பிரதமர் திரு எச்.டி தேவகவுடாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். அவருடைய மற்றும் அவரது மனைவியின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.  சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘முன்னாள் பிரதமர் திரு எச்.டி.தேவகவுடாவுடன் பேசினேன். அவரைப் பற்றியும், அவரது மனைவியின் உடல்நலம் குறித்தும் விசாரித்தேன். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடல் பகுதியில் ஹெராயின், ஆயுதங்கள் கடத்திய இலங்கை படகுடன்: 6 பேர் கைது

இந்திய கடல் பகுதியில் ஹெராயின், ஆயுதங்கள் கடத்திய இலங்கை படகு சிக்கியது: 6 பேர் சிறையில் அடைப்பு கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைக்கு அப்பால், ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்திச் சென்ற இலங்கை படகு பிடிபட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உளவுத் தகவல் அடிப்படையில் கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைக்கு அப்பால், ‘ரவிஹன்சி’ என்ற பெயரில் சென்ற இலங்கை படகை இந்திய கடலோரக் காவல் படை மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இம்மாதம் 25ம் தேதியன்று இடைமறித்து விழிஞ்சம் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அதில் சோதனையிட்டபோது, 300.323 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.-47 துப்பாக்கிகள், 1000 9 எம்.எம் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படகின் தண்ணீர் தொட்டிக்குள், 301 பாக்கெட்டுகளில் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதில் பறக்கும் குதிரை சின்னம் இருந்தது. இவற்றோடு போலி ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்களும், ஹெராயினும் ஈரானின் சாபகர் துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இலங்கை படகிடம் ஒப்படைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்

உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்திய துறை திட்டமான ' உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு' பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய இயற்கை வளங்களுக்கு ஏற்ற சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்குவதற்கும், சர்வதேச சந்தைகளில் இந்திய உணவுப் பொருட்களை ஆதரிப்பதற்கும் ரூ 10,900 கோடி மதிப்பிலான இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நோக்கங்கள் குறிப்பிட்ட, குறைந்தபட்ச விற்பனையுடன் கூடிய உணவு தயாரிப்பு நிறுவனங்களை ஆதரித்து, அவற்றின் திறனை அதிகரிப்பதற்காக குறைந்தபட்ச மற்றும் குறிப்பிட்ட முதலீட்டை செய்தல், வலிமை மிகுந்த இந்திய வணிகப்பெயர்களை உருவாக்குவதற்காக வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்களை பிரபலப்படுத்துதல் சர்வதேச உணவு உற்பத்தி வீரர்களை உருவாக்குவதற்கு ஆதரவளித்தல் குறிப்பிட்ட இந்திய உணவு பொருட்களை சர்வதேச அளவில் தெரியப்படுத்துவதற்கான வலுவூட்டல் நடவடிக்கைகள், சர்வதேச சந்தைகளில் அதிகளவில் ஏற்றுக்கொள்ளும் தன்மையை உருவாக்குதல்

கொவிட் தடுப்புமருந்து தயார் நிலை குறித்து மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு

 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட் தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கை மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தயார் நிலை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில  இயக்குநர்கள் மற்றும் மாநில தடுப்பு மருந்து அலுவலர்கள் ஆகியோருடன் காணொலி மூலம் உயர்மட்ட கூட்டம் ஒன்றை மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் மற்றும் தேசிய சுகாதார முகமையின் தலைமை செயல் அதிகாரியும் கொவிட் தடுப்பு மருந்து வழங்கலுக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவருமான டாக்டர் ஆர்எஸ் ஷர்மா இன்று நடத்தினார். நாடு முழுவதும் நடைபெற்று வரும் தடுப்பு மருந்து வழங்கல் செயல்பாடுகளின் நிலைமை, வேகம் மற்றும் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காகவும், 2021 ஏப்ரல் முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ள  நிலையில் அதுகுறித்த தயார்நிலை குறித்தும் விவாதிப்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. கொவிட் பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வரும் மாவட்டங்களில் குறைவாக தடுப்பூசி போடப்படும

சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசு மதுபான விற்பனைக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை .

சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசு மதுபான விற்பனைக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை . உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 6 ஆம் தேதி வரையில் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் விதிகளின்படி மதுக் கடைகள், குடிகார ரன்கள் வரும் பார்கள், தமிழ்நாடு ஹோட்டல் யூனிட் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யவோ, பிற இடங்களுக்கு எடுத்து செல்லவோ கூடாது. கடைகள் கட்டாயம் மூடி இருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் மதுக் கடைகள் திறந்து இருப்பது குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உயிர்த்தியாகம் செய்த 5000 வெள்ளலூர் நாட்டு வீரர்களுக்கு நினைவுச் சின்னம்்அமமுக அறிவிப்பு

இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போர் வரி கொடா இயக்கம் 1764 ஆம் ஆண்டு  வெள்ளையர்களுக்கு (கேப்டன் ரூம்லே) எதிராகப் போராடி உயிர்த்தியாகம் செய்த 5000 வெள்ளலூர் நாட்டு  வீரர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென டிடிவி தினகரன் அறிவிப்பு....அதன் வரலாற்று நிகழ்வைக் காண்போம்.அலெக்ஸாண்டர்ஸ் கிழக்கு இந்தியா மற்றும் காலனித்துவ இதழ் எனும்  ஆங்கிலப் புத்தகம் கிபி 1835 ஆம் ஆண்டில் இலண்டனில் வெளியிடப்பட்டது. இப் புத்தகத்தில் பக்கம் 220 ல் கேப்டன் ரூம்லே எனும் கிழக்கிந்திய கும்பெனி ஆங்கிலேயத் தளபதியால் கொல்லப்பட்ட தன்னாடசி வெள்ளளூர் நாட்டுக் கள்ளர்களைப் பற்றிய  தகவல் ஒரளவுக்கு இங்கு விரிவாக உள்ளது. நவாப் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பிய யூசுப்கான் கிபி 1764 ல் கொல்லப்பட்டான்.  பின் மதுரை நவாபின் கட்டுப்பாட்டில் வந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் மற்ற பாளையக்காரர்களை நவாப் அடக்கினான். இந்த 5 வருடங்களில்(1764 முதல் 1769 வரை) கள்ளர்கள் நவாபின் மேலாண்மையை ஏற்காமல், தன்னாட்சி புரிந்தனர். இதனால் கள்ளர்களை ஒடுக்க எண்ணிய நவாப் முதலில் மேலூரைக் குறி வைத்தான். தளபதி கேப்டன் ரூம்லே தலைமையில்

சீமான்்மணல் மாஃபியா வைகுண்ட ராஜன் பினாமியா பலருக்கு எழும் வினா இது

சீமான் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், ‘அவருடைய அசையும் சொத்தும் 31,06,500 ரூபாயும், அசையா சொத்து ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவிக்கு அசையும் சொத்து 63,25,031 ரூபாயும், அசையா சொத்து 25,30,000 ரூபாயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2019-2020-ஆம் ஆண்டு வருமானம் 1,000 ரூபாய் மட்டுமே என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். இவர்      இனவாதம் பேசுகிறார், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறார், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கிறார், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கிறார், பா.ஜ.க.வின் பி டீமாகச் செயல்படுகிறார்’... போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுகள் மாற்றுக்கட்சி யினராலும், அவரது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களாலும் இவர்மீது சுமத்தப்படுகின்றன. சீமான் 1966 ல் சிவகங்கை மாவட்ட, இளையான்குடி வட்டத்தில் அரனையூரில் பிறந்தார்.  செந்தமிழன் நாடார் அன்னம்மாள் மகனாவர்.பொருளாதார இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். காலம்சென்ற முன்னாள் சபாநாயகர் கா காளிமுத்துவுக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் மகளான

திமுக எம்.பி. ஏ.ராஜாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பாக திமுக எம்.பி. ஏ.ராஜாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கிறது; இன்று மாலை 6 மணிக்குள் திமுக ஏ.ராஜா தனது கருத்துக்களை விளக்குமாறு தேர்தல் ஆணைய நோட்டீஸ் கேட்கிறது

தேர்தலில் நிலை நிற்க அரசியல் களமாடும் அமமுக

நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் .          இலஞ்சத்தை நம்பும்  அரசியல்வாதிகள், ஊழலுக்கு உதவும்  அதிகாரிகள் என்பதாக தமிழக அரசு நிர்வாகம் அதகளப்பட்டுள்ளது..    அதிகாரமென்பதே பொதுப் பணத்தை சூறையாடக் கிடைத்த வாய்ப்பாகக் கருதும் மன நிலை சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது. அரசியல்வாதிகளுக்குத் தோதாக சட்ட,திட்டங்களை வளைத்து சதி செய்து சம்பாதிக்கும் வழிமுறைகளை செய்வதற்கென்றே அதிகாரிகள் கூட்டம் காத்துக் கிடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் நூதனமாக நிகழ்த்தப்பட்டு வரும் ஊழல் சதிகள் தான் அதற்கு சான்று. மணல் கொள்ளை அடித்து அதில் நடக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி 234 தொகுதிகளில் வேட்பாளர் நிறுத்தவும் அந்த ஒருவர் பின் நிற்பதே ஒரு ஊழல் இது இந்த மக்களால் அறியப்படவில்லை. தற்போது  பத்துப் பதினைந்‌து.      நாளாக கருத்துக் கணிப்புகளை வெளியீடுகிறார்கள.                        அவரவர் சௌகரியத்திற்கு ஏற்றாற் போல் வாங்கிய பணத்திற்க்கு  வஞ்சமில்லாமல்  ஒளிபரப்பு செய்து மக்களை நன்றாகவே குழப்பி விட்டுருக்க.. சரி அதனால் நமக்கென்னவென்று நாம் விட்டுப் போக முடியாது உண்மை உரைக்க வேண்டு

ஹிந்தியில் பாடல் ஒலிக்கக் கோலாட்டம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி,

ஹிந்தியில் பாடல் ஒலிக்கக்  கோலாட்டம்  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, கோயமுத்தூர் தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கோலாட்டம் ஆடி வட இந்திய ஸ்டைலில் அசத்தியுள்ளார். இது தமிழக மக்கள் அரசியலில் புதுமையானதாகும்  கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் தன்னை பெரிய தலைவர் போல காட்டிய விதம் நடிகர் கமல்ஹாசன் திமுக அமமுக உள்ளிட்ட கட்சிகளைவிட குறைந்த வாக்குகள் தான் அவர் பெற முடியும் என்ற நிலையில் அவர் அதீதமான கற்பனை காரணமாக தனது நிலையை உனராமல்  போட்டியிட திமுகவை விட      வானதி சீனிவாசனை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்பதற்காக மத்திய பாஜக தலைவர்கள் கோவை நோக்கி வரிசை கட்டிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். வானதி சீனிவாசனும் தனது பிரச்சாரத்தை அடுத்தடுத்த நிலை மாற்றியுள்ளார். மாட்டு வண்டி ஓட்டிச் செல்வது, பேட்மிட்டன் ஆடுவது, கீரைக்காரிகளுடன் செல்பி எடுப்பது என்று மக்களோடு மக்களாக கலந்து பழக்கம் உள்ளது போல் தற்போது காட்ட வாக்கு சேகரித்து வருகிற நிலையில்தான், கோவை தெற்கு தொகுதிக்கு மத்திய அமைச்சர் ஸ

ஸ்ரீ ஹரி கோவிலுக்கு வருகை புரிந்த பிரதமர்

 பிரதமர் அலுவலகம்  ஸ்ரீ ஹரி கோவிலுக்கு வருகை புரிந்த பிரதமர் ஒரகண்டியில் சமுதாய வரவேற்பை ஏற்றுக் கொண்டார் வங்கதேசத்தில் தமது இரண்டாவது நாள் பயணத்தின் போது ஒரகண்டியில் உள்ள ஹரி மந்திர் என்றழைக்கப்படும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மதிப்பிற்குரிய தாகூர் குடும்பத்தின் வாரிசுகளுடன் உரையாடினார். ஸ்ரீ ஸ்ரீ ஹரி சந்த் தாகூர் அவர்கள் சமூக சீர்திருத்தங்களுக்காக தமது புனிதமான செய்தியை வழங்கிய ஒரகண்டியில் உள்ள மத்வா சமூகத்தின் பிரதிநிதிகளோடு பிரதமர் உரையாடினார். தங்களது வளர்ச்ச்சியின் மூலமாக உலகத்தின் மேம்பாட்டை காண இந்தியா மற்றும் வங்கதேசம் விரும்புவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். நிலையற்றத்தன்மை, பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மைக்கு பதிலாக நிலைத்தன்மை, அன்பு மற்றும் அமைதியை இரு நாடுகளும் விரும்புவதாக கூறிய அவர், இதே மாண்புகளை தான் ஸ்ரீ ஸ்ரீ ஹரி சந்த் தாகூர் அவர்களும் வழங்கினார் என்றார். அனைவருடன் இணைந்து அனைவருக்கான வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறதென்றும், இதில் வங்கதேசம் சகபயணி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அதே சமயம், வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான