தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் கைதால் கலவரமும், இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பும்.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கில் ஜூலை 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்குப் போட்டியாக ஆளும் கட்சியினரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். ஜேக்கப் ஜூமா அதிபராகப் பதவி வகித்தபோது, 'இந்தியர்களுக்கு நாட்டைத் தாரை வார்த்து விட்டனரெனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கலவரத்தில் இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாகவும். ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை ரூபாய் .512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தினேன். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா, டில்லியில் தென்னாப்பிரிக்கத் தூதர் ஜோயலைச் சந்தித்து, கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
கருத்துகள்