மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையராக திருமிகு சி அமுதா பொறுப்பேற்றார்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மண்டல அலுவலகம், சென்னை வடக்கின் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர், நிலை 1, ஆக திருமிகு சி அமுதா பொறுப்பேற்றார்.
1999-ம் ஆண்டு உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையராக அவர் பணியில் சேர்ந்தார். கோயம்புத்தூர், தாம்பரம், சேலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மண்டல அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
தற்போதைய பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, பெங்களூருவில் உள்ள மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர், நிலை 1, ஆக அவர் பணியாற்றி வந்தார். மேற்கண்ட தகவல்களை செய்திக்குறிப்பு ஒன்றில் திரு பிரணித் ஜோஷி, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் II, மண்டல அலுவலகம், சென்னை வடக்கு, தெரிவித்துள்ளார்.
கருத்துகள்