முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரனுக்கு மரணமில்லை வீரன் அழகுமுத்துக்கோன் சேர்வையின் வீர வரலாற்றுப் பார்வை

"வரப்புயர நீர் உயரும்                                நீர் உயர நெல் உயரும்                            நெல் உயரக் குடி உயரும்                          குடி உயரக் கோல் உயரும்                   கோல் உயரக் கோன் உயர்வான்.." இங்கு கோன் என்பது அரசன்.தமிழ் மூதாட்டி  ஒளவையார் சோழ அரசனுடைய அவைக்களத்தில் அமர்ந்திருந்தார். வேறு பல புலவர்களும் அங்கே இருந்தார்கள் அப்பொழுது புலவர்கள் எல்லோரும் சோழ, மன்னனைப் பல படியாக வாழ்த்தினார்கள்; பாட்டாலும் உரையாலும் விரிவாக வாழ்த்திப் பாராட்டினார்கள. கடைசியில் ஒளவையார் வாய் திறந்தார்; "வரப்புயர' என்று சுருக்கமாகச் சொல்லி விட்டுச் சும்மா இருந்தார். 'இவ்வளவுதானா? என்ற எண்ணத்தோடு எல்லோரும் அவர் முகத்தையே நோக்கினார்கள், அவர்களுடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்த ஒளவையார், "நான் சொன்ன வாழ்த்துச் சொல்லளவில் சுருக்கமாக இருந் தாலும், பொருளளவில் விரிவானது. வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயர்வான்' என்று விளக்கம் கூறவே, யாவரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்: இப்படி ஒரு வரலாறு வழங்கி வருகிறது.,

தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறிய விளக்கத்தை அப்படியே சொல்லும் பாடலொன்று சிறுபஞ்ச மூலத்திலிருக்கிறது"  அழகு" என்று சொல்லும்போது, இவை வனப்பு அல்ல. என்று ஐந்து வனப்புகளைச் சொல்கிறார்.

"மயிர்வனப்பும், கண்கவரும்       மார்பின் வனப்பும்,           உகிர்வனப்பும், காதின் வனப்பும்,-       செயிர்தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பு அல்ல; நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு". -அதுபோலவே வரலாறு எப்போதும் மாறாது அது பதிவு செய்வதில் வேண்டுமானால் ஆசிரியரின் தவறாகும். உண்மை வரலாறு எப்போதும் மாறாது மாற்றவும் முடியாது..           

 வீரன் அழகுமுத்துக்கோன் சேர்வை (1710 ஆம் ஆண்டு முதல் 1759 ஆம் ஆண்டு வரை) திருநெல்வேலி ஜில்லா கட்டாலங்குளம் பகுதியில் எட்டயபுரம் பாளையக்கார நாயக்கர் ஜமீனின் சிற்றரசராக இருந்தவர். தற்போது

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் தமிழ்க் அரசால் 1995 க்குப் பிறகு உருவாக்கப்பட்டு அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அதன் பின்னர் ஆண்டு தோறும் ஜீலை மாதம் 11 ஆம் தேதி அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2012 ஆம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்திய அரசு தபால் தலை  வெளியிட்டது


. இந்த ஆண்டு நேற்று நடந்த நிகழ்வு வீரர்  அழகுமுத்துக்கோன்  311 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரிலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், சட்டமன்றஉறுப்பினர்கள் பரந்தாமன், நீலமேகம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். கட்டாலங்குளத்திலுள்ள வீரன் அழகு முத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பாஜகவின் சட்டமன்ற கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்              வீரன் அழகுமுத்துக்கோன் சேர்வை வீர வரலாற்றுப்







பக்கம்

:- அழகுமுத்துக்கோன் சேர்வை ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் குறுநில மன்னரின் தளபதி பிரதானியாக இருந்தவர்.  வீரர் அழகுமுத்துக் கோன் சேர்வைக்காரரின் தந்தை   கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை,

மதுரையை ஆண்ட விஜயநகர பேரரசின் வழிவந்த நாயக்க மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கரிடம் ஒரு செப்பும் பட்டயம் மூலம் உரிமை பெற்று சிற்றரசராக அரசாண்டார்.












மதுரை பனையூர் கான்சாகிப்பாக மாறிய  மருதநாயகம் பிள்ளை யூசுப்கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டதில் அழகுமுத்து கோன் சேர்வைக்காரர் மற்றும் ஐந்து உப படைத்தளபதிகளும் பீரங்கியின் முன்னால் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வீரனுக்கு சாவு ஏது ? அதுவே வரலாறு.

பெரிய வீரப்ப நாயக்கர் எழுதி வழங்கிய செப்புப் பட்டயத்ததில் இடம்பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்கள் விஜயநகரப் பேரரசின் கீழ் உள்ள நாயக்க மன்னர்கள் அரசாட்சி செய்த பகுதியில் வழங்கும் ஒரு கட்டியம் கூறும் வார்த்தைப் பிரயோகம் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சேர்வையின் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். அவர் பிறந்த ஊரில் வேறு சமூகத்தினர் இல்லை.

டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890 ஆம் ஆண்டு எழுதிய 'Ettayapuram past and present' என்ற ஏடு எட்டையபுரம் ஜமீன் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை

எட்டயபுரம் சமஸ்தானத்தின் உரிமைக்காகப் போராடிய வீரன் அழகுமுத்துக் கோன் சேர்வையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினியப்படை, கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.

அவர் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு  ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று ஆங்கில கிழக்கிந்தியக் கும்பினிப்படை எக்காளமிட்டுச் சுற்றி வந்தது. `ம்’ என்ற உத்தரவு வந்தால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோன் சேர்வையுமும் அவரது உப வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை மனம் கலங்கியது.

 “மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை. உங்கள் உப பாளையம் வரி கொடுக்கச் சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” என்று ஆங்கில கிழக்கிந்தியக் கும்பினிப்படை மிரட்ட ஆனால்     “தங்கள் சமஸ்தானத்தின் மானத்துக்காக மரணத்தை ஏற்க நாங்கள் தயார் ” என்ற வீரன் அழகுமுத்துக்கோன் சேர்வை வார்த்தையில்

ஆத்திரம் கொண்ட. இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்கள் அவர் கண்முன் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோன் சேர்வையையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் உத்தரவு வர முழங்கியதில் வீரர்கள் உடல்கள் வெடித்துச் சிதறின.

வீரன் அழகுமுத்துக் கோன் சேர்வை தனது பாளையத்தின் ஜமீன் மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆங்கில அன்னிய சக்திகளுக்கு எதிராக  முழக்கமிட்ட வீரனை வீர வணக்கத்துடன் இன்று நினைவு கூறுகிறோம்  வீரன் அழகுமுத்துக் கோன் சேர்வையின் கொடி வழி மூதாதையர்களாக  11 ஆம் நூற்றாண்டு காலத்தில் சோழமண்டலத் தளபதி உத்தம சோழ கோன்  மிலாடுடையார் எனவும் செவிவழிச்  செய்தி உள்ளது. சோழனின் தளபதிகளான இவர்கள்  குற்றாலத்திற்கு அருகே குடியமர்த்தப்பட்டுளனர். இதன் பின்பு நாயக்க மன்னர்கள் ஆட்சியில் எட்டயபுரம் ஜமீன் மூலம்   கட்டாலங்குளம் மற்றும் ஊற்றுமலை பாளையப்பகுதியில சென்று உப பாளையம் அமைத்தனர். இதில் ஊற்றுமலை பாளையக்கரர்  மருதப்பத் தேவர். அழகுமுத்துவின் மூதாதயர்கள் பாண்டியர்களின் கீழ் சிற்றரசர்களாகவும் பின்பு திருமலை நாயக்கர் காலத்தில்  கட்டாலங்குளம் திசை காவலர்களானார்களாகவும். பின்பு எட்டயபுரம் ஜமீனை ஆண்டு வந்த எட்டப்ப நாயக்கருக்கு தம்பதிகளாகவும் பனியாற்றியமைக்காக இவர்களுக்கு சேர்வைக்காரர் எனப் பட்டமளித்து கௌரவப்படுத்தினர்.வீரன் அழகுமுத்துக் கோன் சேர்வைக்காரருக்கு மதுரையை ஆண்ட கிருஷ்னப்ப நாயக்கர் தந்த செப்பேட்டில் 

காசியப்ப கோத்திர கிருஷ்னப்ப நாயக்கர் என்றும் நாயக்கர் குலத்தையும் கோபல வம்ச கிருஷன கோத்திரம்

என்ற வரிகள் திருமலை நாயக்க மன்னர் தமது தளபதிகளுக்கும் பிற பாளையங்களுக்கும் தந்த செப்பேடுகள் அனைத்திலும்

 கோபால வம்சம் கிருஷன கோத்திரம் என இடம்பெறுவது ஒரு கட்டியம் கூறும் சம்பிரதாயம் ஆகும் அழகுமுத்துக் கோன் சேர்வை வைணவரே (கோபால வம்சம்  கிருஷ்ன கோத்திரம்)  அல்ல. கோபால வம்சம் என்பது வேளிர் போன்ற குறுநில மன்னரையும்,தளபதிகளையும் குறிக்கும். சக்கரவர்த்திகளைக் குறிக்க ரவிகுலம்,சந்திரகுலம்,காசியப்ப கோத்திரம்

போன்ற சொல்லைப் பயன்படுத்துவர். எட்டயபுரம் "ஃபாஸ்ட் அண்ட் பிரசண்ட்" என்ற ஆங்கில நூலை டபிள்யு. இ. கணபதி பிள்ளை எழுதியுள்ளார். அதிலும் வம்சமணி தீபிகையில் கூறியுள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது. இந்த நூல் தான் தற்பொழுது அழகுமுத்துக் கோன் சேர்வைக்காரர் கான்சாகிப்பை மருதநாயகம் பிள்ளையை எதிர்த்துப் போர் புரிந்தார் என்று சான்று காட்டுவதற்குச் சிறந்த அடிப்படை ஆதாரம் கொண்ட நூலாக தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்திலுள்ளது. அந்த நூலில் அரசர் கொடுத்த பட்டயம் பற்றியும் தகவல் உள்ளது. அதிலும் வீரன் அழகுமுத்துக் கோன் சேர்வைக்காரன் என்று தான் உள்ளது

1932 ஆம் ஆண்டு அழகுமுத்து சேர்வை வாரிசுதாரர்கள், அவர்களின் கார்டியன் பாக்கியத்தாய் அம்மாள் மூலம் தனது ஜமீன் சொத்துக்களைப் பாகவிஸ்தி மூலம் பெறுகிறார்கள். சொத்தைப் பெற்றவர்களாக அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரர் இந்து ராயர். சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் இவர்கள் இருவரின் மூத்த மகன்களுக்கு தனது இரண்டு மகள்களை பெண் கொடுத்த அப்பாவு அய்யா சேர்வைக்காரர் என்றும். பத்திரத்தில் சாட்சியாகவும் ஜமீன் திவான் (மேனேஜர்) கவும் வருகிறார். அந்த இரண்டு வாரிசுகள் தான் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுகள், தற்போதும் அதன் கொடி வழி வாழ்ந்து வருகின்றனர்.

மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆட்சித் தலைவர்களுக்கும் ஆதரங்களோடு பலரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் போது இந்திய அரசால் (எஸ்டேட் அபாலியேசன் ஆக்ட்) படி நஷ்ட ஈடு பெற்றவர்களின் சான்றாவணம் இன்றும் தமிழ்நாடு அரசு ஆவணங்கள் காப்பகம் மற்றும் லேன்ட்செட்டில்மென்ட் அலுவலகத்திலுள்ளது. அதில் அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரனின் புத்திரர் காசிச்சாமி சேர்வைக்காரர் (சிவத்தசாமி அவர்களின் தந்தை) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் மற்றும் அவர்களின் புதல்வர்கள்:- சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் சுந்தரராஜ சேர்வைக்காரர் வாரிசுதாரர் லக்ஷ்மிராஜா  துரைராஜா


சேர்வைக்காரர் பால்துரை சேர்வைக்காரர் செல்லச்சாமி சேர்வைக்காரர் எனவுள்ளது. ஆனால்     தற்போது பலர் வரலாறு பதிவு செய்வதில் திரிபு அதிகம். மன்னர் காலத்தில் வரலாறு மாற்றம் செய்தால் பொய் உறைந்த குற்றப்படி மன்னர் தண்டனை தருவார் ஆனால் மக்கள் ஆட்சியில் உள்ளது பேச்சு சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் பலரை பல்வாறு மாற்றிப் பேச எழுத வைக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த