சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டம் அம்மம்பாளையம் வெங்கடாசலம், (வயது 63)
1983 ஆம் ஆண்டில் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி வனத்துறையில் பணிபுரிந்தார் பின்னர் சுற்றுச்சூழல் துறை இயக்குனராக பணி செய்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2019 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டவர், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த காரணமாக இவருக்குச் சொந்தமான சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட, ஐந்து இடங்களில் செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. , வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக காலனியில் உள்ள வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேளச்சேரி போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். (டிசம்பர்.02) தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்