2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வியூக ஆலோசகராக சோனியாவை அணுகியுள்ளார் பிரசாந்த் கிஷோர்
சோனியாவுடன் அவர் 3 நாட்கள் நடத்திய தொடர் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் அக்கட்சியின் பல்வேறு குற்றங்களையும் விவரித்துள்ளார் . அதாவது 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டியதும் தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டு வரத் தயாரென்றும் கூறிய நிலையில் பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மக்களுக்கு புதிய காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டும்.
அதன் மதிப்புகள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்தல்.
உரிமை உணர்வு மற்றும் முகஸ்துதியை அழித்தல்.
கூட்டணிப் பிரச்சனையைச் சரி செய்தல்.
வாரிசு அரசியலைத் தடுக்க, ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் பொருப்பாளராக இருக்க வேண்டும்.
அனைத்து மட்டங்களிலும் தேர்தல் மூலம் நிறுவன அமைப்புகளை மறுசீரமைத்தல்.
காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உட்பட அனைத்து பதவிகளுக்கும் நிலையான கால, நிலையான பதவிக்காலம்.
15,000 அடிமட்டத் தலைவர்களைக் கண்டறிந்து அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துங்கள் மற்றும் இந்தியா முழுவதும் ஒரு கோடி காங்கிரஸ் தொண்டர்களை களப்பணியில் ஈடுபடச் செய்தல்.
200 க்கும் மேற்பட்ட ஒத்த எண்ணம் கொண்ட இன்ஃப்ளூயின்சர்கள், ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஒருங்கிணைத்தல், கருத்து வேறுபாடுகளை எழுப்புதல் மற்றும் இணைந்து செயல்படுதலை உறுதி செய்ய வேண்டும்.
இவை அரசியல் வியுக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் அளித்த வியூக அறிக்கையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும் . இந்த வியூகங்களை ஆராய மூன்று நபர்கள் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்து இந்தத் திட்டங்கள் உண்மையில் காங்கிரஸிற்கு பயனுள்ளதா, இல்லையா? மற்றும் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா வேண்டாமா ? என்பது குறித்து அவர்கள் ஒரு வாரத்திற்குள் அளிக்கும் பதில் அறிக்கையை வைத்து சோனியா காந்தி இறுதி முடிவெடுப்பார் என காங்கிரஸ் கட்சியின் வட்டார தகவல் .
கருத்துகள்