மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமாயென வினவிய திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வீட்டுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்த மின்வாரிய அதிகாரிகள்
மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமாயென திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தனர்.
மின்கட்டண விவகாரத்தில் முதலமைச்சர் மனமிறங்குவாரா என அவர் எழுப்பியிருந்த கேள்வி தான் மின்வாரிய அதிகாரிகளை அவரது இல்லம் நோக்கிச் செல்ல வைத்துள்ளது.
இதுவே பொதுமக்களில் யாரேனும் ஒருவர் மின்வாரிய குறைகளை இப்படி சுட்டிக்காட்டினால் அவர்களது வீட்டுக்கும் சென்று அதிகாரிகள் புகார்களை கேட்டறிவார்களா என்ற கேள்விக்கு மின் வாரியம் தான் பதில் தர வேண்டும் இலஞ்சத்தில் மூழ்கிப் போன அலுவலகமான
தமிழக மின்சார வாரியத்தின் மின் கட்டணக் கணக்கீட்டு முறை குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வீட்டு மின் கட்டண கணக்கீடு முறையில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்ததையடுத்து இன்று அவரது வீட்டுகே சென்ற மின்வாரிய செயற்பொறியாளர்கள் தங்கர்பச்சானின் புகாரைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
நல்ல விஷயம்
மின் வாரிய அதிகாரிகளின் இது போன்ற துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது தான். ஆனால் இதுவே சாமனியர்களில் ஒருவர் இப்படி புகார் கூறியிருந்தால் அவர்களது குறையும் இதேபோல் உடனடியாக களையப்படுமா என்றால் அது சந்தேகமே. சினிமா, அரசியல், தொழில் பிரபலங்களுக்கு காட்டும் மரியாதையில் சிறிதளவாவது சாமானிய பொதுமக்களுக்கும் மின் வாரிய அதிகாரிகள் காட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே நேற்று தங்கர்பச்சான்
மின் கட்டணம்
''அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள்கூட தாமதமாகாமல். ஆனால், மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்.''
இரண்டே கால் மடங்கு
''ஆனால் கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக்கட்டணமாக செலுத்தியுள்ளேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என தமிழக முதலமைச்சர் கூறியிருந்தார்.''
''இந்த நிலையில், அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறேன். ஒரு வீட்டின் மின் கட்டணச் செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால் அதற்கான திறன் தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தொழில் வாய்ப்பின்றி, வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகிறேன்.''எனக கூறியிருந்தார் இதனிடையே அவரது பின் பதிவு இது நேற்று!
மின்சார கட்டணக்கொள்ளை முடிவுக்கு வருமா?
முதலமைச்சர் மனமிறங்குவாரா?
அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்! ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன! மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 [பதினாறு] ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்.ஆனால் கடந்த மாதத்தில் 36 [முப்பத்தி ஆறு] ஆயிரம் ரூபாய் மின்சாரக்கட்டணமாக செலுத்தியுள்ளேன்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கின்றேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை.அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால் அதற்கானத்திறன் தமிழ் நாட்டில் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தொழில் வாய்ப்பின்றி,வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி,கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகின்றேன்.
இப்படிக்கு
தங்கர் பச்சான்
சென்னை மாநகரம்- 600032
07.08.2021
---------------------------------------------------------------------------
இன்று!
எனது கோரிக்கையை அறிக்கையாக ஊடகங்களுக்கு அனுப்பிய ஒரு சில மணி நேரத்திலேயே மின்சாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் தொடர்புகொள்வதாக மிசாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் எனது கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். நேரில் வந்து மின் கணக்கு கட்டணம் தொடர்பான ஐயங்களை தீர்த்து வைக்க அதிகாரிகளை உடனே அனுப்புவதாகக் கூறியபொழுது முதலில் எனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தேன். பின்னர், அவருக்கு என்னுடைய பதிலாக ‘என்னுடைய கோரிக்கை மின் கணக்குத் தொடர்பானது அல்ல: தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் அளித்திருந்தபடி, தற்போதுள்ள இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை மாற்றி மாதம் ஒருமுறை செலுத்தும் வகையில் உடனே செயல்படுத்த வேண்டும்’ எனும் எனது கோரிக்கையின் விளக்கத்தைக் கூறினேன்.
இந்நேரம் மின்துறை அமைச்சருக்கு எட்டிய செய்தி முதலமைச்சரின் பார்வைக்கும் சென்று சேர்ந்திருக்கும் என நம்புகின்றேன். மின் கட்டண சுமையால் இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே என்னைப்போன்றே முதலமைச்சரின் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அறிகின்றேன்! மின் கட்டணத்தை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக புகார்கள் அதிகரித்து வருவதைக்
கவனத்தில் கொண்டு
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் கவனத்தில் கொண்டு ஆரம்பத்திலேயே மின்வாரிய பிரச்சனைகளை, குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. திரைப்பட இயக்குநர் ஒருவரே, மின் கட்டண விவகாரத்தில் முதலமைச்சர் மனமிறங்குவாரா என்ற கேள்வியை எழுப்பி பொதுத்தளத்தில் அறிக்கை வெளியிட்டது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு செய்ய கணக்காளர்களை மின்வாரிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
என்பதை துறை அமைச்சர் என்ற முறையில் விளக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள்