முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நபார்டு வங்கியின் மண்டலத் தலைமைப் பொதுமேலாளராக ரா. ஆனந்த் பொறுப்பேற்றார்

நபார்டு வங்கியின் மண்டலத் தலைமைப் பொதுமேலாளராக  ரா. ஆனந்த் பொறுப்பேற்றார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நபார்டு வங்கியின் புதிய தலைமைப் பொது மேலாளராக திரு ரா. ஆனந்த் பொறுப்பேற்றுள்ளார். அவரது நியமனம் 2024, ஜுன் 01 முதல்  அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரியில் பயின்ற வேளாண் பொறியாளரான திரு ஆனந்த், நபார்டு வங்கியில் பணியில் சேர்வதற்கு முன் தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் ஐந்தாண்டு காலம் பணியாற்றியுள்ளார். 1993-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள நபார்டு வங்கியில் இணைந்த இவர், கடந்த 30-ஆண்டுகளாக இவ்வங்கியில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ஒடிசா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்களில் திரு ஆனந்த் பணியாற்றியுள்ளார். வேளாண் மேம்பாடு, ஊரக வளர்ச்சி, சிறு தொழில், நெசவு, உள்ளிட்ட துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலாளராகப் பணியாற்றுகையில் ஊரக  வாழ்வாதார மேம்பாடு, திறன் மேம்பாடு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, 2022 மார்ச் 31-உடன் முடிவடைந்த ஆண்டிற்கான இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி – தமிழ்நாடு அரசின் இணக்கத் தணிக்கை (வருவாய்) அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதன்மைத் தலைமைக் கணக்காளர் (தணிக்கை-I) திரு சி நெடுஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் நிறைவுக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது

2024 மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் நிறைவுக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது 2024 மக்களவைத் தேர்தலின் நிறைவுக் கட்டமான 7-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (01.06.2024) நடைபெறுகிறது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசா மாநில சட்டப்பேரவையின் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறும்.  கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையில் 6 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இதில் 486 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.  இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஏழுகட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும். நாளை நடைபெறவுள்ள இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக

சேவை மற்றும் பரிவர்த்தனை குரல் அழைப்புகளுக்கென தனி எண் வரிசைகள் ஒதுக்கீடு

சேவை மற்றும் பரிவர்த்தனை குரல் அழைப்புகளுக்கென தனி எண் வரிசைகளை தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கியுள்ளது சேவை / பரிவர்த்தனை அழைப்புகளைச் செய்வதற்காக 160xxxxx என்ற புதிய எண் வரிசையைத் தொலைத்தொடர்புத் துறை,   அறிமுகம் செய்துள்ளது. இதுபோன்ற முறையான அழைப்புகளை எளிதில் அடையாளம் காண குடிமக்களுக்கு ஒரு வழியை வழங்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி உள்ளது. தற்போது 140xxxxxxx தொடர், விளம்பரம் / சேவை / பரிவர்த்தனை குரல் அழைப்புகளுக்கான தொலைத்தொடர்பு வழி சந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விளம்பர அழைப்புகளுக்கு 140xx தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், நுகர்வோர் பொதுவாக இதுபோன்ற அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை. இதனால் பல முக்கியமான சேவை / பரிவர்த்தனை அழைப்புகள் தவறவிடப்படுகின்றன. இதன் காரனணமாக உண்மையான நிறுவனங்கள் சேவை / பரிவர்த்தனை அழைப்புகளைச் செய்வதற்கு வழக்கமான 10 இலக்க எண்களைப் பரவலாகப் பயன்படுத்துகின்றன. இது 10 இலக்க எண்களைப் பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்ற மோசடி செய்பவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எனவே, நுகர்வோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், தெரியாத 10 இலக்க எண்களிலிருந்து வரும் தேவையில்லாத அழைப்புகளையும

வெகுஜன தகவல் தொடர்பு பயிற்சி திட்டத்தை அறிவித்த ஜல்சக்தி அமைச்சகம்

ஜல்சக்தி அமைச்சகம் வெகுஜன தகவல் தொடர்பு பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள நீர் வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் (DoWR, RD, GR) துறை, மக்கள் தொடர்பு பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது. இது பட்டதாரி / முதுகலை பட்டப்படிப்புகள் அல்லது இந்தியாவில் வெகுஜன தொடர்பு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர்களை பயிற்சியாளர்களாக ஈடுபடுத்த முயல்கிறது. இண்டர்ன்ஷிப் திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுகிய கால வெளிப்பாட்டை ஊடகம்/சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பான துறையின் பணிகளுடன் தொடர்புபடுத்த அனுமதிக்கிறது. மக்கள் தொடர்பு அல்லது இதழியல் அல்லது தொடர்புடைய துறைகளில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் மேற்கூறிய துறைகளில் முதுகலை அல்லது டிப்ளமோ (வெகுஜனத் தொடர்பு அல்லது தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பை முடித்ததற்கு உட்பட்டு) படிக்கும் மாணவர்கள் தகுதியுடையவர்கள், வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டது. பயிற்சியின் காலம் ஆறு முதல் ஒன்ப

ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏடிஎஸ்பி என்கௌன்டர் வெள்ளத்துரை

தமிழ்நாடு காவல்துறையில் Encounter Specialist அதாவது தன்னிச்சையாக தண்டனை தரும் நபராக வலம் வந்தவர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை. ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி துவங்கியவர் இவர் எந்த மாவட்டத்துக்கு மாற்றப்பட்டாலும் அங்கு ஒரு அதிரடி ஆபரேஷன் மூலம் படுகொலை நடக்கும் என்றே காவல்துறை வட்டாரத்தில் பேசப்படும். குறிப்பாக கமிஷன், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற குற்ற சம்பவங்கள் எங்கு அதிகமாக நடக்கிறதோ அந்தப் பகுதிக்கு வெள்ளத்துரை நியமிக்கப்படுவார் அது ஒரு தனிக்கதை.இவரே கட்டப்பஞ்சாயத்து செய்த கதைகள் அதிகம், ஒரு வழக்கில் மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் எழுதிய செய்தியைக் காட்டி ஒரு HCP  வழக்கில் நீதியரசர் தேவதாஸ் அமர்வில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தது உண்டு, வெள்ளத்துரை  2004 ஆம் ஆண்டு சந்தணக்காட்டு வீரப்பனை சுட்டுக்கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். அதன் மூலம் இரட்டைப் பணி உயர்வும் பெற்றார் அதனால் தான் ஏடிஎஸ்பி அளவில் இன்று உயர் முடிந்தது, மேலும் சென்னை அயோத்திகுப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்ததில்  மிக பிரபலமானார். இதே போல கொட

கிறிஸ்தவ ஆலய சொத்து பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்ததாக உயர்நீதிமன்றம் கருத்து

கிறிஸ்தவ ஆலய சொத்து பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டதாக மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. கிறிஸ்தவ ஆலயங்களின் சொத்துகளை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டதென சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் உத்தரவு. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஷாலின், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை  கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த ஆண்டு விஜயா என்பவரிடமிருந்து சொத்து ஒன்று கிரையம் செய்தேன். அந்த சொத்தை பதிவு செய்ய திருப்பத்தூர் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். அது தொடர்பாக சார்பதிவாளர் 29.மார்ச்.2023 ஆம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடனடியாக பத்திரப்பதிவு செய்யும்படி உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்த போது திருப்பத்தூர் சார்பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், 2017-ஆம் ஆண்டில் 2 வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழ் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (டி.இ.எல்.சி.) சொத்துகளை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவ

மனுதாரர் தவறான முறையில் பெற்ற பணத்தில் வாழ்ந்துள்ளதால் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவியுள்ளதென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை. கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த சக்திவேல். மனைவி தெய்வநாயகி. இவர்கள் இருவர் மீதும் 1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.6,77,626 அளவில் சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2011-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை நிலுவையில் இருந்த போது சக்திவேல் இறந்து விட்டார். இந்த வழக்கில் தெய்வநாயகிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2017-ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை ரத்து செய்யக் கோரி தெய்வநாயகி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் செய்த மேல்முறையீட்டு  மனுவை  விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், “ஒரு பொது ஊழியரின் மனைவியான மனுதாரர், கணவர் லஞ்சம் வாங்குவதைத் தடுத்திருக்க வேண்டும். லஞ்சம் வாங்கக்கூடாது என்பது வாழ்வின் தத்துவமாகும். லஞ்சம் வாங்குவோரின் குடும்பம் பாதிப்

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாயைத் தேடும் காவல்துறை!

மஹாராஷ்டிரா மாநிலம் புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாயைத் தேடும் மராட்டியக் காவல்துறை!  புனே கார் விபத்தில் அடுத்தடுத்து பரபரப்பாக  விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தாயைத் தேடும் காவல்துறை  மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் மே மாதம் 19 ஆம் தேதி சொகுசுக் காரை 17 வயதுச் சிறுவன் மது போதையில் ஓட்டியதில் இரண்டு ஐடி நிறுவன ஊழியர்கள் உயிரிழந்து அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் மது போதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை காவல் துறையினர் தற்போது தேடி வருகிறார்கள் மகனின் ரத்தத்திற்குப் பதிலாக தன்னுடைய ரத்தத்தை மாற்றி மகன் மது போதையில் இல்லை என மோசடியாக மருத்துவர்கள் மூலம் சான்று பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் ஏற்கனவே சிக்கிய பின்னர் கைதாகி உள்ளனர். சிறுவனின் 17 வயதைக் காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்த "மது விரும்பிச் சிறுவன்", ஏற்கனவே தன் விவகாரத்தில் அப்பனையும்,தாத்தாத்தாவையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டான். இப்போது மேலும் இரண்டு டாக்டர

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் உத்திசார் கூட்டாண்மை

திறன் மேம்பாடு மற்றும் வாழ்நாள் கற்றலை மேம்படுத்த தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் உத்திசார் கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன திறன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) ஆகியவை இந்தியாவிலும் உலகளவிலும் திறன் மேம்பாடு மற்றும் வாழ்நாள் கற்றலை மேம்படுத்துவதற்கான உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பு உலகெங்கிலும் உள்ள தனிநபர்களை அத்தியாவசிய திறன்கள் மற்றும் தகுதிகளுடன் சித்தப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படும். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி மற்றும் அமைச்சகத்தின் இதர அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சர்வதேச என்.எஸ்.டி.சியின் மேலாண் இயக்குநரும், என்.எஸ்.டி.சியின் தலைம

கூகுள் நிறுவனத்தின் தலைமை சுகாதார அதிகாரியுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சந்திப்பு

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தின் போது, கூகுள் நிறுவனத்தின் தலைமை சுகாதார அதிகாரியுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சந்திப்பு ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77-வது உலக சுகாதாரப் பேரவை கூட்டத்திற்கிடையே, கூகுள் நிறுவனத்தின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கரேன் டி சால்வோவை இந்திய தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா சந்தித்தார். டிஜிட்டல் சுகாதார கருவிகளை மக்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் கூகுள் ஆராய்ச்சி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் இடையே நடந்து வரும் செயல்பாடுகள் பற்றி விவாதிப்பதே இந்தச் சந்திப்பின் நோக்கமாகும். தொடக்கத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இரு அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் செயல்பாட்டைப் பாராட்டினார். செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்திய அவர், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்துக்கு  கூகுளின் ஆதரவை நாடினார். தானியங்கி விழித்திரை நோய் மதிப்பீடு (ஏஆர்டிஏ) போன்றவற்றுக்கு டிஜிட்டல் சுகாதாரக் கருவிகளை உருவாக்க

சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு அனுபவங்களைப் பெற ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு

சென்னை ஐஐடி-யின் நேரடி செயல் விளக்க நாள் நிகழ்ச்சி ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுகிறது : சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு அனுபவங்களைப் பெற ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி, 2024 ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நேரடி ‘செயல் விளக்க நாள்’ நிகழ்வை அதன் நிறுவன வளாகத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்வின்போது, ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதுடன் ஐஐடி மாணவர்களின் வளாக அனுபவத்தை நேரடியாகப் பெறலாம். தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் இதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை ஐஐடி-க்கு அன்றைய நாட்களில் நேரடியாக வருகை தர முடியாத மாணவ-மாணவிகள் 2024 ஜூன் 17-ம் தேதியன்று இணையதள அமர்வில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்வின் போது சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்த வளாகத்தின் கல்வி தொடர்பாகவும், கல்வி சாரா வாழ்க்கை பற்றியும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். பெங்களூருவைச் சுற்றியுள

எம்-சாண்ட் உற்பத்தியாளர்களுக்கு பிஐஎஸ் தரச்சான்றிதழ் பற்றிய பயிலரங்கம்

இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), ஹேபிடேட் ஃபார் ஹுமானிட்டி இன்டர்நேஷனலுடன் ஒருங்கிணைந்து சென்னையில் எம்-சாண்ட் உற்பத்தியாளர்களுக்கான பிஐஎஸ் குறித்த பயிலரங்கை இன்று ஏற்பாடு செய்துள்ளது இந்தியத் தர நிர்ணய அமைவனம் - சென்னை கிளை அலுவலகம், ஹேபிடேட் ஃபார் ஹ்யூமனிட்டி இன்டர்நேஷனலுடன் ஒருங்கிணைந்து, எம்-சாண்ட் உற்பத்தியாளர்களுக்கு பிஐஎஸ் தரச்சான்றிதழ் பற்றிய பயிலரங்கை இன்று (28.05.24) சென்னையில் நடத்தியது. இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் துணைத்தலைமை இயக்குநர் திரு யுஎஸ்பி யாதவ், இந்தப் பயிலரங்கில் ​​பங்கேற்பாளர்களுக்கு [உற்பத்தியாளர்களுக்கு] ஐஎஸ் 383-ன் பல்வேறு தேவைகள், உற்பத்தியாளர்களால் அமைக்கப்பட வேண்டிய சோதனை வசதிகள், ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை பற்றி விளக்கமளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்   எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள் பிஐஎஸ் சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்கும் எம்-சாண்ட் கொள்கை 2023- ஐ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார். பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத் தலைவர் மற்றும் இயக்குநர் திருமதி ஜி. பவானி தனது உரையில், ​​நாட்டில் தரமான ச

மின்னணு குடியேற்ற சேவைகளை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிஎஸ்சி மின் ஆளுகை சேவைகள் இந்தியா நிறுவனம் ஆகியவை பொது சேவை மையங்கள் மூலம் மின்னணு குடியேற்ற சேவைகளை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிஎஸ்சி மின் ஆளுமை சேவைகள் இந்தியா நிறுவனம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இமைகிரேட் எனப்படும் திட்டம் முக்கியமாக குடியேற்ற சோதனை தேவைப்படும் (ECR) நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இடப்பெயர்வு குடியேற்ற செயல்முறையை இணையதளம் மூலம் தடையற்ற வகையில் வழங்க இது வகை செய்கிறது. இதன் மூலம் புலம்பெயரும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள், பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னணு தொழில் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் திரு ராஜேஷ் சிங் முன்னிலையில்,

ருத்ராஎம்-II ஏவுகணை, சுகோய்-30 எம்கே-I இலிருந்து டிஆர்டிஓவால் வெற்றிகரமாக ஏவி சோதனை

ருத்ராஎம்-II ஏவுகணை, சுகோய்-30 எம்கே-I இலிருந்து டிஆர்டிஓவால் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ, மே 29 அன்று ஒடிசா கடற்கரையில் சுமார் 11.30 மணி அளவில் இந்திய விமானப் படையின் சுகோய்-30 எம்கே-I விமானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ஏவப்படும் ருத்ராஎம்-II - ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்தச் சோதனை, அதன் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்தது. ருத்ராஎம்-II - என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட-உந்துதல் ஏவுகணை அமைப்பாகும். இது பல வகையான எதிரிகளின்  இலக்குகளை  தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. டிஆர்டிஓ ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட பல அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்கள் ஏவுகணை அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ருத்ராஎம்-II-ன் வெற்றிகரமான சோதனைக்காக டிஆர்டிஓ, இந்திய விமானப்படை  ஆகியவற்றுக்கு வாழ்த்து தெரிவித்தார். வெற்றிகரமான சோதனையானது, ஆயுதப் படைகளுக்கு  வலுசேர்க்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா: 854 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று (29.05.2024) நடைபெற்றது.  இதில் 467 மாணவிகள் மற்றும் 387 மாணவர்கள் என மொத்தம் 854 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவுக்கு  வேந்தர் பத்மபூஷன் பேராசிரியர் திரு ஜி.பத்மநாபன் தலைமை வகித்தார். விழாவில் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் பத்மபூஷண் ஜி.பத்மநாபன் தமது உரையில், "மாணவர்கள் தங்கள் விருப்பங்களை அடைவது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில், பங்காற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு போன்ற நபர்களிடமிருந்து உத்வேகம் பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் தமது உரையில், 2024-ம் ஆண்டில் என்ஏஏசி-யின் மதிப்பீட்டின் 2-வது சுற்றில் தமிழ்நாடு மத்திய