முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா ஸ்கில்ஸ் திறன் போட்டியில் பெண்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்

தடைகளை உடைத்தல்: இந்தியா ஸ்கில்ஸ் திறன் போட்டியில் பெண்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்திப் பிரகாசிக்கின்றனர் தில்லி துவாரகாவின் யசோபூமியில் 2024 மே 15 முதல் 19-ம் தேதி வரை இந்தியா ஸ்கில்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.  ஆண்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகளில்  பெண்களின் பங்கேற்பு தற்போது அதிகரித்து வருகிறது. பெண் பங்கேற்பாளர்கள் ஆண்களுடன் நேருக்கு நேராகப் போட்டியிட்டு உற்சாகத்துடன் திறன்களை வெளிப்படுத்துகின்றனர். திறமைக்குப் பாலின எல்லைகள் இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர். இந்த ஆண்டு இந்தியா ஸ்கில்ஸ் போட்டி, 61 திறன் பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 900- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் வலைதள தொழில்நுட்பம் (வெப் டெக்னாலஜி), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி), வரைகலை தொழில்நுட்பம் (கிராஃபிக் டிசைன் டெக்னாலஜி), வண்ணம் தீட்டுதல் மற்றும் அலங்கரித்தல், மின் கட்டமைப்புகளை நிறுவுதல்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பிரிவுகளில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் சம வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு தளத்த

என்ஐடி மற்றும் சிடிஏசி ஆய்வாளர்கள் இணைந்து செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர்

திருச்சிராப்பள்ளி என்ஐடி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி ஆய்வாளர்கள் இணைந்து செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் தெருவிளக்குகளுக்கான ஒருங்கிணைந்த சூரியசக்தி தகடுகளை உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சித் துறையில் ஒரு முக்கிய பங்களிப்பாக திருச்சி  என்ஐடி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி ஆய்வாளர்கள் இணைந்து செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் (மின்னேற்றி) தெருவிளக்குகளுக்கான ஒருங்கிணைந்த சூரியசக்தி தகடுகளை உருவாக்கியுள்ளனர். செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் எளிதாக கொண்டு செல்லக் கூடியதாகவும் செலவு குறைந்ததாகவும் கையடக்கமானதாகவும் இருக்கும்.  அதே போல் தெருவிளக்குகளுக்கான சூரியசக்தி தகடுகள் சமூகத்தில் அன்றாடத் தேவைகளை இலக்காகக் கொண்டவையாகும். திருச்சி என்ஐடி-யின் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் சி நாகமணி,  மேற்பார்வையின் கீழ் பகுதிநேர பிஎச்டி பட்ட ஆய்வாளரும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி-யின் முதுநிலை இயக்குநருமான திரு வி சந்திரசேகர், காலியம் நைட்ரைடு  அடிப்படையிலான உயர்அலை மாற்ற பயன்பாட்டுக்கான மின்னணு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். இவர்களின

உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு காஸியாபாத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம், "உலகளாவிய தரநிலைகள் மற்றும் அறிவு சார் சொத்துரிமை" குறித்த பயிலரங்கை நடத்தியது. "உலகளாவிய தர நிலைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை" தொடர்பான ஒரு நாள் பயிலரங்கு, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் தரம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. இந்த ஆண்டு (2024) அக்டோபர் 15 முதல் 24-ம் தேதி வரை இந்தியாவால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாட்டின் முன்னோட்டமாக இந்த நடைபெற்றது. சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ITU) இந்திய பகுதி அலுவலகத்துடன் இணைந்து மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் (NTIPRIT) நேற்று (2024 மே 17) காஸியாபாத்தில் உள்ள அதன் வளாகத்தில் இந்த பயிலரங்கை நடத்தியது.  உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொலைத் தொடர்புத் துற

குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் 17 வயதுச் சிறுவன் பலி

பொதிகை மலை உச்சியிலிருந்து புறப்பட்டு வந்த காட்டாற்று வெள்ளம் வந்தது, அய்யோ விட்டுடோமே, போங்க போங்கனு சொல்றீங்களே.. வீட்டுல போயிட்டு என்ன பதில் சொல்லுவோம்..கோர முகத்தைக் காட்டிய குற்றால அருவியின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த 17 வயதுச் சிறுவன். தலையிலடித்துக்கொண்டு கதறியழுத சிறுவனின் அத்தை.   தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக அந்திமாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்தது. நேற்றுக் காலையிலிருந்து வெயிலில்லாமல் இதமான சூழல் நிலவியது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. காலையிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குளித்து வந்த நிலையில் சுமார் 2.30 மணியளவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகப் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்காசி குற்றாலம் பகுதியில் மழை பெய

ஐடி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறி வரும் பணியாளர்கள்

கொரோனா தொற்று பரவிய காலத்தில் வழங்கப்பட்ட அதிகப்படியான வேலை பளுவை சலுகையில் அனுபவித்த ஐடி ஊழியர்கள், கொரோனா அச்சம் முடிந்து  மூன்றாண்டுகள் ஆகியும் அலுவலகத்திற்கு வர மறுக்கின்றனர். இது ஐடி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறி வருகிறது, ஒருபக்கம் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்து வரும் அதே வேளையில் ஊழியர்கள் செயல்திறன் குறைவாக உள்ளதாக பல நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளதனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருவது கட்டாயமாக்க டெக் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப நிறுவனங்களும் அலுவலக சூழல் மாறி வருகிறது. டெக் நிறுவனங்கள் பணியாற்றும் இடத்தின் சூழலை மேம்படுத்தவும், பணியாற்றும் தரத்தை மெருகேற்றவும் பல்வேறு ஊக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் ஊழியர்கள் நிறுவனங்களின் அலுவலக வேலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திலுள்ளனர், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.  காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவி குமார், மேலாளர்கள் தேவைக்கேற்ப பணியாளர் அலுவலகம் வந்து பணியாற்றும் ஊழியர்களி

ஆந்திராவில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் கடும் உத்தரவு

ஆந்திராவில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக அந்த மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் பங்கேற்ற கூட்டம் தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பங்கேற்று, ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்த தனது அதிருப்தியைத் தெரிவித்தது.  இதுபோன்ற வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம், ஆந்திர தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆந்திர தலைமைச் செயலாளரும் மற்றும் கா

சென்னை ஆவடி போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் பொன்விழா

சென்னை ஆவடி போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் பொன்விழா கொண்டாட்டம் சென்னை ஆவடி போர்வாகன ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டு நிறுவனப் பொன்விழா பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் முன்னிலையில் இன்று  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நாட்டின் பாதுகாப்புத்துறை நவீனத் தொழில்நுட்பங்களில் தற்சார்பை விரிவுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக முக்கியப் பங்கு வகிக்கிறது.  இந்தச் சிறப்பு மிக்கப் பயணத்தை போற்றுவதற்காக  பொன்விழாக் கொண்டாட்டங்கள் இன்று ஆவடியில் உள்ள இந்நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் தலைமை விருந்தினராகவும் ஆயுதங்கள் மற்றும் போர் பொறியியல் பிரிவில்  தலைமை இயக்குநர்  பேராசிரியர் பிரதீக் கிஷோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். டிஆர்டிஓ தலைமையக

பிரான்சில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரத் அரங்கு திறக்கப்பட்டது

 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரத் அரங்கு திறக்கப்பட்டது பிரான்சில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில், பல்வேறு பிரிவுகளில் பல அதிகாரப்பூர்வ தேர்வுகளுடன், பாரத் அரங்கு இன்று (15.5.24) திறக்கப்பட்டது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆண்டும் தோறும் மதிப்புமிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது. இது தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தாலும், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பாலும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அரங்கம் தனது வளமான சினிமா பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கும், உலகளாவிய திரைப்படங்களுடன்  சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இந்த பிரம்மாண்டமான தொடக்க விழாவில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவுடன்,  பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப்  பங்கேற்றார். இந்திய சினிமாவின் சாராம்சத்தை கொண்டாட மதிப்புமிக்க பிரமுகர்கள், புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் ஒன்றிணைந்தனர். தென்னாப்பிரிக்காவின் தேசிய திரைப்பட மற்றும் வீடியோ அறக்கட்டளையின் தலைவர் திருமதி தோலோனா ரோஸ்

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

2021-ஆம் ஆண்டு பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்  பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி உறுதி செய்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதிலிருந்து விலக்களிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பேலா திரி

முதல் தொகுப்பு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய உள்துறைச் செயலாளர் வழங்கினார்

குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 வெளியிடப்பட்டபின் முதல் தொகுப்பு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன புதுதில்லியில் சில விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் இன்று வழங்கினார் குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 வெளியிடப்பட்டபின் முதல் தொகுப்பு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. புதுதில்லியில் சில விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் திரு அஜய்குமார் பல்லா இன்று வழங்கினார். விண்ணப்பதாரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த உள்துறை செயலாளர், குடியுரிமை (திருத்த) விதிகள், 2024-ன் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார். குடியுரிமை (திருத்த) விதிகள், 2024-ஐ மத்திய அரசு 2024 மார்ச் 11 அன்று  அறிவிக்கை செய்தது. இதன் தொடர்ச்சியாக மதரீதியான துன்புறுத்தல்கள் அல்லது அவற்றால் ஏற்பட்ட அச்சம் காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 31.12.2014 வரை இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தில்லியில் உள்ள மக்கள் தொகை கணக்கெ

இரட்டைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு ஐஐடியில் வேலை வாய்ப்பு

பிடெக் / இரட்டைப் பட்டப்படிப்பு முடித்த 80%க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், முதுகலை பட்டப்படிப்பு முடித்த 75%க்கும் அதிகமான மாணவர்களுக்கும் சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐஐடி) வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்துள்ளது சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் (ஐஐடி) சேர்ந்த பிடெக் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் தங்களுக்கு பட்டமளிப்பு நடைபெறும் காலத்திலேயே வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். 2024 பட்டமளிப்பு விழாவிற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், நடப்பாண்டிலும் இத்தொழில்நுட்பக் கழகம் இந்த சாதனையைப் படைக்க உள்ளது. 2024, ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நடப்பாண்டில் 80%க்கும் மேற்பட்ட பிடெக் / இரட்டைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கும், 75%க்கும் அதிகமான முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்துள்ளது. 2023-24ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளின் போது 256 நிறுவனங்களில் 1,091 பேர் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர, மொத்தமுள்ள 300 முன்வே