முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முத்ரா திட்டம் கடன்கள் திருப்பிச் செலுத்தியவர்கள் இரண்டு சதம் வட்டி மானியம் பெறலாம்

பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம். கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து சிறிய அளவு வர்த்தக நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு இந்தத் திட்டம் உதவும் பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் தகுதி வாய்ந்த கடனாளர்கள் பெறும் அனைத்து சிசுக்கடன் தொகைக்கும் 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது கீழ்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் கடன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் – 31 மார்ச் 2020 அன்று நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் 31 மார்ச் 2020 அன்றுள்ள படியும், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டம் வரை பாரத ரிசர்வ் வங்கி வழிமுறைகளுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்ட திரும்பி வாராக் கடன் வகைப்பாட்டில் வராத கடன்கள் இத் திட்டத்தில் அடங்கும். வாங்கப்பட்ட இந்தக் கடன் வாராக்கடன் வகைப்பாட்டின் கீழ் சேர்க்கப்படாத மாதங்களுக்கு கடன் வட்டி மானியம் வழங்கப்படும். NPA மாறிய பிறகு, கடன் கணக்கு திரும்பி வரும் கணக்காக மாறும் மாதங்களும் இதில் அடங்கும்.  கடன்களைத் தொடர்ந்து செலுத்தி வருகின்ற நபர்களுக்கு இந்தத் திட்டம் ஊக்கத்தொகை அளிப்பதாக உள்ளது. இந்தத் திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட செலவு தோராயமாக ரூ.1,542 கோடி ஆகும்.  இந்தத் தொகையை இந்திய அரசு வழங்கும். பின்னணி இந்தத் திட்டமானது ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு ரூ.50,000 வரை வழங்கப்படும் கடன்கள் சிசுக் கடன்கள் என்பதாகும். முத்ரா கடன்களை வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கிகள், வங்கிப்பணி சாராத நிதிநிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதிநிறுவனங்கள் போன்ற முத்ரா லிமிட்டில் பதிவு செய்துள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்குகின்றன. தற்போதைய கோவிட்-19 நெருக்கடி, அதன் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு ஆகியன சிசு முத்ரா கடன்கள் மூலம் நிதி பெற்று செயல்படும் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தீவிரமாகப் பாதித்துள்ளன.  சிறிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் மிகக் குறைவான லாபமே ஈட்ட முடியும்.  தற்போதைய ஊரடங்கு அந்த நிறுவனங்களின் பணப்புழக்கத்தைக் குறைத்துள்ளது. கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு அவர்களால் நிறுவனத்தை இயக்க முடியாமல் இருக்கிறது.  இந்தப் பிரச்சினைகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.  இந்த நிலைமையானது எதிர்காலத்தில் நிதிநிறுவனங்களில் இருந்து கடன் பெறுவதில் பிரச்சினையை ஏற்படுத்தும்.  31 மார்ச் 2020 அன்றுள்ளபடி, முத்ரா கடன் சிசுப் பிரிவின் கீழ் மொத்தக் கடன் தொகை ரூ.1.62 லட்சம் கோடி அளவுக்கு 9.37 கோடி கடன் கணக்குகளில் நிலுவையில் உள்ளது. நடைமுறையாக்கல் உத்தி இந்தத் திட்டம் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் 12 மாதங்களுக்கு இது செயல்பாட்டில் இருக்கும்.  கோவிட்-19 ஒழுங்குமுறை செயல் தொகுப்பின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்து உள்ளவாறு சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் தவணைகளை காலம் தாழ்த்திச் செலுத்த அனுமதித்துள்ள கடன் வாங்கியவர்ளுக்கு இந்தத் திட்டமானது 12 மாத காலங்களுக்கு அதாவது செப்டம்பர் 01, 2020 முதல் ஆகஸ்ட் 31 2020 வரையான தவணை செலுத்தும் காலம் முடிந்த பிறகு தொடங்கும். கடன் பெற்றுள்ள மற்றவர்களுக்கு இந்தத் திட்டம் ஜுன் 01, 2020இல் தொடங்கி 31 மே, 2021 வரை நடப்பில் இருக்கும்.  முக்கியமான விளைவு எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள ஒரு சூழலைச் சமாளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. “பிரமிடின் கடைசி வரிசையில்” உள்ள கடன் வாங்கியோருக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை நீக்குவதை அதாவது அவர்களின் கடன் செலவைக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்தத் தொழில் பிரிவினருக்குத் தேவைப்படும் நிவாரணத்தைப் போதுமான அளவில் இந்தத் திட்டம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் மூலம் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் சிறு வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இந்த நெருக்கடியான சமயத்திலும் சிறிய அளவு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற உதவுவதன் மூலம் இந்தத் திட்டமானது பொருளாதாரத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கலுக்கு இன்றியமையாது தேவைப்படும் இந்தத் தொழில் பிரிவை புதுப்பிக்கவும் இது உதவும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்