முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இசங்க்யிகி தளம் அறிமுகம்

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தரவுகளை எளிதில் பெறுவதற்காக இசங்க்யிகி (eSankhyiki) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், உலகளாவிய புள்ளியியல் நடைமுறைகள் மற்றும் சிறந்த தரவுப் பகிர்வு தரநிலைகளை உறுதி செய்ய தொடர்ந்து செயலாற்றி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திட்டமிடுபவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடித் தகவல்களை  வழங்குவதற்காக இந்த அமைச்சகம்  இசங்க்யிகி ( eSankhyiki - https://esankhyiki.mospi.gov.in ) என்ற தளத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் அதிகாரபூர்வ புள்ளி விவரங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்வதும், விரிவான தரவு மேலாண்மை மற்றும் பகிர்வு முறையை ஏற்படுத்துவதும் இந்த இணைய தளத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த தளம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: 1) தரவு பட்டியல் பகுதி: இந்த பகுதி எளிதாக அணுகுவதற்காக அமைச்சகத்தின் முக்கிய தரவுகளை ஒரே இடத்தில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. 2) பேரியல் (மேக்ரோ) குறியீட்டுப் பகுதி: இந்தப் பகுதி முக்கிய விவரங்களின் கால வரிசைத் தரவை வழங்குகிறது. இது பயனர்கள் எளிதாக அணுக உதவி, 

தேசிய நீதித்துறை அகாடமியின் மண்டல மாநாட்டில் இந்தியத் தலைமை நீதிபதி உரை

நீதிமன்றங்களை மக்கள் கோவில் என்பதால், நீதிபதிகள் அதனைக் கடவுளாக நினைத்துக் கொள்ளும் நிலை தான் பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறதென, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். தேசிய நீதித்துறை அகாடமியின் மண்டல மாநாடு, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடந்ததில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசிய போது: 'யுவர் ஹானர், லார்ட்ஷிப், லேடிஷிப்' என்று நீதிபதிகளைக் குறிப்பிடுகின்றனர். சில நேரங்களில் மக்கள் நீதிமன்றங்களை, நீதியின் கோவிலாகவே கருதுகின்றனர். அது மிகப் பெரும் ஆபத்து. அப்படிப் பார்த்தால், நாங்கள் அந்தக் கோவிலின் கடவுள்களாக நினைத்துக் கொள்ளும் அபாயத்தை அது உருவாக்கி விடும். நீதிமன்றங்களும், நீதிபதிகளும், மக்களுக்கு சேவையாற்றுகின்றனர். அவ்வாறு மக்களுக்காகச் சேவையாற்றுவதாக நினைக்கும் போது, பரிவு, பச்சாதாபம் உள்ளிட்டவற்றுடன் நீதிமன்றங்கள் வழக்கைப் பார்க்க முடியும். குற்றவாளியாக இருந்தாலும், தண்டனை வழங்கும் போது, மனிதத்தன்மையைக் கையாள வேண்டும். அவரும் ஒரு மனிதர் தானே என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் மாண

ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் அனுமதித்த நில அளவைத் துறை பணியாளர்கள் இருவர் கைது.

கோயம்புத்தூர் ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் அனுமதித்த நில அளவைத் துறை பணியாளர்கள் இருவர் கைது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட அலுவலகத்தில்  நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் நகர சார் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் சுரேஷ்குமார். இந்தாண்டு  ஜனவரி மாதம் தனது அலுவலகத்தில்  பணி புரியும் முதுநிலை வரைவாளர் நில அளவை மற்றும் பதிவேடுகளிவ் பட்டா மாறுதலுக்கான கணிணியில் பயனாளர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை அவரது அனுமதியில்லாமல் எடுத்து அதனை அவர் பயன்படுத்துவது போலப் பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றம் செய்ததாகவும். பட்டா மாறுதலுக்கான அனுமதி வழங்கியும் அடுத்த கூட்டத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்ட பின் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிய வந்ததாகவும், அந்த அலுவலகத்தில் அவர்களுடைய பயனாளர் ஐ.டி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பட்டா மாறுதலுக்கான பரிந்துரை வழங்கிய நபர்களை சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரளிக்கப்பட்டது. அளிக்கப்பட்டட புகாரின் பேரில் கோயம்புத்தூர் மாவட்ட பூஜியக் குற்றத்தடுப்புக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அந

இராணுவத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றுக் கொண்டார்

இராணுவத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெனரல் மனோஜ் பாண்டேவிடமிருந்து ஜெனரல் உபேந்திர திவேதி ராணுவ தலைமைத் தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  30-வது ராணுவத் தலைமைத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி இன்று (30 ஜூன் 2024) பொறுப்பேற்றார்.  ஜெனரல் உபேந்திர திவேதி 40 ஆண்டுகள் ஆயுதப் படைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ரேவா சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர், 1984-ல் ஜம்மு  காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவில் சேர்ந்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், மாறுபட்ட செயல்பாட்டு சூழலில், தனித்துவமான பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். ஜெனரல் திவேதி பாதுகாப்பு களத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளவர் ஆவார். செயல்திறனை மேம்படுத்த ராணுவ அமைப்புகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் சிறந்த அணுகுமுறைகளை அவர் கொண்டுள்ளார்.

ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் பங்களாதேஷின் சட்டோகிராம் சென்றடைந்தது

ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் பங்களாதேஷின் சட்டோகிராம் சென்றடைந்தது கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள  ரன்வீ்ர் கப்பல் நேற்று  (2024 ஜூலை 29) பங்களாதேஷின் சட்டோகிராமுக்குச் சென்றடைந்தது. இந்த கப்பலுக்கு பங்களாதேஷ் கடற்படை உற்சாக வரவேற்பு அளித்தது. இந்தப் பயணம், இந்திய மற்றும் பங்களாதேஷ் கடற்படைகளைச் சேர்ந்த வீரர்கள், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பரஸ்பர  கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  துறைமுக கட்டம் முடிந்ததும், ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல், பங்களாதேஷ் கடற்படையின் கப்பல்களுடன் இணைந்து கடல்சார் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும். ஐஎன்எஸ் ரன்வீர், ஏவுகணை அழிப்புக் கப்பலாகும். இது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான பாகங்கள் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு ஏற்ப உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும்.

3 வது 25 டன் இழுவைக் கப்பல் பஜ்ரங், கடற்படையிடம் ஒப்படைப்பு

மூன்றாவது 25 டன் இழுவைக் கப்பலான பஜ்ரங், கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது மூன்றாவது 25 டன் இழுவைக் கப்பல் (பொல்லார்ட் புல் டக்), பஜ்ரங் நேற்று (29 ஜூன் 2024) ரியர் அட்மிரல் கோஸ்வாமி முன்னிலையில் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இந்த இழுவைக் கப்பல் மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்" (மேக் இன் இந்தியா) முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். மூன்று 25 டன்  இழுவைக் கப்பல்களை வடிவமைத்து வழங்குவதற்கான ஒப்பந்தம், ஷாஃப்ட் ஷிப்யார்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.  மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாக  இது மேற்கொள்ளப்பட்டது. இந்திய கப்பல் வகைப்படுத்தல் விதிகளுக்கு ஏற்ப இந்த இழுவைக் கப்பல்கள் கட்டப்படுகின்றன. கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தும் போதும், திருப்பும் போதும், கட்டுப்படுத்தப்பட்ட கடற்பரப்பில் கையாளும் போதும் அவற்றின் செயல்பாட்டு உறுதிக்கு இழுவைக் கப்பல் உத்வேகம் அளிக்கும்.  நிற்கும் கப்பல்களுக்கு தீயணைப்பு உதவிகளை வழங்குவதுடன்,  தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் இந்த இழுவைக் கப்பல்கள்

கேதா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 76-வது ஆண்டுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா குஜராத்தின் கேதா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 76-வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றினார் - புதிய கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (30-06-2024) குஜராத்தின் நாடியாட்டில் உள்ள கேதா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் (கேடிசிசி) 76 வது வருடாந்திரக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அத்துடன் அங்கு ரூ. 18 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்ட வங்கியின் புதிய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். குஜராத் மாநிலக் கூட்டுறவு அமைச்சர், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (NAFED) தலைவர் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் வெற்றிகரமான வழிகாட்டுதலின் கீழ் அமுல் நிறுவனம் தொடங்கப்பட்ட மாவட்டம் கேதா என்று கூறினார். கூட்டுறவின் மூலம் வளம் என்ற இலக்கை அடைவதற்கு அமுல் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது

3 குற்றவியல் சட்டங்கள் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

 இந்தியாவில் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாகிற  சூழலில், இந்தச்சட்டங்கள் குறித்து 5.65 லட்சம் காவலா்கள், சிறைத்துறைப் பணியாளர்கள், தடயவியல் பணியாளர்கள், நீதித் துறை பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் சுமாா் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்குப் பயிற்சியளித்துத் தயாா்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடா்பாக புதிய சட்டங்களின் அமலாக்கம் ஏற்படுத்தும் நோ்மறையான தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யப் பயிற்சியளிக்கப்படுமென்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்தாண்டு நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டங்கள், குடியரசுத் தலைவரி

பூட்டிய வீடுகளில் இரவுத் திருட்டில் சிக்கி தலைமறைவான பாஜக நிர்வாகி கைது

பூட்டிய வீடுகளில் இரவுத் திருட்டில் சிக்கி தலைமறைவான பாஜக நிர்வாகி கைது.   இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் திருட்டில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் துணைத்தலைவர் பிரபாகரன் கைது அவரிடமிருந்து ரூபாய் 51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் நகைகளை உருக்கிய தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடித்த பணத்தில் ஒரு கோடி மதிப்பில் அவரது கிராமத்தில் சொகுசான வீடும் கட்டியுள்ளார் அதன் விபரம் வருமாறு:-  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை  சுற்றுவட்டாரத்தில்  பூட்டிய வீடுகளில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்ததாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் துணைத்தலைவர் பிரபாகரன் மீது புகார் எழுந்ததையடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர் பிரபாகரனைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய்.51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் நகைகளை உருக்கிய தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் க