முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பிடிபடும் கள்ளத்துப்பாக்கிகள் சோதனை நடந்தால் எண்ணிக்கை கூடும்

 


சிறப்புச்செய்திகள்: சுந்தரம் பழனிவேலு, சமூகச்செயல்பாட்டாளர் மற்றும் சுற்றுசூழல் பாதுகாவலர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் ஆய்வாளர் தெய்வம், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நடத்திய அதிரடிச் சோதனையில் 25 க்கும் மேற்பட்ட கள்ளத்துப்பாக்கிகளைக் கைப்பற்றியதுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுயிடங்களில் நாட்டுத்துப்பாக்கிகளை வீசிவிட்டு செல்வது தொடர்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட கள்ளத் துப்பாக்கிகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரப் பகுதியில் அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கியுடன் ஒரு மாதம் முன்பு ஒருவர் பிடிபட்டார். அவரை விசாரித்ததில் ரெட்டியபட்டி பகுதியில் நாட்டுத் துப்பாக்கியைத் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில் அனுமதியின்றி அதிகம் பேர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து காவல்துறை டி.ஐ.ஜி.,முத்துச்சாமி, திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா ஆகியோர் அனுமதியின்றி பயன்பாட்டிலுள்ள நாட்டுத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்ய திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி., வினோத் தலைமையில் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபடச் செய்தனர். முதல் கட்டமாக சிறுமலை பகுதி, நத்தம் அருகேயுள்ள கரந்தமலைப் பகுதி, கொடைக்கானல் கீழ்மலை அடிவாரப்பகுதியில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்கவேண்டும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறை, வருவாய்த்துறை உதவியுடன் காவல்துறையினர் நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளவர்களைக் கண்டறியத்தொடங்கிய நிலையில் சாணார்பட்டி அருகே சிறுமலை அடிவாரம் தவசிமடை ஓடைப்பகுதியில் முதல் கட்டமாக 17 துப்பாக்கிகள் வீசப்பட்டுக் கிடந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சில தினங்களில் மேலும் பத்துத் துப்பாக்கிகள், ஒரு பேரல் தவசிமடை ஓடைப்பகுதியில் வீசப்பட்டுக் கிடந்தது. அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரில் சாணார்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பொது இடத்தில் கிடந்த நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். கடந்த இருதினங்களாக திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான குழுவினர் சிறுமலைப் பகுதியில் தண்டோரா மூலம் மலைக் கிராமங்களில் அறிவிப்பு வெளியிட்டும், மைக் மூலமும் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துள்ளவர்கள் தாங்களே முன்வந்து ஒப்படைக்கவேண்டுமென எச்சரித்தும் வந்ததையடுத்து நேற்றுக் காலை சிறுமலை மலைப்பகுதியிலுள்ள கடமான்கோம்பை பகுதியில் நேற்று 28 அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் இரண்டு பேரல்கள் பொது இடத்தில் வீசப்பட்டுக் கிடந்ததைக் கண்டனர். இவற்றை திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுவரை சிறுமலை அடிவாரம் மற்றும் மலைப்பகுதிகளில் 55 அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நத்தம் அருகேயுள்ள கரந்தமலைப் பகுதி, சிறுமலை அடிவாரம் அ.வெள்ளோடு பகுதியில் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, ஆடலூர், தாண்டிக் குடி மற்றும் கொடைக்கானல் பகுதியிலுள்ள மலைக்கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. இந்தப் பகுதிகளில் காட்டெருமைகள், பன்றிகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. அதில் சிலநேரம் விவசாயிகளும் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அதேநேரம் உரிமம் பெறாமல் அனுமதியின்றி ஒருசிலர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக. காவல் துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்போரை கைது செய்து, துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்யும்படி காவல்துறை மாவட்ட சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சந்தேகத்துக்கு உரிய கிராமங்களில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் செய்த நிலையில் நேற்றுக் காலை திண்டுக் கல்லை அடுத்த தவசிமடை அருகே நொச்சிஓடைப்பட்டியில் வனப்பகுதியில், துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன்பேரில் காவல்துறை அங்கு விரைந்து சென்று, வனப்பகுதியில் சோதனை நடத்தியபோது வனப்பகுதியில் 14 நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட்டுக் கிடந்தன. அவை அனைத்தும் உரிமம் பெறாதவை ஆகும். இதையடுத்து காவல்துறை அவற்றைப் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். காவல்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது குறித்து காவல்துறை சூப்பிரண்டன்டு ரவளிபிரியா கூறுகையில், நத்தம், சிறுமலை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களில் சோதனை நடத்தப்படும். அதில் யாராவது, உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக் கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திண்டுக்கல் சிறுமலைப் பகுதியில் அனுமதியில்லாத நாட்டுத் துப்பாக்கி பயன்பாடு அதிகரித்ததையடுத்து தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்க காவல்துறை எச்சரிக்கைவிடுத்தனர். கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே உள்ள விராலிபட்டியை சேர்ந்தவர்கள் ஞானசேகர் (வயது 50), பவுல்ராஜ் (வயது 36). கூலித்தொழிலாளிகள். தங்களது வீட்டின் அருகே சுற்றித்திரிந்த ஒரு மயிலை துப்பாக்கி (ஏர்கன்) மூலம் சுட்டுக்கொன்றதுகுறித்து தகவலறிந்த சிறுமலை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அருகேயுள்ளது சாணார்பட்டி கிராமம். அங்கு வசிக்கும் பரதன் என்பவர் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணையில் இறங்கிய காவல்துறை அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றி, பரதனை கைதுசெய்தனர். மேலும், அவர் முறையாக உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமம் ரத்து செய்யப் பரிந்துரை செய்யப்பட்டது.பின்னர் அங்கு மயில் இறைச்சியை சமைப்பதற்காக தயார் செய்து கொண்டிருந்த ஞானசேகர், பவுல்ராஜ் ஆகியோரை மடக்கிபஸ பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ மயில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மயில் வேட்டைக்கு பயன்படுத்திய 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சாணார்பட்டிப் பகுதியில் மேலும் சிலர் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்திவருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில், சாணார்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டதுநிலையில் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி வினோத் தலைமையிலான குழுவினர், சாணார்பட்டி, சிறுமலை, தவசிமடை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, தவசிமலை கிராமம், கருந்தண்ணி ஓடை அருகே நாட்டுத் துப்பாக்கிகள் கிடப்பதாகத் தகவல் கிடைக்க, சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்விதமாக 14 நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரில்லாமல் கிடந்தன. தவசிமடை கிராம நிர்வாக அலுவலகரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறை அது குறித்து விசாரித்துவருகிறார்கள்.இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ரவளி ப்ரியா கூறும் போது, ``திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சின்னமலையூர், பெரியமலையூர், கரந்தமலை, கொடைக்கானல் அருகேயுள்ள மண்ணவனூர், பூண்டி, கூக்கால், தாண்டிக்குடி, இதே போல, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பாச்சலூர் ஆகிய பகுதிகளில் சிலர் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடரும். யார் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கடந்தமாதம் சிறுமலை வேம்பண்ணையில் மான்வேட்டையில் ஈடுபட்டு அங்கு வைக்கப்பட்ட CCTV கேமரா உதவி மூலம் 3 நபர்கள் துப்பாக்கியுடன் பிடிபட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறுமலையில் துப்பாக்கி வைத்து குற்றம் செய்தவர்கள் பட்டியல் அதிகம். இந்த கள்ள துப்பாக்கியை வைத்து வேட்டையாடுதல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவுநேரங்களில் அங்கு தங்கி இருந்ததால் தெரியும். தொடர் துப்பாக்கிச் சத்தம் விடியவிடிய ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். தற்போது எடுக்கும் நடவடிக்கை என்பது வரவேற்கத்தக்கதுதான் ஆனால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கும் பதிலாக அது அமைய வேண்டும். 01. துப்பாக்கிகள் முழுமையாக பிடிக்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமா அல்லது துப்பாக்கி வைத்து இருந்தவர்கள் செய்த குற்றங்கள் கண்டுபிடிக்க படுமா? 02. இவர்கள் இந்த துப்பாக்கியை கொண்டு இதுவரை வேட்டை ஆடிய காட்டு மிருகங்கள்...அதன் அடிப்படையில் குற்ற வழக்குகள்..விபரம் 03. இந்த துப்பாக்கி வைத்து உள்ளவர்கள் குற்ற பின்னணி மற்றும் தொடர்புகள். 04. இந்த நட்டு துப்பாக்கியை தவிர பிற துப்பாக்கிகள் வைத்து இருப்பவர்கள் கண்டு பிடிக்கப்படுவார்களா? 05. சுற்று சூழல் மற்றும் அழிந்து வரும் இனங்கள் (பறவை மற்றும் விலங்குகள்) எல்லாவற்றையும் அமைதியாக பல ஆண்டுகளாக வேட்டையாடி கொண்டுள்ளனர் இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? 06. சிறுமலை மலை உள்பகுதிகலில், சிறுமலையை சுற்றியுள்ள மற்றும் சிறுமலை தொடர்புள்ள பகுதிகளை கண்காணிப்பு செய்வதால் சுமார் 5000 க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பரு பலரின் பேச்சாகும் அவற்றை முழு விசாரணை அல்லது சோதனை செய்து பறிமுதல் செய்யவேண்டும். வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972. இச்சட்டம் காட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது; இவற்றோடு இணைக்கப்பட்ட துணை நடவடிக்கைகள் அல்லது இடைப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகியனவற்றுக்கும் இச்சட்டம் பொருந்தும் மேலும் இந்தியா படைக்களச் சட்டம் 1952 ஆம் ஆண்டு படியும் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு வனத்துறைக்கும் காவல்துறைக்கும் உள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்