முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடலுக்குள்ளும் தொல்லியல் ஆய்வு. மீளும் 2000 ஆண்டு கடந்த தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்

கடலுக்குள்ளும் தொல்லியல் ஆய்வு. மீளும் 2000 ஆண்டு கடந்த தமிழ்


வரலாற்றுக் களஞ்சியம் 







 கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க இருக்கும் நிலையில். முக்கியமான தொல்லியல் ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் முடிவையும் அரசு எடுக்கும் நிலையிலுள்ளது.

மதுரை தென்கிழக்கே 20 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கீழடி கிராமம். இங்கு ஏழாம் கட்ட  அகழ்வாய்வுகள் மூலம் 2000 -2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பலவற்றைக் கண்டுபிடித்தது.







கீழடி அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருட்களில்  நடத்தப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்றானது. ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பான காலம்

கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வு நூல் எழுதிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  ஆய்வில் உடன் இருந்தார். இங்கு அருங்காட்சியகம் அமைப்புப் பணிகளையும், கட்டுமானங்களையும் நேரில் ஆய்வு செய்தனர்.

அங்கு உலகத்தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கப்படுமென தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். இந்த நிலையில் கீழடி போலவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு கடல் பகுதிகளில் வரலாற்று புதையல்கள், படிமங்கள் ஆராய்ச்சி செய்யப்படாமலேயே உள்ளன.








கீழடியிலேயே 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுத் தொன்மையான பொருட்கள் கிடைக்கும் போது, கடலுக்குள்ளே இதை விட பழமையான வரலாற்று சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள்.  பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு விரைவில் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை நடத்தும் நிலையுள்ளது.

கீழடிதமிழர்களின் தொல்லியல் வரலாற்றுக்கு கீழடி ஒரு சான்று. ஆனால் இது மிகப்பெரிய சோற்று பானையின் சின்ன பருக்கைதான். இன்னும் பல வரலாற்று பின்னணிகளை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதால் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சி  சவாலான காரியம். வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாடு மக்கள் 2600 வருடங்களுக்கு முன்பு மேற்கொண்ட கடல் சார்ந்த வர்த்தகம், கடல் சார்ந்த பயணங்கள் குறித்த உண்மையான வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் நிகழும். இந்தப் பணிகளை தமிழ்நாடு அரசு செயல் வடிவம் கொடுக்க ஆய்வு செய்கிறது.

 இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம்  தொல்லியல் ஆராய்ச்சி முன்பே கடற்கரைக்கருகே நடத்தப்பட்டு வருகிறது. கடற் கரையில், சிறிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடந்துவருகிறது. இதேபோல் மற்ற வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் விரைவில் ஆராய்ச்சியை தொடங்க உள்ளது நல்ல முன்னேற்றமாகும். இதேபோல் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்ற புதுப்பிக்கப்படும் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் அங்கிருந்த கல்வெட்டு ஒன்றைப் படித்த நிகழ்வும் நடந்தது.கல்வெட்டில் கண்ட புதையல் குறித்து மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் 

நேற்று, மாண்புமிகு தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுடன் சென்று திருமலைநாயக்கர் மஹால் அரண்மனையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட போது

அரண்மனையின் நாடகசாலைப் பகுதியைப் பார்த்துவிட்டு, உள்ளறையில் வைக்கபட்டிருந்த சிலைகளையும்  கல்வெட்டுகளையும் பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு கல்வெட்டின் அருகில் நின்று நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவ்விடத்தைக் கடந்த. சிறிது நேரத்தில் ஆய்வுப்பணி முடிந்தது.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, அரசாங்கக் கருவூலத்தின் மூலம் திருவள்ளுவருக்கு தங்க நாணயத்தை வார்த்து வெளியிட்ட மாமனிதர், எல்லீஸ் பதித்த கல்வெட்டு அது 1818 ஆம் ஆண்டு சென்னையில் கடுங்குடிநீர் தட்டுப்பாடு நிலவியபோது, எல்லீஸ் அவர்கள்  மக்களின் குடிநீர் தேவையைக் கருதி 27 கிணறுகளை வெட்டிவித்தார். அதில் ஒரு கிணறு ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயில் அருகில் வெட்டப்பட்டது. அக்கிணற்றின் கைப்பிடிச்சுவற்றில் கல்வெட்டு ஒன்றினை பதித்துள்ளார்.

வழக்கமான ஆங்கிலேயர் பாணியில் இல்லாமல், அழகிய தமிழ் செய்யுள் வடிவில் இக்கல்வெட்டினை வடிவமைத்தார். அதில் ”இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணு நாட்டிற் குறுப்பு” என்ற திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.அக்கெல்வெட்டுதான் இப்பொழுது திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்திலே இருக்கிறது.

பல நூறு அல்லது  ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட அக்குறள் எத்தனையாவது வரியிலே இருக்கிறது எனத் தேடி, அதனை 34 ஆவது வரியில் கண்டு விரல்தொட்டு வாசித்தார் அமைச்சர்.

அதன்பின் எல்லீஸ் பற்றி பங்களிப்பு செய்த பலரைப்பற்றி பேசிக்கொண்டோம். அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் துவங்கி ஐராவதம் மகாதேவன், வேதாசலம், தாமஸ் டிரவுட்மென், ஆ.இரா.வெங்கடாசலபதி வரை பேசியபடி விடைபெற்றோம்.

நாற்பது வயது நிறைவுறும் வரை நூற்களை எழுதி வெளியிடக்கூடாது என கருதியிருந்த எல்லீஸ் நாற்பத்தி ஓராவது வயதில் சட்டென இறந்து போனது தமிழுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு.

செய்தித்தாளினைப் போல கல்வெட்டினை படிக்கிறார் தமிழக அமைச்சர். ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சரோ, இந்தியாவில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள 80 000 கல்வெட்டில் பாதிக்கும் மேல் பதிப்பிக்கப்டாமல், படிக்காமல் கிடக்கிறது. அதற்குப் பணியாளர்களை நியமியுங்கள் என்றால் ஒருவரைக்கூட நியமிக்க மாட்டேன் என்கிறார்.

தங்கம் தென்னரசைப் பாராட்டிய கையோடு பிரகலாத் சிங் பட்டேலுக்கு நீண்ட கடிதம் எழுத ஆரம்பிக்கிறேன்.

வரிகளை விரல்களால் தொடுவது, அதனைப் பொறித்தவனது பாதங்களைத் தொடுவதைப் போன்றது. கிணறுகளை மண்மூடலாம். நிரம்பிய நீர் வற்றலாம், தமிழுக்கு தொண்டாற்றியவனின் புகழ் ஒருபோதும் மறையாது.

எல்லீஸ் புகழ் நீடுறும். என மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன். முடித்தார்.

தமிழகத்தின் அறிவார்ந்த அமைச்சர்கள் தற்போது வந்த நிலையில் சரியான பாதையில் பயணிக்கின்றனர். மதியூகி மந்திரிகள் வரவு  கடந்த காலத்தில் இது இல்லாமல் இருந்த காரணத்தால் இப்போது இது பலருக்கும் ஆச்சரியம் .கீழடி அகழ்வாய்வுகளில்  கண்டெடுக்கப்பட்ட‌ பொருட்களின் கார்பன் மாதிரிகளின் மீது அமெரிக்காவில் நடந்த சோதனையில் அவைகள் சுமார் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனக் கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்