பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை
ஆவணங்கள் பதிவு செய்யும் போது
எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது
அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம் பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது.
தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதில், ஆவணத்தின் இறுதிப் பக்கத்தில் 2 சாட்சிகளின் பெயர், தந்தை பெயர், முகவரி, அடையாள அட்டை, தொலைபேசி எண் இடம் பெற்றிருக்க வேண்டும். கீழ்ப்புறப் பகுதியில் சான்று செய்தவர் என்று குறிப்பிட்டுள்ளதில், பதிவு ஆவண எழுத்தர் புகைப்படம், அவரது கையொப்பம். ஆவண எழுத்தர் பெயர், முகவரி, தொலைபேசி எண்,
ஆவண எழுத்தர் உரிமம் எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்த ஆவணத்தின் கடைசி பக்கத்தில் முழு விவரம் இல்லா விட்டால் பத்திரப்பதிவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் போலியான நபர்கள் ஆவணத் தயாரிப்பில் ஏதாவது தொடர்பு இருப்பின் அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமென்று பதிவுத்துறை சார்ந்த நபர் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்வது இலஞ்சம் பெறும் நடவடிக்கை தடுக்க ஏற்பட்ட நிலையில் இலஞ்சப் பணம் பெற்றுக் கொடுக்கும் சில பத்திர எழுத்தர்கள் சமீபத்திய காலத்தில் படித்து பணிகள் இல்லாமல் சில வழக்குரைஞர்கள் பத்திரம் எழுதி அதை பதிவு உரிமம் பெறாமல் சில ஆடம் பதிவு நிலையம் நடத்தி பதிவு செய்து வருகின்றனர் இது பதிவு ஆவண எழுத்தர்கள் பிழைப்பு கெடுவதாகவும் சமீபத்திய பேச்சு இருந்த நிலையில் இப்போது இந்த சுற்றறிக்கை வந்த நிலையில் வழக்குரைஞர்கள் கையொப்பம் பெற்று பதிவு செய்யும் தரகர்கள் குறையும் நிலை வரும் பதிவு ஆவண எழுத்தர்கள் இனிமேல் வருவாய் ஈட்டும் நிலையில் இலஞ்சம் குறையுமா என்பது எழுவினா உயில் சாசனம் பதிவு செய்யும் போதும் இப்போது உள்ள இந்த சுற்றறிக்கையில் மற்றொரு வழிகாட்டி நடைமுறையோ அல்லது தெளிவுரை தேவை என்ற நிலை தான் உள்ளது.
கருத்துகள்