முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களின் மனங்களில் இன்னும் வாழும் நடிகர் எம்ஜிஆருக்கும் அரசியல் எம்ஜிஆருக்கும் நீண்ட வித்தியாசம்

மக்களின் மனங்களில் இன்னும் வாழும்


நடிகர் எம்ஜிஆருக்கும் அரசியல்  எம்ஜிஆருக்கும் நீண்ட வித்தியாசம்  


அவர் ஆட்சி அமைத்த காலத்தில் 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் வர வேண்டுமென்றால் பல மணி நேரம் பயணம் செய்த பிறகே அடையமுடியும்.

அப்போது தமிழகத்தில் அப்படிப்பட்ட வகையில்தான் மாவட்டங்கள் பரந்து விரிந்திருந்தன.

1965 ல் தர்மபுரி மாவட்டமும் 1974 ல் புதுக்கோட்டை மாவட்டமும் புதிதாக உருவாகின.

 எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட நிர்வாகத்தை மக்கள் எளிதாக அணுகும் வகையில் மாவட்டங்களை பிரிக்கும் பணி வேகமாக ஆரம்பித்தது பழைய கிராம கர்ணம் ஒழிப்பு செய்து கிராம நிர்வாக அலுவலர் பணி ஏற்படுத்தியவர்

ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் கோயமுத்தூரிலிருந்து பிரித்து ஈரோடு மாவட்டத்தை உருவாக்கினார். இராமநாதபுரம் பிரித்து விருதுநகர் மற்றும் சிவகங்கை உருவாக்கி  



அதனைத் தொடர்ந்து தாம் மறைவதற்குள் பத்தாண்டுகளில் எத்தனை மாவட்டங்களை உருவாக்கிவிட்டுப் போனார் எம்ஜிஆர் என்பதை கண்டால் புரியும். மெட்ராஸ் மாகாணம்

125 ஆண்டு கால வரலாற்றிலும் 75 வருடம் கடந்த நமக்கு 1977 ஆம் ஆண்டு வரை சுதந்திர காலத்திற்கு பிறகு தமிழகத்தில் வெறும் நான்கே பல்கலைக்கழகங்கள்.



எம்ஜிஆர் தாம் மறைவதற்குள் தமிழகத்தில் எத்தனை புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கினார் என்பதை  கவனிக்கவும். கூத்தாடி என்று கோமாளிகளால் கிண்டல் அடிக்கப்பட்ட எம் ஜி ஆரின் இன்னொரு முகம் அறியலாம்.

தமிழ் மொழிக்கென்றே தனிப் பல்கலைக்கழகம் கண்டவர்.

ஒரு சாதாரண சினிமாவை 200 கோடியில் தயாரிக்கும் காலகட்டத்தில் இலட்சோப லட்சம் குழந்தைகளுக்கு 100 கோடி ரூபாய் செலவில் சத்துணவுத் திட்டத்தை நிறைவேற்ற அவர் பட்ட பாட்டைச் சொன்னால் எளிதில் யாருக்கும் புரியாது.

மனைவியுடன் சைக்கிளில் போனவனை டபுள்ஸ் என்றும் சைக்கிளில் லைட் இல்லை என்றும் பிடித்துக் கொண்டு டைனமோ இல்லை என பிடித்துப் போய் வெளுக்கப்பட்டவர்களை கேட்டுப்பாருங்கள் ! அப்போது சட்டசபையில் கம்யூனிஸ்ட் தலைவர் கூத்தகுடி.ச.சண்முகம் பேசிய போது அதற்கு தீர்வு சட்டமானது வரலாறு. எம்ஜிஆரின் மகிமை தெரியும்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான குடிசைகள் முதன்முறையாக ஒரு லைட் சர்வீஸ் மூலம்  மூலம் மின்சாரம் என்பதைப் பார்த்தது 'ஒளிவிளக்கு' எம்ஜிஆரின் ஆட்சியில்தான்.

40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட சாதனை. 




ஆண்ட்ராய்டு போனில் வீடியோ காலில் பேசுகிற தலைமுறையிடம், வெளியூருக்கு போனில் பேச ட்ரங்க் கால் புக் செய்துவிட்டு இரண்டு மூன்று மணி நேரம் தந்தி ஆபீசில் காத்திருந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட சாதனைகள் ஒவ்வொன்றும் இன்றைய மக்கள் பார்வைக்கு சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அது அளப்பரிய சாதனை அந்த நாயகன் புரட்சி நமது சமூகத்தில் நல்ல விடியல் அவரை அவரது பிறந்த நாளில் நினைவில் கொள்வோம். அதை பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்தநாளில் பிரதமர் நினைவுகூர்ந்தார்


பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி  நினைவுகூர்ந்தார்.

ட்விட்டரில் பிரதமர் தமிழில் பதிவிட்டிருப்பதாவது: 

”பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன”என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...