முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்புத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவராக திமுகவின் கோகிலா ராணி நாராயணன் போட்டியின்றித் தேர்வு

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்கள் குறித்து கட்சிகள் முதல் பட்டியல் அறிவிப்பை வெளியிட்ட போது


ஒரு நகராட்சி, 3 பேரூராட்சிகளில் அறிவிப்பு இல்லை.


சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு நகராட்சிகளில் சிவகங்கையில் நகரச் செயலாளர் மற்றும் பருந்துப் பார்வை இதழ்  ஆசிரியர் துரை ஆனந்தும், மானாமதுரை நகராட்சிக்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடியையும் தி.மு.க., அறிவித்த நிலையில் தேவகோட்டை நகராட்சி  காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. காரைக்குடி நகராட்சிக்கு மட்டும் காலை பத்து மணி வரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 11 பேரூராட்சிகளில் 8 பேரூராட்சிக்கு மட்டுமே தலைவர் பெயர்கள் தி.மு.க., வில் அறிவிக்கப்பட்டது.





சிங்கம்புணரி -அம்பலமுத்து, நெற்குப்பை -புசாலன், கோட்டையூர்- கே.எஸ்.கார்த்திக்சோலை, கானாடுகாத்தான்- ரா.ராதிகா, புதுவயல்- முகமதுமீரான், கண்டனுார்-சி.சங்கீதா, திருப்புவனம்- சேங்கை மாறன், இளையான்குடி- செய்யதுஜமீமா அறிவிக்கப்பட்டனர். திருப்புத்துார்,


நாட்டரசன்கோட்டை, பள்ளத்துார்  பேரூராட்சிகள் குறித்த அறிவிப்பு காலை வரை வெளியிடப்படவில்லை. காரைக்குடி நகராட்சி உட்பட அறிவிக்கப்படாத 3 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்ற தி.மு.க., வினர் வேட்பாளர் அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.          காரைக்குடி நகராட்சிந் தலைவர் பதவிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த மூன்று பேர் கடும் போட்டி நிலவ தலைவர் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பில் இழுபறி நீடிக்க காலை பத்து மணிக்கு மேல் தான் அறிவிப்பு வந்த நிலையில்.





காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் தி.மு.க., 18, அ.தி.மு.க., 7, காங்.,3, இ.கம்யூ.,1, சுயேச்சை 7 இடங்களைப் பிடித்துள்ளது.நேற்று முன்தினம், கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடந்த அன்றே தலைவர் பதவி யாருக்கென அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில் அறிவிப்பு வரவில்லை. தி.மு.க.,வைச் சேர்ந்த மூன்று முக்கிய நிர்வாகிகள் தலைவர் பதவிக்கு மோதினர்.




தமிழகத்தின் பல இடங்களில் தி.மு.க., சார்பில் நகராட்சி, மாநகராட்சி, மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், காரைக்குடி நகராட்சி தலைவர் குறித்து வெளியிடப்படாதது தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்த. வெற்றி பெற்ற கவுன்சிலர்களை ஒவ்வொருவரும் தனித்தனிக் குழுவாக அழைத்துச் சென்று பாதுகாத்து வரும் நிலையில். திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவராக கோகிலாராணி நாராயணன் அறிவிக்கப்பட்ட உடன் தேர்வு செய்யப்பட்டார். கோகிலாராணியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு வந்தது. தலைவர் கோகிலா ராணியின்  கணவர் கே‌.எஸ். நாராயணன் நீண்ட காலமாக  திமுக இளைஞர் பிரிவின் முக்கியப் பொறுப்பிலிருந்த மூத்த கட்சிப் பிரமுகர் என்ற நிலையில்   கட்சியின் புதிய நபர்கள் பலரின் செயற்கையான போட்டியிருந்த போதும் , தலைமையின் நேரடிப் பார்வை மூலம்  வெற்றி கண்டார். அதை செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கு  பிப்ரவரி 19 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதில் 11 வது வார்டில் திமுக சார்பில்  தற்போதய தலைவர் கோகிலாராணி நாராயணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். இந்நிலையில்  பெண்களுக்கென திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி ஒதுக்கீட்டால் திமுக சார்பில் 7 பெண்கள் உள்ளிட்ட 14 வார்டுகளை திமுக கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி இரண்டு வார்டுகளைக் கைப்பற்றியதை அடுத்து திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிப் போட்டிக்கு செயற்கையான போட்டி நிலவி வந்த போதும் கட்சி சீனியர் என்ற நிலையில்  தலைவர் கோகிலா ராணி நாராயணன் தான் அறிவிக்கப்பட வாய்ப்பு என்பது வெற்றி பெற்ற போதே அறிந்த நிலையில் ஒரு போலியான போட்டி நிலவியது உண்மை மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சி, நாராட்சிகளில் தலைவர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் திருப்பத்தூரில் இன்று காலை வரை அறிவிக்காமல் இருக்க பல அரசியல் காரணங்களிருக்க. ஆரம்பம் முதலே கோகிலராணிக்குதான் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி கிடைக்கும் என திமுக கட்சியினரிடையே கூறப்பட்டு வந்த நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில் கட்சி மேலிடம் கோகிலாராணி நாராயணனை பேரூராட்சி மன்றத் தலைவராக அறிவித்து அறிக்கை வெளியிட்டது. பேரூராட்சி மன்ற தலைவராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கோகிலாராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள் கதராடை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோகிலாராணியும் கவுன்சிலர்களுக்கு கதராடை அணிவித்து தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். ..    திமுக கூட்டணியில் கும்பகோணம் மாநகராட்சி  கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 

கட்சியின் நகர துணைத் தலைவரானவர் ஆட்டோ ஓட்டுனர்.. சரவணன் தேர்வானார் உள்ளாட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியின்றி தேர்வு.. அல்லது இருவர் போட்டியிட்டு நடந்த தேர்தல்.. அடுத்து

, இரு வேட்பாளர்கள் சமபலம் கொண்டதால் குலுக்கல் முறையில் தேர்வு

அடுத்ததாக கவுன்சிலர்கள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தலே தள்ளிவைப்பு..


இதில் கடைசியாக கூறிய ரகம் எவ்வளவு இடங்களில் நடக்கின்றன என்று பார்த்தால் கண்டனூர் பேரூராட்சி துணை தலைவர் உள்ளடி வேளை காரணமாக பதவிக்கு அறிவிப்பு வந்த பிறகு கிடைக்கவில்லை . பூவிருந்தவல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நிலையில்.  திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளரை போட்டியிட வைத்ததால் கட்சி தலைமை உடனடியாக நடவடிக்கை என பல இதில் உண்டு



. இதில் தேவகோட்டை பகுதியில் நடந்த நிகழ்வு வேறு விதம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் சாலை பொன்னம்மாள் வெற்றி பெற்றுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அன்னவாசல் பேரூராட்சி 1 வது வார்டு அதிமுக வேட்பாளர் சாலை. பொன்னம்மா 51 வாக்குகள் வித்தியாசத்தில் 

வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைவர் வேட்பாளராக முன்னிறுத்திய நிலையில் தொடர் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம், தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்..

தங்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில், 'உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று  சென்னை  உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த