முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர், புனே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்

புனே சென்ற பிரதமர், புனே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்

புனே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலையை அவர் திறந்து வைத்தார்

பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ஆர்.கே.லட்சுமண் கலைக்கூடம், அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்

‘’நம் அனைவரின் உள்ளங்களிலும் உறையும் சிவாஜி மகராஜின் இந்தச் சிலை, இளம் தலைமுறையினர் இடையே தேசப்பற்று எழுச்சியை ஏற்படுத்தும்’’

‘’ கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், வாகனத் துறையில் புனே தனது அடையாளத்தை தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், புனே மக்களுக்கு நவீன வசதிகள் தேவையாக உள்ளன. புனே மக்களின் இந்த தேவையை மனதில் கொண்டு எங்கள் அரசு பணியாற்றி வருகிறது’’

‘’ இந்த மெட்ரோ புனேயில் போக்குவரத்தை எளிதாக்கும், மாசு மற்றும் நெரிசலிலிருந்து நிவாரணம் அளிக்கும், புனே மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும்’’


‘’ துரிதமாக வளர்ச்சியடையும் இன்றைய இந்தியாவில், வேகம் மற்றும் அளவு மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனால் தான் எங்கள் அரசு பிஎம் விரைவு சக்தி பெருந்திட்டத்தை தயாரித்துள்ளது’’


நவீனத்துவத்துடன், புனேயின் பழமையான பாரம்பரியத்துக்கும், மகாராஷ்டிரத்தின் பெருமைக்கும்

பிரதமர் திரு . நரேந்திர மோடி புனேயில் இன்று, புனே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தத்துடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். மகாராஷ்டிர ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் திரு .அஜீத் பவார், மத்திய அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு .பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் புனேயின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். லோகமான்ய திலகர், சபேக்கர் சகோதரர்கள், கோபால் கணேஷ் அகார்கர், சேனாபதி பாபத், கோபால் கிருஷ்ண தேஷ்முக், ஆர்.ஜி. பண்டார்கர், மகாதேவ் கோவிந்த ரானடே ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.ராம்பாகு மால்கி மற்றும் பாபா சாகிப் புரந்தரே ஆகியோரையும் அவர் வணங்கினார்.


முன்னதாக, புனே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி மகராஜின் சிலையைத் திறந்து வைத்த பிரதமர், மகத்தான வீர மன்னருக்கு மரியாதை செலுத்தினார். ‘’நம் அனைவரின் உள்ளங்களிலும் உறையும் சிவாஜி மகராஜின் இந்தச் சிலை, இளம் தலைமுறையினர் இடையே தேசப்பற்று எழுச்சியை ஏற்படுத்தும்’’ என்று அவர் கூறினார்.


புனே மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை முன்பு தாம் தொடங்கி வைத்ததை குறிப்பிட்ட பிரதமர், ‘’ புனே மெட்ரோ திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட என்னை அழைத்தது எனது பாக்கியமாகும். இப்போது அதை தொடங்கி வைக்கும் வாய்ப்பையும் நீங்கள் எனக்கு வழங்கியுள்ளீர்கள். இத்திட்டம், குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ள செய்தியை எனக்கு இது வழங்கியுள்ளது’’ என்றார்.  ’ ‘’கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், வாகனத் துறையில் புனே தனது அடையாளத்தை தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், புனே மக்களுக்கு நவீன வசதிகள் தேவையாக உள்ளன. புனே மக்களின் இந்த தேவையை மனதில் கொண்டு எங்கள் அரசு பணியாற்றி வருகிறது’’ என்று திரு. மோடி தெரிவித்தார்.


2014 வரை சில நகரங்களில் மட்டும் மெட்ரோ சேவை வசதி இருந்ததாக குறிப்பிட்ட பிரதமர், இன்று 24-க்கும் மேற்பட்ட நகரங்கள் மெட்ரோ ரயில் திட்ட பயனை பெற்றுள்ளது அல்லது அதன் பயன் விரைவில் கிடைக்க உள்ளதாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில், மும்பை, தானே, நாக்பூர், பிம்ப்ரி சின்ச்வாட்  புனே ஆகியவை பயனடைந்துள்ளன. ‘’ இந்த மெட்ரோ புனேயில் போக்குவரத்தை எளிதாக்கும், மாசு மற்றும் நெரிசலிலிருந்து நிவாரணம் அளிக்கும், புனே மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும்’’ என்று பிரதமர் கூறினார்.மெட்ரோ மற்றும் இதர பொது போக்குவரத்து சாதனங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பது சவாலாகவும், அதேசமயம் வாய்ப்பாகவும் உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். நகரங்களில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு , துரித மக்கள் வாகன முறையே சரியான பதிலாக இருக்கும். நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில், பசுமை போக்குவரத்து, மின்சார பேருந்துகள், மின்சார கார்கள், மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அதிக அளவில் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறிய பிரதமர், மக்கள் அனைத்து போக்குவரத்துக்கும் ஒரே அட்டையைப் பயன்படுத்தும் நிலையை சுட்டிக்காட்டினார். கழிவிலிருந்து வருவாய் உருவாக்கும் கோபர்தான் திட்டம், உயிரி எரிபொருள் நிலையங்கள், எல்இடி பல்பு பயன்பாடு ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.

நகரங்களின் வாழ்க்கையில் நதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய உயிர்நாடியைப் பராமரிக்க வேண்டியது அவசியம் என்றார்.

நாட்டில் உள்கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சி என்னும் புதிய அணுகுமுறை வளர்ந்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், எந்த நாட்டுக்கும் நவீன உள்கட்டமைப்பு மேம்பாடு மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்டார். ‘’ துரிதமாக வளர்ச்சியடையும் இன்றைய இந்தியாவில், வேகம் மற்றும் அளவு மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் எங்கள் அரசு பிஎம் விரைவுசக்தி பெருந்திட்டத்தை தயாரித்துள்ளது’’ என்றார்.

நிறைவாக, ‘’நவீனத்துவத்துடன், புனேயின் பழமையான பாரம்பரியத்துக்கும், மகாராஷ்டிரத்தின் பெருமைக்கும் நகர்ப்புற திட்டமிடுதலில் சமமான இடம் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று பிரதமர் மனநிறைவை வெளியிட்டார்.

புனேயில் நகர்ப்புற போக்குவரத்துக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் பயனாக, புனே மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. 2016 டிசம்பர் 24-ம்தேதி பிரதமர் இதற்கு அடிக்கல் நாட்டினார். 32.2 கி.மீ நீள புனே மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 கி.மீ தூரத்தை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். முழு திட்டமும் ரூ. 11,400 கோடி செலவில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. கார்வாரே மெட்ரோ நிலையத்தில், கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பிரதமர், அனந்த்நகர் மெட்ரோ நிலையம் வரை ரயில் பயணம் மேற்கொண்டார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த