முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை ,கோயம்புத்தூர், மதுரை மாநகரில் பெண் மேயராக பதவியை ஏற்கின்றனர்

மாநகரத் தந்தை (மேயர்; Mayor, "பெரிய" எனும் இலத்தீன் மொழிச் சொல் மேயோரிலிருந்து  வந்ததென்று பல நாடுகளிலும் அறியப்படும்.

உலகளவில் மேயரின் அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்த உள்ளகச் சட்டங்கள் மற்றும் வழமைகளில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லது நியமனம் வேறுபடுகின்றன. சிலவற்றில் மேயர் நகர அரசின் முதன்மையாகவும் சிலவற்றில் பல்லுறுப்பினர் நகரவையின் தலைவராகவும் சிலவற்றில் ஒரு கௌரவப் பதவியாகும்.


ஜெர்மனியைப் போல கூட்டாட்சி குடியரசுகளில் மேயர் நகர அரசின் முதல்வராகும். மாநில அரசின் முதல்வர் ஆட்சி புரிவது போல் மாநகர மேயரும் ஆட்சி புரிகின்றார். எனவே இவர் நகர முதல்வர் என அறியப்படுகின்றார். டோக்கியோ போன்ற பெரிய நகரங்களில் ஆளுநரே மேயராக உள்ளார்.


ஐக்கிய நாடுகள், ஆத்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் மேயர் நகரத்தின் தினசரிப் பணிகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இந்தப் பணியை டவுன் அலுவலர் அல்லது மாநகராட்சி ஆணையர் மேற்கொள்கிறார்; இது முழுநேர ஊதியப் பணியாகும். மேயர், பெரும்பாலும் பகுதி நேரத்தில், வழக்கமாக ஊதியமின்றி பணியாற்றுகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் நகரத்தின் சார்பாளராக மேயர் பங்கேற்கிறார்.பிரியா  சென்னையின் இளமையான மேயர்  என்ற சிறப்பை பெறுவார். அதே போல இவர் சென்னையின் இரண்டாவது பெண் மேயர் என்பது  340 சென்னை மேயர் வரலாற்றில் இரண்டாவது முறையாக  பதவியை பெண் அலங்கரிக்கிறார்.


இதற்கு முன் 1971-72 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக வின் காமாட்சி ஜெயராமன் இங்கு பெண் மேயராக இருந்த நிலையில் வட சென்னையின் திரு.வி.க. நகர் தொகுதிக்குள் அடங்கிய 74-வது வார்டில் இருந்து ப்ரியா கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு இவர் ஆதரவானவர். அவர் மாவட்ட செயலராகவும் உள்ள சென்னை கிழக்கு மாவட்டத்திலிருந்து இவர் வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர், அதேபோல் முதன் முறையாக வடசென்னையை சேர்ந்த ஒருவர் மேயர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியைப் பெற பலரிடையே போட்டி நிலவியதில்


அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆதரவாளர்களிடையே போட்டி நிலவிய நிலையில், அடுத்த மேயராக சென்னை திருவிக நகர் 74வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார் வயது 24 தான் ஆகிறது.இந்தப் பந்தயத்தில்  3 பேர் இருந்தனர். திமுக சார்பாக 159 வது வார்டில் வெற்ற பெற்ற மு.ஆ.நந்தினி, 100-வது வார்டில் வெற்றி பெற்ற வசந்தி பரமசிவம், 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியா ரா‌ஜன் ஆகியோருக்கு மேயர் போட்டியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியாவை முதல்வர் தேர்வு செய்துள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் மகள் தான் ப்ரியா. பல ஆலோசனைகளைச் செய்து கடைசியில் இவரை மேயராக்க தேர்வு செய்துள்ளார். முதல் ஆதிதிராவிடர் பெண் மேயராக பதவியை ஏற்க உள்ளார் .                         மதுரை மாநகரில் ஆரப்பாளையம் பகுதி  திமுக செயலாளர் பொன்.வசந்த்தின்  பூர்வீகம் உசிலம்பட்டி பக்கம். ஃபைனான்ஸ் தொழில் செய்கிறார். இத்தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராகவும் செயல்பட்ட நிலையில் 57-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அவரது மனைவி இந்திராணியை நிறுத்தினார்.


அவர் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். அவர் போலவே பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்கள் மிசா பாண்டியன் மனைவி பாண்டிச்செல்வி, முருகன் மனைவி பாமா ஆகியோர் தங்களைத் தான் சிபாரிசு செய்வார் என நம்பி இருந்த நிலையில்  இந்திராணியை பழனிவேல் தியாகாராஜன் சிபாரிசு செய்துள்ளதை கட்சித் தலைமை ஏற்ற நிலையில் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், மாநகரச் செயலாளருமான பொன் முத்துராமலிங்கம் தன் மருமகள் விஜயமௌசுமிக்காகவும்,   அமைச்சர் பி.மூர்த்தி வாசுகிக்காகவும், மற்றொரு மாநகரச் செயலாளர் கோ.தளபதி இந்திராகாந்திக்காகவும்   திமுக தலைமையிடம் முறையிட்டும் பலனில்லை. பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில் பொன்.வசந்த் மனைவி இந்திராணிக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மதுரை மாவட்ட திமுகவில் கட்சி பொறுப்பிலும், மக்கள் பிரதிநிதியாக பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததாலும் இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது" என்கிறார்கள்.     சிவகங்கை நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் துரை. ஆனந்த  நகர திமுக செயலாளர் மற்றும் பருந்து பார்வை வார இதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், மேலும் சூப்பர் குரூப் செய்தியாளர் குழு (தமிழ்நாடு) பொதுச்செயலாளர்...பொறுப்புகளை திறம்பட நிர்வகித்து வரும் . துரை ஆனந்த் தலைவராக பொறுப்பேற்க  உள்ளார்.

கோயமுத்தூர் மாநகராட்சியில் மேயர் பதவி கூட்டணி இதுவரை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால்

தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்தியின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, .97-வது வார்டில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா சேனாதிபதி, மற்றும் 46 வது வார்டில் போட்டியிட்ட மீனா லோகு ஆகிய மூவரில் ஒருவர் தான் மேயராக வர வாய்ப்பு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வார்டு 19வது வார்டில் போட்டியிட்ட கல்பனா கோயமுத்தூர் மேயர்  வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கணவர் இ-சேவை மையம் நடத்துகிறார். மேலும் கல்பனாவின் மாமனார் மிசாவில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர் என்கின்றனர் அரசியல் வட்டாரதினர்.மிக எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் வசதியின்மை காரணமாக, கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கழகத் தலைவரை சந்திக்க பேருந்தில் சென்னைக்கு வந்து சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துணை மேயர் பதவிக்கு 92 வார்டில் போட்டியிட்ட வெற்றி செல்வன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் சொந்த வார்டில் வென்றார் என்பது குறிபிடத்தக்கது.

எளிய பின்னணியைக் கொண்டு இருவருக்கும் மேயர் மற்றும் துணை மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்