மாநகரத் தந்தை (மேயர்; Mayor, "பெரிய" எனும் இலத்தீன் மொழிச் சொல் மேயோரிலிருந்து வந்ததென்று பல நாடுகளிலும் அறியப்படும்.
உலகளவில் மேயரின் அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்த உள்ளகச் சட்டங்கள் மற்றும் வழமைகளில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லது நியமனம் வேறுபடுகின்றன. சிலவற்றில் மேயர் நகர அரசின் முதன்மையாகவும் சிலவற்றில் பல்லுறுப்பினர் நகரவையின் தலைவராகவும் சிலவற்றில் ஒரு கௌரவப் பதவியாகும்.
ஜெர்மனியைப் போல கூட்டாட்சி குடியரசுகளில் மேயர் நகர அரசின் முதல்வராகும். மாநில அரசின் முதல்வர் ஆட்சி புரிவது போல் மாநகர மேயரும் ஆட்சி புரிகின்றார். எனவே இவர் நகர முதல்வர் என அறியப்படுகின்றார். டோக்கியோ போன்ற பெரிய நகரங்களில் ஆளுநரே மேயராக உள்ளார்.
ஐக்கிய நாடுகள், ஆத்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் மேயர் நகரத்தின் தினசரிப் பணிகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இந்தப் பணியை டவுன் அலுவலர் அல்லது மாநகராட்சி ஆணையர் மேற்கொள்கிறார்; இது முழுநேர ஊதியப் பணியாகும். மேயர், பெரும்பாலும் பகுதி நேரத்தில், வழக்கமாக ஊதியமின்றி பணியாற்றுகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் நகரத்தின் சார்பாளராக மேயர் பங்கேற்கிறார்.பிரியா சென்னையின் இளமையான மேயர் என்ற சிறப்பை பெறுவார். அதே போல இவர் சென்னையின் இரண்டாவது பெண் மேயர் என்பது 340 சென்னை மேயர் வரலாற்றில் இரண்டாவது முறையாக பதவியை பெண் அலங்கரிக்கிறார்.
இதற்கு முன் 1971-72 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக வின் காமாட்சி ஜெயராமன் இங்கு பெண் மேயராக இருந்த நிலையில் வட சென்னையின் திரு.வி.க. நகர் தொகுதிக்குள் அடங்கிய 74-வது வார்டில் இருந்து ப்ரியா கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு இவர் ஆதரவானவர். அவர் மாவட்ட செயலராகவும் உள்ள சென்னை கிழக்கு மாவட்டத்திலிருந்து இவர் வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர், அதேபோல் முதன் முறையாக வடசென்னையை சேர்ந்த ஒருவர் மேயர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியைப் பெற பலரிடையே போட்டி நிலவியதில்
அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆதரவாளர்களிடையே போட்டி நிலவிய நிலையில், அடுத்த மேயராக சென்னை திருவிக நகர் 74வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார் வயது 24 தான் ஆகிறது.இந்தப் பந்தயத்தில் 3 பேர் இருந்தனர். திமுக சார்பாக 159 வது வார்டில் வெற்ற பெற்ற மு.ஆ.நந்தினி, 100-வது வார்டில் வெற்றி பெற்ற வசந்தி பரமசிவம், 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியா ராஜன் ஆகியோருக்கு மேயர் போட்டியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியாவை முதல்வர் தேர்வு செய்துள்ளார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் மகள் தான் ப்ரியா. பல ஆலோசனைகளைச் செய்து கடைசியில் இவரை மேயராக்க தேர்வு செய்துள்ளார். முதல் ஆதிதிராவிடர் பெண் மேயராக பதவியை ஏற்க உள்ளார் . மதுரை மாநகரில் ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளர் பொன்.வசந்த்தின் பூர்வீகம் உசிலம்பட்டி பக்கம். ஃபைனான்ஸ் தொழில் செய்கிறார். இத்தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராகவும் செயல்பட்ட நிலையில் 57-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அவரது மனைவி இந்திராணியை நிறுத்தினார்.
அவர் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். அவர் போலவே பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்கள் மிசா பாண்டியன் மனைவி பாண்டிச்செல்வி, முருகன் மனைவி பாமா ஆகியோர் தங்களைத் தான் சிபாரிசு செய்வார் என நம்பி இருந்த நிலையில் இந்திராணியை பழனிவேல் தியாகாராஜன் சிபாரிசு செய்துள்ளதை கட்சித் தலைமை ஏற்ற நிலையில் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், மாநகரச் செயலாளருமான பொன் முத்துராமலிங்கம் தன் மருமகள் விஜயமௌசுமிக்காகவும், அமைச்சர் பி.மூர்த்தி வாசுகிக்காகவும், மற்றொரு மாநகரச் செயலாளர் கோ.தளபதி இந்திராகாந்திக்காகவும் திமுக தலைமையிடம் முறையிட்டும் பலனில்லை. பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில் பொன்.வசந்த் மனைவி இந்திராணிக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மதுரை மாவட்ட திமுகவில் கட்சி பொறுப்பிலும், மக்கள் பிரதிநிதியாக பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததாலும் இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது" என்கிறார்கள். சிவகங்கை நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் துரை. ஆனந்த நகர திமுக செயலாளர் மற்றும் பருந்து பார்வை வார இதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், மேலும் சூப்பர் குரூப் செய்தியாளர் குழு (தமிழ்நாடு) பொதுச்செயலாளர்...பொறுப்புகளை திறம்பட நிர்வகித்து வரும் . துரை ஆனந்த் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
கோயமுத்தூர் மாநகராட்சியில் மேயர் பதவி கூட்டணி இதுவரை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால்
தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்தியின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, .97-வது வார்டில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா சேனாதிபதி, மற்றும் 46 வது வார்டில் போட்டியிட்ட மீனா லோகு ஆகிய மூவரில் ஒருவர் தான் மேயராக வர வாய்ப்பு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வார்டு 19வது வார்டில் போட்டியிட்ட கல்பனா கோயமுத்தூர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கணவர் இ-சேவை மையம் நடத்துகிறார். மேலும் கல்பனாவின் மாமனார் மிசாவில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர் என்கின்றனர் அரசியல் வட்டாரதினர்.மிக எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் வசதியின்மை காரணமாக, கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கழகத் தலைவரை சந்திக்க பேருந்தில் சென்னைக்கு வந்து சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துணை மேயர் பதவிக்கு 92 வார்டில் போட்டியிட்ட வெற்றி செல்வன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் சொந்த வார்டில் வென்றார் என்பது குறிபிடத்தக்கது.
எளிய பின்னணியைக் கொண்டு இருவருக்கும் மேயர் மற்றும் துணை மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கருத்துகள்