மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய இராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் புதிதாக மாற்றமாகி இயங்கும் அரசு மண்டல ஆவணக் காப்பகம்
சுமார் ஒரு லட்சம் பழமையான ஆவணங்களுடன் தென்மாவட்டங்கள் குறித்த பலரது ஆட்சிக் காலத்தில் நடந்த அரிய தகவல்கள் நிரம்பிய ஆய்வாளர்களின் காலப் பொக்கிஷமாக திகழ்கிறது.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொள்ள அறைகள் தேவைப்பட்ட நிலையில் அங்கு இயங்கி வந்த அரசு மண்டல ஆவணக் காப்பகத்திற்கு தற்போது இராமநாதபுரம் பழைய ஜில்லா கலெக்டர் அலுவலகம் உள்ளே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு 1893 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் சார்ந்த ஆவணங்கள் பாதுகாத்து பராமரிப்பு செய்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாக கொண்டு மத்திய ஆவணங்கள் காப்பகம் எழும்பூரில் செயல்படுகிறது.
இங்கு அவ்வப் போது கிடைக்கும் முக்கிய ஆவணங்களை முறைப்படி ஆய்வு செய்து சேகரித்து வைத்துள்ள நிலையில் எம். ஃபில் . பி.எச்.டி., மாணவர்களின் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குத் தேவையான தகவல்களை பெற நுாலகம் போலவும் ரூபாய் 500 சொலுத்தி முறையான பதிவு செய்து குறித்த கால முறையில் காப்பகத்தைப் பயன்படுத்தலாம்.
பழைய ஆவணங்கள் காகித முறையில் ஆவணங்களை தனியாக எடுத்து முன், பின் ஷிப்பான் துணி வைத்தும், காகிதங்களின் ஓரம் கிழியாமல் இருக்க சுற்றிலும் கைத் தயாரிப்பு காகிதம் கொண்டும் ஒட்டி பாதுகாப்பு செய்த நிலையில்.
பின் காகிதங்கள் 2 அட்டைகளின் நடுவில் வைத்து கோப்பாகத் தயாரித்து தலைப்பிட்டு இன்டெக்ஸ் பதிவிட்டு ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அது கரையான்கள் அந்துப்பூச்சி உள்ளிட்ட பூச்சிகளின் தாக்குதல் இல்லாமலிருக்க சோப்பு போன்ற நாப்தலின் கட்டி கோப்புகளுக்கு இடையில் வைத்து. ஒட்டும் பசையில் கூட பூச்சிதாக்காத மயில் துத்தம் கலக்கப்பட்ட நிலையில் தான் பாதுகாப்பு முறைமைகள் உள்ளது. அலுவலக வேலை நாட்களில் தேவையான ஆவணங்களை கேட்டுபீ பெற்று குறிப்பெடுத்துப் பயன்பெறலாம்.
கருத்துகள்