முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது மாஞ்சோலை எஸ்டேட்

என்னங்க பெரிய ஊட்டி, கொடைக்கானல், மாஞ்சோலை போயிருக்கீங்களா நீங்க. என திருநெல்வேலி பகுதியில் பிறந்த ஒவ்வொருவரும் தங்களின் அடையாளத்தைப் பற்றிப் பேசும் போது, உடல் அவர்களை அறியால் புல்லரிக்கும்.


. தங்கள் கை கால்கள் உள்ள முடிகள் ஒருமுறை சிலிர்த்து உணர்ச்சி மேலிடும். அந்த அளவிற்கு அவர்களின் உணர்வோடு கலந்த பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டது. எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர் மரணமடைந்தார். அப்படி இறந்தவருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். 32-ஆவது மன்னர், சென்னையில்




படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கொலை வழக்கில் சிக்கினார். வழக்கிற்கு நிறைய பணம் செலவானதால், அதைச் சமாளிக்க மலைநாட்டில் பரிசாக பெற்ற நிலத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி.) என்ற நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார். 

இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் இந்த நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகுமிகுந்த மலைப்பகுதி மாஞ்சோலை. 7,347 ஹெக்டேர் அளவுக்கு பறந்து விரிந்து கிடக்கும் மலைப்பகுதி முழுதும் தேயிலை தோட்டம் தான்.





சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமாக இருந்த அந்த மலைப்பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன், காஃபி, தேயிலை, ஏலக்காய், கொய்னா, சின்கோனா உள்ளிட்டவற்றை விளைவிப்பதற்காக, 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்தது, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என, ஐந்து எஸ்டேட்களை உள்ளடக்கிய, அந்தப் பகுதியில், தேயிலை தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டன.







இந்த எஸ்டேட்களில் வேலை பார்க்க, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் மாஞ்சோலைக்கு வந்தனர். கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் வந்து பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

சரியான அளவில், காஃபி, ஏலக்காய், சின்கோனா, கொய்னா விளைச்சல் இல்லாததால், கொஞ்சம் கொஞ்சமாக அவை பயிரிடப்படுவது நிறுத்தப்பட்டது. மாஞ்சோலை மலை முழுதும் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டது.




ஒரு கட்டத்தில் தேயிலை விளைச்சலும் குறைய, மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தற்போது நாலுமுக்கு பகுதியில் மட்டுமே தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது.அந்த தேயிலை தொழிற்சாலையும், சில மாதங்களில் மூடப்பட உள்ளது. எனவே, ஒட்டு மொத்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டையும் மூடி, அதை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

இதற்காக, தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர், பணிக் குழுவினருடனும் நிறுவனத்தினர் பேசியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில், தங்களின் முடிவு குறித்த பொது அறிவிப்பு வெளியிட உள்ளனர்.  

காலம் காலமாக மாஞ்சோலை மலையை மட்டுமே நம்பிப் பிழைப்பு நடத்தி வந்த, 7,000 பேர் அடுத்து என்ன செய்வது எனப், புரியாமல் தத்தளிக்கின்றனர்.

ம.தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அரசு அமல்ராஜுடன், மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ம.தி.மு.க.,வை சேர்ந்த வழக்கறிஞர் அரசு அமல்ராஜிடம் பேசிய போது "பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற பி.பி.டி.சி., நிறுவனம் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதியில், 100 ஆண்டு காலத்துக்கு சிங்கம்பட்டி ஜமீனுடன் ஒப்பந்தம் போட்டது. அதன் பின், அந்த நிறுவனக் கட்டுப்பாட்டில் தான் இன்று வரை மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் உள்ளன. எதிர் வரும் 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.11 ஆம் தேதியில், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வர வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்துக்கு பின், மாஞ்சோலைத் தோட்டம் அரசுடைமையாக்கப்பட்டது.

ஆனால், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை யாரும் எதுவும் செய்யவில்லை. அந்த ஒப்பந்தம் அப்படியே தொடர்ந்ததால், பி.பி.டி.சி., நிறுவனம் தன் சுய கட்டுப்பாட்டில் தேயிலைத் தோட்டத்தை வைத்து, தேயிலை உற்பத்தியைத் தொடர்ந்தது. மாஞ்சோலை பகுதி அரசுடைமையானதால், அந்தப்பகுதி முழுதும் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

தேயிலை உற்பத்தி குறைந்து விட்டதோடு, தொடர்ந்து நஷ்டத்தையும் எதிர்கொண்டு வருவதால், ஒப்பந்த காலத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, மாஞ்சோலையை விட்டு வெளியேற பி.பி.டி.சி., நிறுவனம் முடிவெடுத்துள்ளது. எஸ்டேட்டில் பணியிலிருக்கும் 7,000 ம் பேருக்கு குறைந்தபட்ச இழப்பீட்டைக் கொடுத்து விட்டு, வெளியேறும் திட்டத்தோடு, தொழிற்சங்கங்களோடு பேசி பேச்சு வார்த்தையை முடித்து விட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் பொது அறிவிப்பு வெளியாக உள்ளது. எஸ்டேட்களில் பணிபுரிந்து வரும், 7,000 பேரும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையை வைத்து, வேறு எங்காவது பிழைத்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு, கல்லிடைக்குறிச்சி, மானுார் அல்லது அம்பாசமுத்திரத்தில் வீடு கட்ட, அரசு தரப்பில் 4 சென்ட் நிலம் கொடுக்க வேண்டும். அதற்காகத் தான், மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்திக்க இருக்கிறோம்". என்றார். இவர் மாஞ்சோலையில் நடந்த கலவரத்தின் போது, மக்களுக்காகப் பாடுபட்டவர்.ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி கூட இடம்கூட வாங்க முடியாது. முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது. அதனாலேயே இயற்கை எழிலை உள்ளவாறு காணமுடிகிறது. பெரும்பாலும் இந்தத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வோருக்கு குறைந்த பட்ச ஊதியமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது 138 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்