முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொகுசு கார் விபத்து சிறுவனுக்கு வழங்கிய ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தது

விபத்தில் 2 பேர் பலியான சொகுசு கார் விபத்து சிறுவனுக்கு வழங்கிய ஜாமீன் ரத்து.


சொகுசு கார் விபத்தில் 2 பேர் பலியானார்கள். கடும் விமர்சனம் எழுந்த காரணமாக சிறுவனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயதுச் சிறுவன் குடிபோதையில் சொகுசுக் காரை அதிவேகமாக ஓட்டி, பைக் மீது மோதியதில் இரண்டு ஐ.டி நிறுவன ஊழியர்களான அனில் அவதியா மற்றும் அவரது தோழி அஷ்வினி கோஷ்தா ஆகியோர் உயிரிழந்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுவன், குடிபோதையில் கார் ஓட்டியது தெரிய வந்ததால் அவனை கைது செய்தனர். பின்னர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவனுக்கு உடனடியாக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், சாலை விபத்துக் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையும் எழுத உத்தரவிட்டது.


இந்தக் கார் விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்தக் கோர விபத்தில் சிறுவனுக்கு உடனடியாகவும், எளிதாகவும் ஜாமீன் வழங்கப்பட்டது, பலதரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதனால் ஜாமினை சிறார் நீதிமன்றம் ரத்து செய்து சிறார் காண்காணிப்பு மையத்தில் ஜூன் 5 ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், குற்றம் கொடூரமானதால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை வயது வந்தவராகக் கருதுவதற்கும் அனுமதி கோரி காவல்துறை மீண்டும் வாரியத்தை அணுகியதையடுத்து சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய 17 வயதுச் சிறுவன், 25 வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார்.

அந்தச் சிறுவன் ஓட்டி வந்த சொகுசுக் காருக்கான நிரந்தர வாகனப் பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவு கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநிலப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்ட பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்த சொகுசு காரை அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது. விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் சொகுசுக் காரை மோதி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையில், 

17 வயதுச் சிறுவன் மது குடித்து அவரது தந்தையின் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஷே சூப்பர் காரை ஓட்டிச் சென்ற போது அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் சென்று கொண்டிருந்த இருவர் மீது மோதியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில், காரை ஓட்டியதாகக் கூறப்படும் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்ட சம்பவம் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து மீண்டும் அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை விஷால் அகர்வாலையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். 


விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தை நடத்தும் பணக்காரர் ஒருவரின் மகனாவார். அதனால், காவல் துறை அவருக்கு சலுகைகள் காட்டி சாதகமாகச் செயல்படுவதாகவும், உதாரணமாக விபத்து ஏற்படுத்தியவர்களின் உடலிலிருந்த, ஆல்காஹிலின் அளவை கணக்கிடுவதற்கான சோதனையை உடனடியாக நடத்தாமல் தாமதப்படுத்ததியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததோடு விபத்து ஏற்படுத்தியவர்களை விட, பலியான அனிஷ் அவாதியா, அஷ்வினி கோஷ்தா ஆகியோர் தொடர்பாக விசாரணையை நடத்தவே அதிகமாக கவனம் செலுத்தியதாகவும் கூறப்பட்ட நிலையில் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ஏர்வாடா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலரிடமும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பாக முதலில் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், மிகவும் பத்திரமாக கையாளப்பட்டதாக வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி குற்றம் சாட்டியது. அந்தச் சிறுவனுக்கு பீட்சா மற்றும் பர்கர் வாங்கிக் கொடுத்து கவனமாகப் பார்த்துக் கொண்டதோடு, 8 மணி நேரம் கழித்தே மது போதை அளவுப் பரிசோதனை மேற்கொள்ளப்படதாகவும் அக்கட்சி சாடியது. இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்து நடந்தபோது போர்ஷே காரை ஓட்டியது தங்களது ஓட்டுனர் தான் என, சிறுவன் மற்றும் அவரது தந்தையான விஷால் அகர்வால் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து, அவரது மொபைல் போன் மீட்கப்பட்டுள்ளது மற்றும் விபத்து பற்றிய விவரங்களை வெளிக் கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலிடமும் புனே குற்றப்பிரிவு விசாரணை தற்போது நடத்துகிறது . விபத்து நடந்த நாளில் அவரது மகன் மற்றும் பேரனிடம், அவர் மேற்கொண்ட உரையாடல்களைப் பற்றி அறியும் நோக்கிலும்  விசாரணை நடத்துகின்றனர். இதனிடையே, சுரேந்திர அகர்வாலிற்கு பிரபல தாதா, சோட்டா ராஜனுடன் தொடர்புடையவர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்