முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு பதிவுத்துறை.முத்திரைக் கட்டணமும் மின்சாரக் கட்டணமும் திடீர் உயர்வு

தமிழ்நாடு பதிவுத்துறை பொதுஅதிகாரம், ஒப்பந்தம், அணைத்து முத்திரைத் தீர்வைக் கட்டணம் திடீர் உயர்வு


பொது அதிகார ஆவணம், ஒப்பந்தப் பதிவு ஆவணம் போன்றவற்றுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு பதிவுத்துறை உயர்த்தி அறிவித்திருக்கிறது.

பதிவு பிரமாணப்பத்திரம், பதிவு ஒப்பந்தப் பத்திரம், பதிவு பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட பல்வேறு பதிவு செயல்பாடுகளுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு 2023 ஆம் வருடம் சட்டசபையில் உயர்த்தி அறிவித்திருந்த நிலையில்..

பத்திரப் பதிவு நில  வழிகாட்டி மதிப்பு உயர்வு. பதிவுத்துறையின் உண்மை நிலவரம் இதுதான்



முத்திரைச் சட்டத்திலும் நிறைய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.. இந்தத் திருத்தங்கள் 2024  மே மாதம் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில்,  இது தொடர்பான அறிவிப்பும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது..

முத்திரைத் தீர்வைக் கட்டணம்: அதன் அடிப்படையில், "தத்தெடுத்தல் பதிவுக்கு முன்பிருந்த ரூபாய்.100 முத்திரைத் தீர்வைக் கட்டணமானது தற்போது ரூபாய்.1000 ஆகவும், பிரமாணப்பத்திரம் பதிவு, உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய் .20 என்பது ரூபாய்.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சங்கப் பதிவுக்கான முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.300 லிருந்து ஒவ்வொரு ரூபாய்.10 லட்சத்துக்கும் ரூபாய்.500 என்றும், கிரையப்பத்திரம் ரத்துப் பதிவுக்கு ரூபாய்.50 ஆக இருந்த கட்டணம் ரூபாய்.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூபாய். 20 ஆக இருந்த கட்டணம் ரூபாய்.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூபாய்.25 ஆக இருந்த கட்டணம் ரூபாய்.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரையப் பதிவு பத்திரமாகக் கருதப்பட்டு வழிகாட்டி நில மதிப்பில் 7 சதவீதக் கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ரூபாய்.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சங்கப் பதிவுக்கான ஒப்பந்தப் பதிவுக்கு ரூபாய். 200 அல்லது ரூபாய்.500 என இருந்த கட்டணம் ரூபாய்.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொரு பாகத்துக்குமான விற்பனை விலைச்சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது.  ஒரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்களுக்கு பாகப்பிரிவினை செய்யும்போது, அதிலொருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராகக் கருதப்படுவர். ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்தச் சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர். அதேபோல, பங்குதாரர் பதிவுக்கான கட்டணமும் ரூபாய்.300-லிருந்து ரூபாய்.1000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது..                    பொது அதிகார ஆவணப் பத்திரத்தில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை ஒரே பதிவில் வாங்குவதற்காக வழங்கப்படும் சிறப்புப் பொது அதிகாரம், ஒரு நபர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பதிவுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்புப் பொது அதிகார ஆவணத்துக்கு ரூபாய்.5 ஆக இருந்த கட்டணம் ரூபாய்.500 ஆக உயர்ந்துள்ளது..

தனிநபர்: 5 நபர்களுக்கு இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ செயல்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் பொது அதிகார ஆவணப் பதிவுப் பத்திரத்துக்கு முன்பிருந்த ரூபாய்.100 முத்திரைக் கட்டணம், தற்போது ரூபாய்.1000 ஆகவும், 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு ரூபாய்.175-லிருந்து ரூபாய்.1000 ஆகவும் முத்திரைத் தீர்வைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    அதேபோல, அசையாச் சொத்துக்கள் விற்பனைக்கு வழங்கப்படும் பொது அதிகார ஆவணத்திற்கு சொத்தின் சந்தைமதிப்பில் 4 சதவீதம் என முத்திரைக் கட்டணம் திருத்தி அமைக்கபட்டுள்ளது. அசையாச் சொத்துகள் விற்பனைக்காக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பொது அதிகார ஆவணத்துக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.1000, குடும்பத்தினர் அல்லாதவராக இருந்தால் சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொத்து அடமானத்தைத் திரும்பப் பெறுவதற்கான முத்திரைத் தீர்வைக் க் கட்டணம் ரூபாய்.80-லிருந்து ரூபாய்.1000, பிணை பத்திரத்துக்கு ரூபாய்.80-லிருந்து ரூபாய்.500, செட்டில்மென்ட் ஆவணம் பதிவு திரும்பப் பெறுவதற்கு ரூபாய்.80-லிருந்து ரூபாய்.1000, குத்தகையை ஒப்படைப்பதற்கான முத்திரைத் தீர்வைக்  கட்டணம் ரூபாய்.40 லிருந்து ரூபாய்.1000 என உயர்த்தப்பட்டுள்ளது. டிரஸ்ட் அறக்கட்டளையின் ஒரு அறங்காவலரிடமிருந்து மற்றொரு அறங்காவலர் அல்லது அதே அறக்கட்டளையின் ஒரு பயனாளருக்கு உரிமை மாற்றம் செய்யும்போது ரூபாய்.30 என்றிருந்த முத்திரைத் தீர்வைக்  கட்டணம் ரூபாய்.1000 ஆகவும், அறக்கட்டளை உருவாக்கத்துக்கு ரூபாய்.180 ஆக இருந்த முத்திரைத் தீர்வைக் கட்டணம் ரூபாய்.1000 என்றும், அறக்கட்டளை கலைத்தலுக்கான முத்திரைத் தீர்வைக்  கட்டணம் ரூபாய்.120 லிருந்து ரூபாய்.1000 ஆகவும் உயர்த்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வானது, பெருத்த அதிர்வலையை உண்டாக்குகிறது.. இந்த அளவுக்கு முத்திரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், வீடு நிலம் வாங்குபவர்களுக்கு சுமை மேலும் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, நேற்றைய தினமே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது வேண்டுகோள்: 'வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று வருகிறார்கள்.. எனவே, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல தமிழ்நாடு மின்சாரக் கட்டணம் உயர்வும் தற்போது உள்ள நிலையும் பார்க்கலாம் புதிய மின் கட்டணம் கணக்கிடும் முறை.

500 யூனிட்க்கு கீழ்

யூனிட்.   ரேட்.      கட்டணம்

100.            0.                    0.00

200.            2.25.          225.00

300.            4.50.          675.00

400.            4.50.       1,125.00

500.            6.00.       1,725.00

500 யுனிட்க்கு மேல்..

யூனிட்.   ரேட்.      கட்டணம்

510.          8.00.         2.030.00

600.          8.00.         2,750.00

700.          9.00.          3650.00

800.          9.00.         4,550.00

900.        10.00.         5,550.00

1000.      10.00.         6,550.00

1100.      11.00.         7,650.00


1100 யூனிட்க்கு மேல் யூனிட்டிற்கு ரூபாய் 11/- கட்டணம். நிலைக் கட்டணம், அட்வான்ஸ் தனி. 500 யூனிட்டிற்கும், 510 யூனிட்டிற்க்கும் வித்யாசம் ரூபாய் 305/- ஆகிறது. 

ஒரு யூனிட் க்கு கட்டணமும் ரூபாய் 8,9,10,11 என கூடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்