முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் திரு. மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டு உரையாற்றினார்

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் வெளியிட்டார்

“பிஎம் கேர்ஸ் என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பில் உள்ளனர் என்பதன் பிரதிபலிப்பு”

“இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் மா பாரதி இருக்கிறது”

“இந்த கடினமான நேரங்களில் நல்ல நூல்கள் உங்களின் நம்பகமான நண்பர்களாக இருக்கும்”

“இன்று எங்கள் அரசு 8 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், நாட்டின் நம்பிக்கையும், நாட்டு மக்களுக்கு எங்கள் மீதுள்ள நம்பிக்கையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது”

“கடந்த 8 ஆண்டுகளும் ஏழைகளின் நலன் மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது”

“தற்போது பரம ஏழைகளாக இருப்பவர்கள் பலன்களை பெறுவதில் நம்பிக்கையுடன் உள்ளனர் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க எங்கள் அரசு 100% பிரச்சாரத்தை செய்து வருகிறது”

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் திரு. மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இரானி மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, கொரோனா பெருந்தொற்றால் தங்கள் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த குழந்தைகளுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்து கொண்டார். தற்போதுள்ள சூழலில், அந்த குழந்தைகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. யாருக்காக பிஎம் கேர்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கும் பிரதமர் எடுத்துக் கூறினார். அப்போது, நான் பிரதமராக உங்களுடன் பேசவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராக பேசுவதாக தெரிவித்தார்.

பிஎம் கேர்ஸ் என்பது, கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் உள்ளனர் என்பதற்கான பிரதிபலிப்பு. உயர்கல்வி அல்லது தொழில் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கும் பிஎம் கேர்ஸ் திட்டம் உதவி செய்யும். என பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். குழந்தைகளின் அன்றாடத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பிஎம் கேர்ஸ் மூலம் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கொரோனாவால் பெற்றோரை இழந்த, 23 வயதை அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சத்தை தவிர, ஆயுஷ்மான் அட்டை மூலம் உடல்நலம் மற்றும் உளவியல் தொடர்பான ஆலோசனைகள் சம்வாத் ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்றின் மிக மோசமான வேதனையையும், அதன் தாக்கத்தையும் தைரியமாக எதிர்கொண்ட குழந்தைகளுக்கு தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி, பெற்றோரின் அன்புக்கு ஈடு செய்வதாக எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் மா பாரதி இருக்கிறது என்றும், பிஎம் கேர்ஸ் திட்டம் மூலம் குழந்தைகளுக்கான பொறுப்பை நிறைவேற்ற நாடு முயற்சி செய்கிறது என்றும் பிரதமர் கூறினார். தொற்றுநோய் பாதிப்புகளின்போது, சக மனிதர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொண்டதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மற்றவர்கள் எவ்வாறு பணியாற்றினர் என்றும், மருத்துவமனைகளை தயார் செய்வதற்கும்,  வெண்டிலேட்டர்களை வாங்குவதற்கும், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கும் பொதுமக்கள் கொடுத்த நிதி பெரிதும் உதவியாக இருந்ததாகவும் பிரதமர் கூறினார். இதன் மூலம் பல உயிர்களையும், பல குடும்பங்களின் எதிர்காலத்தையும் காப்பாற்ற இயலும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வாழ்க்கையில், விரக்தியின் விளிம்பில் இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் ஒளிக்கதிர் தெரியும். இதற்கு நம்முடைய நாடே மிகச்சிறந்த உதாரணம் என்று தெரிவித்த பிரதமர் திரு. மோடி, விரக்தி தோல்வியாக மாற குழந்தைகள் அனுமதித்து விட வேண்டாம் என அறிவுறுத்தினார். பெரியவர்களும், ஆசிரியர்களும் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும், இக்கட்டான தருணங்களில் நல்ல நூல்கள் நமக்கு நம்பகமான நண்பனாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். நோயிலிருந்து மீள கேலோ இந்தியா, உடற்தகுதி இந்தியா போன்ற இயக்கங்களில் ஈடுபடவும், யோகாவை மேற்கொள்ளவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இக்கட்டான சூழலில், இந்தியா தனது பலத்தை நம்பியிருப்பதாகவும், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரை இந்தியா நம்பியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். பிரச்சினைகளுடன் இல்லாமல் தீர்வை தருவதாக இந்தியா வெளிவந்தது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெருந்தொற்றை தடுப்பதற்கான மருந்தையும், தடுப்பூசிகளையும் வழங்கினோம். அனைத்து குடிமகன்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாகவும், உலக நாடுகள் வியந்து பார்க்கும் நாடாகவும் இந்தியா உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


இன்று தங்கள் அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும், தங்கள் அரசு மீது நாட்டு மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பல கோடி ஊழல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய பாகுபாடுகள் போன்ற  2014-ம் ஆண்டில் சிக்கியிருந்த தீயசூழல்களில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இந்த நிகழ்வு குழந்தைகளான உங்களுக்கும் ஒரு சிறந்த உதாரணம். அனைத்துக் கடினமான நாட்களும் கடந்து போகும் என்று பிரதமர் தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம், ஜன்தன் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் திட்டம் போன்ற நலத்திட்டங்களை பற்றி எடுத்து கூறிய பிரதமர் மோடி, அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன்  அரசாங்கம் செல்வதாக குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளை ஏழைகள் நலன் மற்றும் சேவைக்காக அரசு தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளது. ஒரு குடும்ப உறுப்பினராக, உங்களின் துயரங்களையும், சுமைகளையும் குறைப்பதற்கும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசு முயற்சித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் ஏழைகளின் உரிமைகளை அரசு உறுதி செய்துள்ளதாகவும், இதனால் ஏழைகள் அரசின் நலத்திட்டங்களை பெற்று வருவதாகவும், தொடர்ந்து பெறுவோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்த நம்பிக்கையை அதிகரிக்க எங்கள் அரசு 100% அதிகாரமளிக்கும் இயக்கத்தை நடத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா, கடந்த 8 ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்றும், தற்போது உலக அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். உலக அளவில் இந்தியாவின் பலம் உயர்ந்துள்ளதாகவும், இதனை இளைஞர் சக்தி முன்னெடுத்துச் செல்வதாகவும் பிரதமர் மகிழ்ச்சியுடன் கூறினார். உங்கள் கனவுகள் நிறைவேற நாங்கள் எங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்போம் என்றும், அது நிறைவேறும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்கள் விடுவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

வணக்கம்!!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி அவர்களே,  நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைச்சரவை சகாக்களே, அவர்களுடன் பங்கேற்றிருக்கும் மூத்த குடிமக்களே, இன்று யாருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த சிறப்புக்குரிய எனதருமை  சிறார்களே, மதிப்பிற்குரிய அனைத்து முதலமைச்சர்களே, இதர பிரமுகர்களே, அன்பிற்குரிய நாட்டு மக்களே!

இன்று ஒரு பிரதமராக உங்களிடம் நான் பேசவில்லை. உங்கள் குடும்பத்தின் உறுப்பினராக பேசுகிறேன். இன்று சிறார்களிடையே, நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நண்பர்களே,

வாழ்க்கை சில நேரங்களில், நமக்கு எதிர்பாராத நிலைமைகளை ஏற்படுத்திவிடுகிறது. திடீரென  இருள்   இறங்கி வருகிறது. நமது மகிழ்ச்சியான  வாழ்க்கையில் அனைத்தும் மாறிவிடுகின்றன. ஏராளமானவர்களின் வாழ்க்கையில், இத்தகைய நிலைமைய  கொரோனா ஏற்படுத்திவிட்டது. கொரோனா காரணமாக உறவினர்களை இழந்தவர்களின் வாழ்க்கை, எவ்வளவு சிரமமானது என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு நாளின் போராட்டத்தையும், ஒவ்வொரு கணத்தின் போராட்டத்தையும், புதிய சவால்களையும்,  ஒவ்வொரு நாளின் சிரமங்களையும், நான் அறிவேன். இந்த நிகழ்ச்சி யாருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அந்த சிறார்களின் வலியை வார்த்தைகளால் கூறுவது சிரமமானது.  நம்மைவிட்டு  பிரிந்தவர்கள்  ஒரு சில நினைவுகளை மட்டும் நம்மோடு விட்டுவிட்டு செல்கிறார்கள். ஆனால், வாழ்கின்றவர்கள், பலவகையான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய சவாலான தருணங்களை பெற்றோர்களை இழந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறார்களின் கஷ்டங்களை தணிப்பதற்கான  சிறிய முயற்சியே குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ்.

நண்பர்களே,

முறையான இடையூறு இல்லாத கல்விக்காக இவர்களின், வீடுகளுக்கு அருகே உள்ள  அரசு அல்லது தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து நான் திருப்தி அடைந்துள்ளேன். இவர்களின் புத்தகங்கள், சீருடைகள், போன்றவற்றுக்கான செலவை பிஎம் கேர்ஸ் ஏற்கும்.  இவர்களில் ஒருசிலர்,  தொழில்முறை படிப்புகளிலோ, அல்லது உயர்கல்வியிலோ சேர்வதற்கு கல்விக் கடன் தேவைப்பட்டால் அதற்கும் பிஎம் கேர்ஸ், உதவும்.   மற்ற பிற திட்டங்களின் மூலம், அன்றாத தேவைகளுக்கும் மாதந்தோறும் ரூ.4,000 ஏற்பாடு செய்யப்படும்.

நண்பர்களே,

இத்தகைய குழந்தைகளின் பள்ளிப் படிப்பு நிறைவடையும்போது, அவர்களின் எதிர்கால கனவுகளுக்கு கூடுதலாக பணம் தேவைப்படும். இதற்காக, 18 முதல் 23 வயதுள்ள இளையோர் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகை பெறுவார்கள்.  இவர்களுக்கு 23 வயது நிறையும்போது பத்து லட்சம் ரூபாயும், பெறுவார்கள்.

நண்பர்களே,

மற்றொரு முக்கியமான கவலை என்பது சுகாதாரம் தொடர்புடையது. எந்தவொரு நோய்க்கான சிகிச்சைக்கும் பணம் தேவைப்படுகிறது. ஆனால், இதற்காக சிறார்களோ, அல்லது அவர்களின் பாதுகாவலர்களோ, கவலைப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கன பிஎம் கேர்ஸ், மூலம்  உங்களுக்கு ஆயுஷ்மான் சுகாதார அட்டையும் வழங்கப்படும். இந்த அட்டையின் மூலம், ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சையை நீங்கள் பெறலாம்.

நண்பர்களே,

இந்த முயற்சிகளுக்கு இடையே சிறார்களுக்கு  உணர்வுபூர்வமான ஆதரவும், மன ரீதியான வழிகாட்டலும் தேவைப்படும் என்பதை நாங்கள் அறிவோம். குடும்பத்தில் முதியவர்கள் உள்ள போதும், அரசும், இதற்கான முயற்சியை மேற்கொள்கிறது. இது தொடர்பாக சிறப்பான  ‘சம்வாத்’ சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. ‘சம்வாத் உதவி எண்ணில்’ உளவியல் சார்ந்த விஷயங்கள் குறித்து நிபுணர்களுடன் சிறார்கள் கலந்தாலோசிக்கலாம், விவாதிக்கலாம். 

நண்பர்களே,

சிறார்கள் மற்றும், இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும், துணிவோடும், மனிதகுல உணர்வோடும், இந்த நாட்டுக்கும், உலகிற்கும் நீங்கள் வழிகாட்ட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு தீர்மானத்துடனும், அதற்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தயாரிப்புடனும் நீங்கள் முன்னேறிச் செல்லும் போது நிச்சயமாக உங்களின் கனவுகள் நனவாகும். எங்கே செல்ல நீங்கள் விரும்பினாலும் உங்களைத் தடுத்து நிறுத்த உலகில் எந்த சக்தியும் இல்லை. பொறுமையை, உங்களுக்குள் உறுதியை, தீர்மானத்தை நிறைவேற்றும் ஆற்றலை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் எங்கேயும் நிற்க வேண்டிய அவசியமில்லை.  தொடக்கத்தில் நான் கூறியது போல, உங்கள் குடும்ப உறுப்பினராக பேசுகிறேன். ஒரு குடும்ப உறுப்பினராக உங்களை நான் வாழ்த்துகிறேன். உங்களை வாழ்த்துவதற்கு உரிமையை பெற்றிருக்கிறேனா இல்லையா என்பதை நான் அறியேன். ஆனால் உங்களுக்குள் ஆற்றல் இருப்பதை நான் காண்கிறேன். எனவே, உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நீங்கள் நெடுந்தூரம் பயணிக்கவும் சிறப்படையவும் நான் வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த