முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரக்கமற்று அரக்கனாக வாழும் சமூக நலத்துறையின் மாவட்ட அலுவலர் பெரம்பலூர் அவலம்

பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுவனுக்கு உதவ மனமின்றி இரக்கமற்று அரக்கனாக வாழும் சமூக நலத்துறையின் மாவட்ட அலுவலர் , 

குமுறும் தொண்டு நிறுவனங்கள் , பெரம்பலூர் மாவட்டம் குன்னம், வட்டம் கொளப்பாடி, ஊராட்சி மன்றம்  காலனித் தெருவில் வசிக்கும் ஆனந்துக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள். மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மூத்த மகனான 14 வயதுச் சிறுவன் கண்ணனை பாலியல் கொடுமைப்படுத்தியதால்  சிறுவன் கண்ணன், நண்பர்களிடம்  தனக்கு நடக்கும் கொடுமைகளைச்சொல்லி அழுத நிலையில் . அவர்கள் "குழந்தைகள் பாதுகாப்பு" இலவச பொதுச் சேவைத் தொலைபேசி, 

(சைல்ட்



ஹெல்ப் லைன்) மூலம் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தைக் கூறிவே அவரைக் காவல்துறையினர், " POCSO " சட்டத்தில் கைது செய்து, சிறையிலடைத்தனர். சில நாட்களில் ஜாமீனில்  வந்தவர். மீண்டும்  பாலியல் கொடுமை செய்துள்ளார். அதனால் சிறுவன், வீட்டில் எலியை கொல்லும்  விஷ "பேஸ்ட்டை வெறும் வயிற்றில் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் POCSO சட்டத்தின் கீழ். குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், இது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வரை உண்டு சிறுவன் கண்ணன், பாதிக்கப்பட்டதைத் தெரிந்து, ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்கள். தற்சமயம் சிறுவன்கண்ணன் 


உயிருக்கு போராடும் நிலையில், சிகிச்சையளித்த மருத்துவர், நல்ல மீண்டு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் தான், உறுதியாகக் கூற முடியும் என தெரிவித்துள்ளதாகவும் . தற்போதுது சுய நினைவு இல்லாமல் சிறுவன் கண்ணன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் , மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமையில்  செயல்படும் "மாவட்ட சமூக நலத்துறை" மற்றும் "மாவட்ட குழந்தைகள் நல அலகு அலுவலகங்கள்" குழந்தைகள் நல காப்பகங்கள் நடத்தும் இல்லங்கள் மீது அக்கரை கொண்டு இதுபோல் பாதிக்கப்படும் சிறுவர்களைப் பாதுகாகாக்க வேண்டும்  என்பதே சமூக நலனில் அக்கரை கொண்ட பலரது  எதிர்பார்ப்பாகும்.






குழந்தைகள் நல காப்பகங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மிகுந்த அக்கரை காட்டாமல் இருப்பதே இதுபோண்ற சம்பவங்கள் பெருகக் காரணமாகிறது, தொடர்பான  அலுவலர்கள் உதவி கொண்டு, 14 வயதுடைய கண்ணனை, ஆபத்திலிருந்து காப்பாத்தி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் வைத்து ஆலோசனை வழங்கி,  உயிர் பாதுகாப்பு வழங்கி இருக்கலாம். இச் சிறுவன்  போல மாவட்டம் முழுவதும் (இருபால்) குழந்தைகளுடைய நிலைமை கேள்விக்குறியாவதாக


பெரம்பலூர் மாவட்டத்தில் இது போல, பல்வேறு  கிராமங்களில் குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு பலியாவதாக ஒரு சமூக ஆர்வலர் நம்மிடம் வருத்தம் தெரிவித்தார், நமக்கு விசாரணையில் கிடைத்த தகவல் படி மாவட்ட சமூக நல அலுவலர் பெரும்பாலான நாட்களில் அலுவலகத்தில இருப்பதல்ல எனபது தெரிகிறது, மேலும் சமூக நலனில் அக்கரையற்ற  ஒரு சமூக நல அலுவலர் பெரம்பலூருக்குத் தேவையா என்பதும் இதற்கு முன் இருந்த அலுவலர்கள் இவர்போல சமூக நலனில் அக்கரை இல்லாமல்  இல்லை என்பதும் நாம் பலரை விசாரித்து அறிந்த போது கிடைத்த தகவலாகும் இதை மாநில சமூக நலத்துறை கவணத்தில் கொள்ள வேண்டும் என்பதே இங்கு பொதுநீதி , பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற ஏழை எளிய (இருபால்) குழந்தைகள் குடும்பப் பராமரிப்பில்லாமல், திசைமாறி நாலா பக்கமும் இருக்க இருப்பிடமும், உண்ண உணவும், இல்லாமல் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,




பெரம்பலூர் மாவட்டத்தில் நிலை உள்ளது. பலரை வருத்தமடைய வைக்கிறது மாவட்டத்தில் "மாவட்ட சமூக நலத் துறை மற்றும் மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம்" இருந்தும் முறையாக செயல்படாத காரணத்தால், சிறுவன் கண்ணனைப் போல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலைமை உள்ளது. உடனே மாவட்ட நிர்வாகம், துரிதமாக , பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு  நிறுவனங்கள் மூலம் குழந்தைகள் காப்பகங்களைக் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.






மேலும் தொடர்பான அலுவலரிடம் குழந்தைகளின் பிரச்சனைகளைத் தெரிவித்து மூடி மறைக்காமல்  செயல்பட்டு, கிராமங்களுக்கும் தொடர்பான  அலுவலர்களுக்கும் "விழிப்புணர்வுப் பயிற்சி கொடுத்து, அரசு கவணமாகப் பணியாற்றி இது போல் பாதிக்கப்படும் குழந்தைகளை உரிய காப்பகங்கள்  அமைத்துப் பாதிகாக்க வேண்டும்,






என்பதே! சமூக ஆர்வலர்களின் தற்போதய வேண்டுகோள். இது குறித்து நாம் இரண்டு முறை மாவட்ட சமூக நலத்துறை அலுவலரைத் தொடர்பு கொண்டு கேட்க முயன்றும் அலுவலகக் கண்காணிப்பாளரே நம்மிடம் பேசினார்,  மாவடட அலுவலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாகவே அறிந்தோம். ஆகவே பெரம்பலூர் பகுதிக்கு சமூக நலர்துறை செயல்பட ஒரு மக்கள் தொடர்பில் உள்ள நல்ல அலுவர் தான் முதல் தேவை என்பதே பகுதி மக்கள் எதிர் பார்ப்பாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...