முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார்.

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சமூகம் காலகாலமாய் பலயுகமாய்க் கொண்டாடி மகிழ்கிறது.தைப் பிறப்பும் பின் வந்த  மகர சங்கராந்தியும்

தைப் பொங்கலோடு மகர சங்கராந்தியும் பேசப்படும் காலம் சங்ககாலம் கடந்தபின்காலம் தான். பாமரர்களுக்கு அது அந்நியமான சொல்போல வைதிகம் சார்ந்ததாக சிலர் பார்ப்பார்கள். ஆனால், மகர சங்கராந்திக்கு வானியல் தொடர்பு உண்டு. தை மாதப் பிறப்புக்கும்கூட.

இவற்றிடையே  வானியல் அடிப்படையில் தை மாதப் பிறப்புக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. சூரியனின் சுற்றுப்பாதையை நோக்கி பூமி 22.5 பாகை சாய்ந்திருப்பதன் காரணமாக நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கே 22.5 பாகையிலுள்ள கடக ரேகைக்குச் சித்திரை முதல் ஆனி மாதம் முடிய சூரியன் பயணிக்கிறது. பின் ஆடி மாதத்தில் தெற்கு நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறது. அது தட்சணாயனம் எனப்படும். புரட்டாசி இறுதியில் மீண்டும் நிலநடுக்கோட்டுக்கு நேராக வருகிறது. ஐப்பசி தொடங்கி மார்கழிவரை தெற்கு நோக்கி நகர்ந்து தெற்கே 22.5 பாகையில் உள்ள மகரரேகைக்கு நேராகச் சூரியன் வருகிறது.

தை ஒன்றாம் தேதி வடக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்குகிறது. இது உத்தராயனம் எனப்படும். இப்பயணம் பங்குனி கடைசியில் மீண்டும் நிலநடுக்கோட்டை அடைவதாக முடியும். சித்திரை, ஐப்பசிகளில் முதல் நாள் பகல்-இரவு சமமாக (அதாவது 12 – 12 மணி நேரமாக) இருக்கும். அவற்றை ‘விசு’ என்போம் (அயனம் – இயக்கம், தட்சணம் – தெற்கு , உத்தரம் – மேலே, வடக்கு).

நிலநடுக் கோட்டை ஒட்டியுள்ள நம் தென் நிலப்பரப்பில் பூவும் கனியும் தானியங்களும் செழித்துக் குலுங்கும் வசந்தத்தை நோக்கிய நகர்வு என்ற வகையில், தைப் பிறப்பு முக்கியமான நாள். நம் விளைச்சல் பயன்களுக்கு நன்றி பாராட்டும் விதமாகச் சூரியனுக்குப் பொங்கலிடுகிறோம். நிலங்களை உழவு செய்த மாடுகளுக்கும் சிறப்புச் செய்கிறோம். தொடர்ந்து காலகட்டங்களுக்குத் தகுந்த  களியாட்டங்களில் ஈடுபடுகிற நிலை

காலக்கணக்கு – சந்திர அடிமானம், சூரிய அடிமானம்

சித்திரை தொடங்கி பங்குனி முடிய உள்ள 12 மாதங்களும் பழந்தமிழர் பின்பற்றிய தமிழ் மாதங்களே. ஆனால், சந்திர அடிமானமாக அமைந்த ஆண்டுக்கணக்கில் திங்கள் என்று மாதங்கள் அழைக்கப்பட்டன (திங்கள் – சந்திரன்). தொல்காப்பியம் தொடங்கி சங்க நூல்கள் பேசும் நாளும் திங்களும், நட்சத்திரத்தையும் மாதத்தையும் குறிக்கும்.

ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் சந்திரன் அசுவினி தொடங்கி ரேவதி முடிய 27 நட்சத்திரங்களைப் பின்புலமாகக் கொண்டு நகர்கின்றன. அந்நாள், அந்நட்சத்திரத்தால் அறியப்பட்டது. இன்றிருப்பது போல 1, 2, 3… என்று தேதிகள் கிடையாது. பவுர்ணமி கழிந்து 14 தேய்பிறை நாட்கள் பிரதமை, திதியை... சதுர்த்தசி எனத் திதிகளாக அறியப்படும். அந்தத் தேய்பிறை 14 நாட்கள் கிருஷ்ண பட்சம்/ பகுள பட்சம் அல்லது அமர பட்சம் என அழைக்கப்படுகிறது. 15 ஆம் நாள் அம்மாவாசை. அதை அடுத்த 14 வளர்பிறை நாட்கள் பிரதமை, திதியை... சதுர்த்தசி என வரும் 14 நாட்கள் அல்லது திதிகள் சுக்ல பட்சம் என அழைக்கப்படுகின்றன. திதிதான் தேதி ஆயிற்று. இவ்வாறு சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திர அடிமான மாதமான திங்கள் அமைகிறது. இதில் சூரியனுக்குக் பங்கில்லை. பழந்தமிழகத்தில் மாதக் கடைசி நாள் பௌர்ணமி அல்லது பூர்ணிமா மாதம். இதுபோல அமாவாசை இறுதி நாளாகக் கொண்ட காலக் கணக்குகளும் உண்டு.  காலம் வகுத்த தமிழ்க்குடியின் தலைமை விழா பொங்கல் . வாழ்த்துக்களை உரித்தாக்கும்.. பப்ளிக ஜஸ்டிஸ்











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...