கொடிக்கம்பம் மின் கம்பியின் மீது உரசியதால் இரவு மின்சாரம் தாக்கியதில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மரணம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணி செய்து வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் இரவுப் பணியில் இரும்புக் கம்பத்தை தொட்ட போது மின் கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில். அரசினர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பார்த்து சரவணனின் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூபாய்.25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர் சரவணனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரவணன் (வயது 36) என்பவர் இன்று (அக்டோபர்.31) நல்லிரவில் சுமார் 1 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின் போது கீ...