முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொடிக்கம்பம் மின் கம்பியின் மீது உரசியதால் இரவு மின்சாரம் தாக்கியதில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மரணம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணி செய்து வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் இரவுப் பணியில்  இரும்புக் கம்பத்தை தொட்ட போது  மின் கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில். அரசினர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பார்த்து சரவணனின் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூபாய்.25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு.  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர் சரவணனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் சார்பு  ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரவணன் (வயது 36) என்பவர் இன்று (அக்டோபர்.31) நல்லிரவில் சுமார் 1 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின் போது கீ...

பூம்பாறை அர்ச்சகர்களின் தட்டுக் காணிக்கையை தடுக்கும் அறநிலையத்துறை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவிலில், பூஜை செய்து வரும் அர்ச்சகர்களின் தட்டுக் காணிக்கையை  தடுக்கும் ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணி செய்து வரும் அலுவலர்களின் செயலால் பூஜகர்கள் மற்றும் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர். பழனி முருகன் கோவில் அறநிலையத்துறை நிர்வாகத்தில், 30-க்கும் மேற்பட்ட உப கோவில்களும் வருகிறது. அதில், கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்று. இங்கு பூஜைகள் செய்து வரும் அர்ச்சகரின் தட்டில் பக்தர்கள் இஷ்டப்பட்டு செலுத்தும் தட்டுக் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் படி வியாபாரக் கடை போல , அங்குள்ள ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், பக்தர்களிடம் அடாவடியாகவே  நிர்ப்பந்திப்பதாகவும். அவ்வாறு செலுத்தாதவர்களிடம் கண்டிப்புக் காட்டுவதாகவும். பக்தர்களின் வருகையைக் கண்காணித்து, உண்டியலில் அவர்கள் பணம் செலுத்த மூன்று ஊழியர்களை நியமித்து கெடுபிடிகள் செய்வதோடு, 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து அலுவலர்கள் கண்காணிக்கின்றனர். பக்தர்கள் விரும்பித் தட்டில் போடும் வழக்கம் ஹிந்து சமய முறை, அதைப் பெறும் அர்ச்ச...

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆளுநரிடம் ஆய்வியல் நிறைஞர் புகார் மனு

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பேரூர் வளாகத்தில் நேற்று அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற போது ஆய்வியல் நிறைஞர் மாணவர், பல்கலைக்கழகத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் மேடையில் புகாரளித்தார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.செல்வம் வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 430 பேர் ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்டமும், 90 பேர் தங்கப் பதக்கமும் என மொத்தம் 520 பேர் பட்டம் பெற்றனர். உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான கோவி.செழியன் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு மன்றத் தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலாளருமான ந.கலைச்செல்வி முதன்மை விருந்தினராகக் பங்கேற்று பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தினார். பதிவாளர் (பொறுப்பு) காளிதாசன், ஆட்சிமன்றக் குழுவினர், பேராசிர...

சுவிஸ் கூட்டமைப்பின் சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துறையுடன் இந்திய ரயில்வே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய இரயில்வே அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த, தட பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலை மேம்படுத்த சுவிட்சர்லாந்தின் DETEC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த சுவிஸ் கூட்டமைப்பின் சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துறையுடன் இந்திய ரயில்வே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதுப்பிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டு, ரயில்வே அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து விழாவில் உரையாற்றிய மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், தொழில்நுட்ப பகிர்வு, பாதை பராமரிப்பு, மேலாண்மை மற்றும் பல்வேறு துறைகளில் இந்திய ரயில்வேயின் ஒத்துழைப்புக்கான விரிவான கட்டமைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கும் என்றார். கட்டுமானம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய இரயில்வேயை நவீனமயமாக்கும் எங்கள் ...

போக்குவரத்துத் துறை ஊழல் மலிந்த நிலை தான் மக்களின் பயணப் பாதிப்பு

சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளிப் பண்டிகைக்காக அவர்கள் சொந்த ஊர்களுக்கு . நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு இணைய வழி சேவை பாதிக்கப்பட்டது. பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். நள்ளிரவிலும் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பேருந்துகள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்த போக்கு வரத்துத் துறை பல அடிப்படை ஊழல்கள் காரணமாக மந்த நிலை இருந்தது ஆனால் ரயில் போக்குவரத்து தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து காரைக்குடி வழி நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. செல்லும் சிறப்பு காரைக்குடிக்கு ரயில் மாலை 4 மணிக்கும், நாகர்கோவிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் மதியம் 3.45 மணிக்கும் புறப்படும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இன்று பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் வெளியூரில் வசிப்பவர்கள் ச...

தேஜஸ்வி சூரியா ஜேபிசியின் தலைவருக்கு எழுதிய கடிதம்

பெங்களூர் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூரியா  ஜேபிசியின் தலைவருக்கு எழுதிய தனது கடிதத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா குறித்து ஸ்ரீ ஜகதாம்பிகா பால் ஜிக்கு கடிதம் எழுதி, விஜயபுரா மாவட்டம் மற்றும் கர்நாடகாவின் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தை வக்ஃப் சொத்து என்று தவறாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கவனத்தில் கொண்டுள்ளனர். நோட்டீஸ் தவிர, சில நிலப் பார்சல்களுக்கு ஆர்டிசி, பஹானி மற்றும் பிறழ்வு பதிவேடுகளில் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுவின் முன் சாட்சிகளாக இந்த விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைக்குமாறும், இந்த பிரச்சினையின் அளவை நேரடியாகப் புரிந்துகொள்வதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார்.

பசும்பொன்னில் தெய்வீக திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா

பசும்பொன்னில் இன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி குரு பூஜை விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தெய்வீக திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவும் மற்றும் 62-வது குருபூஜை விழாவும் அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி  நினைவிடத்தில் துடங்கியது. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது செந்தப் பணத்தைக் கொடுத்து செய்து வழங்கிய தங்கத்தால் ஆன அங்கி அணிவிக்கப்பட்டது. நேற்று  லட்சார்ச்சனையும் நடைபெற்றது. இன்று தேவர் குருபூஜை அரசியல் விழா நாளை ஆன்மீக விழாவும் நடைபெறுகிறது. பசும்பொன் தேவர் திருமகன் நினைவிடத்தில் இன்று காலை 9 மணிக்கு மாநில  அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்வில், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சுவாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.ம...