முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம்

வேளாண் தோழிகள் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜூன் 18, 2024 அன்று வாரணாசியில் 30,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண் தோழிகள் (கிருஷி சகி) 


சான்றிதழ்களை வழங்குவார். வேளாண்மையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணர்ந்து, கிராமப்புற பெண்களின் திறன்களை மேலும் மேம்படுத்த, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை 30.08.2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இயங்கும் லட்சிய முயற்சியாகும். வேளாண் தோழிகள் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்:-

1.       வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம் என்றால் என்ன?

'லட்சாதிபதி சகோதரி' திட்டத்தின் கீழ், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் தோழிகள் திட்டம், அதன் ஒரு பரிமாணம் ஆகும். வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம், கிராமப்புற பெண்களுக்கு வேளாண் தோழிகளாக அதிகாரம் அளிப்பதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் தோழிகளுக்கு துணைத் தொழிலாளர்களாக பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்     . "லட்சாதிபதி சகோதரி" திட்ட நோக்கத்துடன் இந்தச் சான்றிதழ் வகுப்பு இணைந்துள்ளது.

2.       விவசாய துணைத் தொழிலாளர்களாக வேளாண் தோழிகள் தேர்வு செய்யப்படுவது ஏன்?

நம்பகமான சமூக வள நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் என்பதால் வேளாண் தோழிகள், விவசாய துணைத் தொழிலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விவசாய சமூகங்களில் அவர்களது ஆழமான செயல்பாடு, அவர்கள் வரவேற்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதி செய்கின்றன.

3.       வேளாண் தோழிகளுக்கு என்ன வகையான பயிற்சி வழங்கப்படுகிறது?

வேளாண் தோழிகளுக்கு ஏற்கனவே 56 நாட்களுக்கு பல்வேறு சேவைகளில் பின்வரும் தொகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது:

1. நிலத்தைத் தயார் செய்வது முதல் அறுவடை வரை வேளாண் சூழலியல் சார்ந்த நடைமுறைகள்

2. உழவர் களப் பள்ளிகளை அமைத்தல்

3. விதை வங்கிகள் + ஸ்தாபனம் மற்றும் மேலாண்மை

4. மண் வளம், மண் மற்றும் ஈரப்பத பாதுகாப்பு நடைமுறைகள்

5. ஒருங்கிணைந்த பண்ணை முறைகள்

6. கால்நடை மேலாண்மையின் அடிப்படைகள்

7. உயிரி இடுபொருட்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு, உயிரி இடுபொருட்களின் விற்பனையகங்களை நிறுவுதல்

8. அடிப்படை தகவல்தொடர்பு திறன் 

தற்போது, இந்த வேளாண் தோழிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்க முகமைகள் மூலம்  தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

4.       பயிற்சிக்குப் பிறகு வேளாண் தோழிகளுக்கு என்ன வகையான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்?

பயிற்சியைத் தொடர்ந்து, வேளாண் தோழிகள் திறன் தேர்வு எழுதுவார்கள். தகுதி பெறுபவர்கள் துணைத் தொழிலாளர்களாக சான்றளிக்கப்படுவதுடன், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.

வ எண்

பிரிவின் பெயர்

 செயல்பாடுகள்

செயல்பாடுகள் வாரியாக வேளாண் தோழி ஒருவருக்கான  ஆண்டுக் கட்டணம்

1

ஐ.என்.எம் பிரிவு:

மண் வளம் மற்றும் எம்.ஓ.வி.சி.டி.என்.இ.ஆர் மண் மாதிரி சேகரிப்பு,  மண்வள  ஆலோசனை, உழவர்  உற்பத்தியாளர் அமைப்புகளை  அமைத்தல்,  விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல்

மண் வளம் =ரூ.1300

எம்.ஓ.வி.சி.டி.என்.இ.ஆர் (வடகிழக்கிற்கு மட்டும்) 54000

2

பயிர் பிரிவு

தொகுப்பான முன்னணி செயல் விளக்கம், வேளாண் செயல்திட்ட விவரங்களை சேகரித்தல் மற்றும் பதிவேற்றம் செய்தல்  

ஆண்டுக்கு ரூ. 10,000

3

பயிர் காப்பீட்டுப் பிரிவு:

பி.எம்.எஃப்.பி.ஓய்     கடன் பெறாத விவசாயிகளைத் திரட்டுதல், இழப்பு மதிப்பீடு

ஒரு வேளாண் தோழி ஆண்டுக்கு 20000 ரூபாய் சம்பாதிக்கலாம்

4

எம்.ஐ.டி.ஹெச் பிரிவு

தோட்டக்கலை இயக்கம் பற்றிய விழிப்புணர்வு

ஒரு வட்டாரத்தி்றகு ரூ. 40,000. செயல்பாடுகளின் எண்ணிக்கையில் 40000 ரூபாய் விநியோகத்தை மாநில அரசு முடிவு செய்யும்

5

என்.ஆர்.எம் பிரிவு:

மானாவாரி பகுதி மேம்பாடு, வேளாண் காடுகள் வளர்ப்பு, ஒரு துளி அதிக பயிர்     காலநிலை நெகிழ்திறன் விவசாய செயல்முறை பயிற்சி, மரக்கன்றுகள் விநியோகம், நுண்ணீர் பாசனத்தை பின்பற்றுதல்

ஒரு வேளாண் தோழிக்கு ஆண்டுக்கு 12000 ரூபாய்

6

வேளாண் உள்கட்டமைப்பு நிதி

மக்கள் தொடர்பு முகவர், திட்டத்தை எளிதாக்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

ஆண்டுக்கு ரூ. 5000

7

விதை பிரிவு:

விதை கிராமத் திட்டம்     ஒரு பயிற்சிக்கு ரூ. 900 என்ற அளவில் விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல்

ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 900. மற்றவை உள்ளூர் பகுதியில் வேளாண் தோழியின்  தேவைக்கேற்ப

8

எம் & டி  பிரிவு:

வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம்     செயல்விளக்க களத்திற்கு மூன்று முறை சென்று விவரங்கள், புகைப்படங்களை சேகரித்து க்ரிஷி மேப்பர் செயலியில் பதிவேற்றம் செய்தல்

ஆண்டுக்கு ரூ. 10000

9

எண்ணெய் வித்துகள் பிரிவு:

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்/- எண்ணெய் வித்துகள்      செயல்விளக்க களத்திற்கு மூன்று முறை சென்று விவரங்கள், புகைப்படங்களை சேகரித்து க்ரிஷி மேப்பர் செயலியில் பதிவேற்றம் செய்தல்

ஆண்டுக்கு ரூ. 3000

10

தாவர பாதுகாப்பு:

என்.பி.எஸ்     என்.பி.எஸ்.எஸ். மூலம் பயிர் நிலை, பூச்சி கண்காணிப்பு பற்றிய தகவல்கள், புகைப்படங்களை சேகரித்தல், புகைப்படங்களை பதிவேற்றுதல்

ஆண்டுக்கு ரூ. 1000

11

கடன் பிரிவு:

கே.சி.சி    முக்கிய இணைப்பு, கே.சி.சி விண்ணப்ப ஆதரவு, கடன் இணைப்பு

ஆண்டுக்கு ரூ. 5000

சராசரி வேளாண் தோழிகள் ஓராண்டில் ரூ. 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம்.

5.       இதுவரை எத்தனை வேளாண் தோழிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது?

70,000 வேளாண் தோழிகளில், இதுவரை, 34,000 பேர் துணைத் தொழிலாளர்களாக சான்றளிக்கப்பட்டுள்ளனர்.

6.       தற்போது, எந்த மாநிலங்களில் வேளாண் தோழி பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?

வேளாண் தோழி பயிற்சித் திட்டம் முதல் கட்டமாக தமிழ்நாடு, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம்,மேகாலயா ஆகிய 12 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

7.       எம்.ஓ.வி.சி.டி.என்.இ.ஆர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி செய்வதன் மூலம் வேளாண் தோழிகள் எவ்வாறு வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார்கள்?

தற்போது, எம்.ஓ.வி.சி.டி.என்.இ.ஆர் (வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை வேளாண் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு இயக்கம்) திட்டத்தின் கீழ், 30 வேளாண் தோழிகள் உள்ளூர் வள நிபுணராகப் பணிபுரிகின்றனர், பண்ணை நடவடிக்கைகளை கண்காணிக்கவும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்ளவும் ஒவ்வொரு பண்ணைக்கும் ஒவ்வொரு மாதமும் வருகை தருகின்றனர். விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல், கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளின் குறிப்பேட்டை பராமரித்தல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு வாரமும் உழவர் ஆர்வக் குழு அளவிலான கூட்டங்களை நடத்துகின்றனர். குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காக அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4500 வழங்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு