முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரடங்கால்  உருவாகிப் பெருகியது கள்ளச்சாராயமும் கள்ள மது விற்பனையும்

ஊரடங்கால்  உருவாகிப் பெருகியது கள்ளச்சாராயம்   ஊரல் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில், கள்ளத்தனமாகச் சாராய ஊரல் போட்டும், மதுபாட்டில்களையும் பல மடங்கு விலை ஏற்றி விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் சூழல் உருவாகியிருப்பதால் டாஸ்மாக் மதுபானக் கடைகளி லிருந்த சரக்கு மொத்தம்  பாதுகாப்புக் கருதி குடோனுக்கு மாற்றப்படுகிறது.
இதுபோன்று டாஸ்மாக் சரக்குகளை ஏற்றி இறக்கும் ஒப்பந்தத்தை ஆளும்கட்சியினர் எடுத்துள்ளதால், கடைகளிலிருந்து குடோனுக்கு மாற்றும் போது பாதி  மதுவைக் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கடலூர் முதுநகரில் உள்ள ஒரு கடையில் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் எடுக்கும்போது, அங்குக் குடிகாரர்கள் கூட்டம் கூடியுள்ளது.  அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர்  விசாரித்துள் ளார். உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் 36 ஆயிரம் மதிப்புள்ள மூன்று  பெட்டிகளை எடுத்துக்கொண்டு, கடை ஊழியர்கள் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.மூவரிடமும் உங்கள் மீது வழக்குப்பதியாமல், சிறைக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ஸ்டேஷன் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் ஆய்வாளர். இதற்கு ஊழியர்களோ, “நாங்கள் போலீஸ் உதவியுடன் தான் சரக்குகளை ஏற்றினோம், மக்கள் கூடியதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்” என்று கேட்டுள்ளனர். இதற்கு ஆய்வாளர், “நீங்கள் சட்டம் பேசுறீங்க ஜெயிலுக்கு போங்க” என்று மிரட்டியிருக்கிறார். பின்னர் ரூ.50,000 பணத்தைக் கடன் வாங்கி லஞ்சமாக கொடுத்துட்டு ஊழியர்கள் வந்துள்ளனர்.
இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பிரபலமான சக்கரை ஆலையிலிருந்து ஸ்பிரிட் எடுத்து வந்து லிட்டர் சாராயம் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு லிட்டருக்கு 6 லிட்டர் தண்ணீர் கலந்த சாராயம், 100 மில்லி 150 ரூபாய்க்கு குறிப்பிட்ட பகுதியில் விற்பனை செய்யப்படுகிறதாம்.ஓசூர் அடுத்த பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய குத்தி என்னும் கிராமத்தில் இரண்டு பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதாகத் தகவல் அறிந்த போலீசார் இரண்டு பகுதிகளிலும் சாராயம் காய்ச்சுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 610 லிட்டர் ஊரல்களைல் கொட்டி அழித்தனர்.ஏப்ரல்12 ஆம் தேதி ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே சாராயம் காய்ச்ச ஊரல் போட்டு வைத்திருந்த சிவலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவரை, போலீசார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை  காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதாவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, ராயக்கோட்டை காவல் நிலைய அதிகாரிகளிடம் இடத்தை குறிப்பிட்டு ரெய்டு நடத்த உத்தரவிட்டுள்ளார். உடனடியாக உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், மஞ்சுநாதன் மற்றும் காவலர் களுடன் ஏப்ரல் 11 ராயக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திம்ஜேப்பள்ளி கிராமத்தில், சாராய ஊரல் போட்டுக் காய்ச்சிய திம்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நடேசன், எல்லேசன், இருவரையும் கைது செய்தனர். ஊரலைக் கைப்பற்றிய போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தடையை மீறி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான 1440 மது பாட்டில்களைக் காவல் நிலைய வளாகத்தில் குழிதோண்டி பள்ளத்தில் ஊற்றி போலீசார் அழித்தனர். பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலும் விஏஓ ரமேஷ் முன்னிலையிலும் அனைத்து மது பாட்டில்களும் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது இதுபோன்று நாளுக்கு நாள் கள்ளச்சாராயமும், கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுடன் போராடி வரும் காவல்துறையினருக்கு இது ஒரு சவாலாகவே இருக்கும் நிலை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...