முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் திட்ட இயக்குனராக மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா இயக்குனர் பணி உயர்வு

கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணி உயர்வு காரணமாக  தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் நொய்டாவுக்கு மாற்றமானார். அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி  அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்பதில் பல சந்தேகங்கள் கேட்டு திருத்தம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.    திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான அகழ்வாராய்ச்சியாகும்.  அதை சத்தியமூர்த்தி குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மற்றும் ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்ட யாவற்றையும் முழுமையாகப் பல்வேறு இடங்களில் சேகரித்துத் தொகுத்து மத்திய அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அனுப்பி வைத்தார்கள். மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதை வெளியிடாமலேயே காலம் கடத்தி தாமதித்து  வைத்திருந்த உண்மை யாவரும் அறிந்ததே !. கீழடி அகழ்வாராய்ச்சியும் மிகவும் முக்கியமானது தான். தமிழரின் பயன்பாட்டுத் தொன்மையைச் மற்றும் கடந்து போன வாழ்...

நிலத்தில் மின்கம்பத்தை மாற்றித் தர ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் கைது

பட்டா நிலத்தின் நடுவிலிருந்த மின்கம்பத்தை ஓரமாக மாற்றித் தர ரூபாய். 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.  திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (வயது36).மென்பொருள் பொறியாளர். தந்தை கருப்பசாமிக்கு சொந்தமாக கோயமுத்தூர் மாவட்டம் நீலம்பூர் கிராமம் முதலிப்பாளையம் பகுதியில் 99 சென்ட் நிலம் உள்ளதன் நடுவில் மின்கம்பம் ஒன்று நிலத்தில் ஆரம்ப காலத்தில் இல்லாமல் பிற் காலத்தில் இருந்த தனையறிந்த செந்தில்குமார், மே மாதம் குரும்பபாளையம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று அலுவலர்களை அணுகி, நிலத்தின் நடுவிலிருக்கும் மின்கம்பத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை விடுத்தார். நிலத்தில் இருந்து மாற்றுவதற்கு ரூபாய்.50 ஆயிரத்திற்கு மேலாகச் செலவாகும் என்பதால், இறுதி முடிவை செயற் பொறியாளர் தான் எடுக்க வேண்டும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தனர். அதனையடுத்து சோமனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன் (வயது 57) ஐ கடந்த 9 ஆம் தேதி அணுகிய செந்தில்குமார் நிலத்தில் இருந்து மின் கம்பம் மாற்ற...

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 11,850 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அமைச்சர் தகவல்

மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் 76,181 மாணவ மாணவியர்கள் தகுதி பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 11,850 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதென தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 35,715 நபர்களில் 76,181 நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவர்கள் 59,534 பேருக்கு தமிழ்நாட்டில் 75 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பு 11,850 இடங்கள் மட்டுமே உள்ளன.  நீட் தேர்வில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்து, பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் என்று ஏறத்தாழ 20,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளன. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புகளையும் படிக்கலாம் தமிழ்நாட்டில் 76,181 பேர் தகுதி பெற்று இருந்தாலும் நீட் தேர்ச்சி பெற்ற 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக அமைச்சர் கருத்து. நீட் தேர்வு எ...

காவலர்களின் பணி உயர்வுக்கான காலவரம்பைக் குறைத்தது குறித்து பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி கருத்து

 தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பணி உயர்வுக்கான காலவரம்பைக் குறைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவிஉயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதென விபரம் தெரிந்த தலைவர் பலரும் குறிப்பிடும் நிலையில். அனைத்துக் காவலர்களும் பயனடையும் வகையில், பதவி உயர்வு வழங்கப்படும் என  வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அதற்கு எதிராக செயல்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேருபவர்களுக்கு பத்தாண்டுகளில்  முதல் நிலைக் காவலராகவும், அடுத்த ஐந்தாண்டுகளில் தலைமைக் காவலராகவும், அடுத்த பத்தாண்டுகளில் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பணி உயர்வும் வழங்கப்படுகிறது. காவலர்களாக பணியில் சேர்பவர்கள்  சார்பு ஆய்வாளர்களாகக் கூட பதவி உயர்வு பெற முடியாத சூழல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் தான், இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பத்தாண்டுகளில் முதல்நிலைக் காவலர், 13 ஆண்டுகளில் தலைமைக் காவலர், 23 ஆண்டுகளில் சிறப்பு சார்பு ஆய்வா...

அங்கீகாரமில்லாத தனி மனைகளை வாங்கியவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து, வரன்முறை பெறலாம் அரசாணை வெளியீடு

நகர் ஊரமைப்பு வளர்ச்சி 2025 - 26 ஆம் ஆண்டிற்கான  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்பு எண். 5 -ல் நாள் 20.10.2016 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அங்கீகாரம் இல்லாமல் விற்கப்பட்ட தனிமனையினை எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் இணைய வழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப் படுத்திக் கொள்ளுதல் சம்பந்தப்பட்ட அரசாணை வெளியீடு. அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை எனவும்,  அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை  'தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத தனி மனைகள் வரன்முறைக்கு, காலவரம்பின்றி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாய நிலங்களில் நஞ்சை தவிர புஞ்சை நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக, 2016 ஆம் ஆண்டில் புகார் எழுந்ததையடுத்து நீதிமன்ற உத்தரவு காரணமாக, அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை செய்துள்ள பத்திரப்பதிவுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவுக்கு முன், மனைகளை வாங்கியவர்களுக்கு நிவாரணமாக, நிபந்தனைகள் அடிப்படையில் வரன்முறை செய்யும் திட்டம், 2017 ஆம் ஆண்டில் ...

ஏடிஜிபிஐ கைது செய்து சிறைக்கு அனுப்பி எம்எல்ஏ ஜெகனை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த நீதிமன்றத்தின் உத்தரவு சபாஷ்

கீழ் வைத்தினாங் குப்பம் (தனித் தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி i மக்கள் எதற்காக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பதை மறந்து நீங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யலாமா? 2 விசாரிக்க வந்த காவல்துறையினரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுப்பது ஏன்? 3 ROLE MODEL ஆக இருக்க வேண்டிய நீங்கள், ஏன் கட்டைப் பஞ்சாயத்து செய்தீர்கள்? யார் உங்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது?           4. 200, 300 பேரைக் கூட்டி வந்தால் நீதிபதி பயந்துவிடுவார் என நினைக்காதீர்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள். 5  நீதிமன்றம் நினைத்தால் 10 நிமிடத்தில் உங்களைக் கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருக்க முடியும்" என்ற நிலையில் கைதான ஏடிஜிபி ஜெயராமன் சிறையில் அடைப்பு சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  கைரேகை பதியப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு பின் கிளைச்சிறையில் அடைக்கப்படுகிறார் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் ம...

புகார் மனுக்கள் மீது உரிய இரசிதுகளை அரசு அலுவலகங்களில் வழங்க வேண்டும் அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வரும் புகார் மனுக்கள் மற்றும் ஜமாபந்தி மனுக்கள் மீதான நடவடிக்கைகளை பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் செயலாளர், மனிதவள மேலாண்மை துறை சார்ந்த அரசாணை வெளியிடப்பட்டது தலைமைச் செயலாளர் முருகானந்தம் இஆப உத்தரவு. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இஆப வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: அரசு அலுவலகங்க ளில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் குறைகளைவு புகார் மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கைகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி 3 நாட்களுக்குள் மனுவை பெற்றுக்கொண் டதற்கான ஒப்புகையை ரசிதுகள் மூலம் வழங்குவதுடன் மனு பெற்றப்பட்ட ஒரு மாத காலததிற்குள் குறை களையப்பட வேண்டும். மேலும் ஜமாபந்தி எனும் வருவாய்த் தீர்வாயம் மூலம் மனு பெறப்படும் நாளிலேயே கடந்த ஆண்டுகளில் தீர்வு காணும் நிலை இருந்தது ஆனால் தற்போது அந்த நிலை இல்லை காரணம் இரயத்துவாரி மனுக்களை மட்டுமே வாங்கி தீர்வு கண்ட நிலை மாறியது, தற்போது ஊழல் காரணமாக மாறியுள்ளது. அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளைவு மனுக் களை கையாளும் போது ...

விசாகப்பட்டினத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்ட ஆய்வுக் கூட்டம்

சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறது விசாகப்பட்டினம்: ஏற்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளின் முக்கிய ஆய்வுக் கூட்டம் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. 11-வது ஆண்டு கொண்டாட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவிலான நிகழ்ச்சியை நடத்த விசாகப்பட்டினம் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். கடைசி நிலையில் உள்ள நபருக்கும் யோகாவை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தெளிவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா, ஆந்திரப் பிரதேச அரசின் சிறப்பு தலைமைச் செயலாளர் திரு கே. விஜயானந்த் ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மோனலிசா தாஷ், விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் எம்.என்.ஹரேந்திர பிரசாத் போன்ற மூத்த அதிகாரிகள் பங்...