முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிராமப்புற பெண்களுக்கு நிதி அதிகாரமளித்தல்

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் கிராமப்புற பெண்களுக்கு நிதி அதிகாரமளித்தல்



நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திரு ஸ்மிரிதி ஜுபின் இரானி, கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 417,498,276. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 231,226,199 ஆகும்.

பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 9,88,79,708. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 2,67,91,274 ஆகும்.

பிரதமரின் ஜீவன் சுரக்‌ஷா பீமா திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 22,26,96,354. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 8,34,94,070 ஆகும்.

அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 28,510,260. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 12,445,034 ஆகும்.

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 274,761,862. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 186,045,718 ஆகும்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 110,333. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 90,185 ஆகும்.

பெண்கள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவும், பெண் குழந்தைகளுக்கான நல திட்டத்தின் நிர்வாக அமைப்புகளாக செயல்படவும் மகிளா சக்தி கேந்திரா திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சீரடைந்து வருகிறது. 2014-15-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 917 ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 2019-20-ஆம் ஆண்டில் 943 ஆக அதிகரித்தது.

ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம், சுவதர்கிரேஹ் திட்டம் மற்றும் விதவைகளுக்கான இல்லங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் 60:40 என்னும் விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றன. வட கிழக்கு மாநிலங்களில் இது 90:10 என்னும் அளவிலும், யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத நிதியை மத்திய அரசு ஏற்கும் வகையிலும் இத்திட்டம் அமைந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பதற்கும், ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கிடைப்பதற்கும் அரசு உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்காக 8.66 லட்சம் ஸ்மார்ட் கைபேசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அங்கன்வாடிகளை நவீனமயமாக்குவதற்கான முயற்சியில், நான்கு லட்சம் அங்கன்வாடி மையக் கட்டிடங்களை கட்டுவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டது.

தண்ணீர் வசதிகளுக்காக ஒரு அங்கன்வாடி மையத்திற்கு ரூ.10,000-ம், கழிவறை வசதிகளுக்காக ஒரு அங்கன்வாடி மையத்திற்கு ரூ.

12,000-ம் வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான போக்சோ சட்டம் 2019-ல் திருத்தம் செய்யப்பட்டு, 2020-ஆம் ஆண்டில் போக்சோ விதிகளை அரசு அறிவித்தது.

தத்தெடுத்தலை முறைப்படுத்துவதற்காக ஆன்லைன் முறை ஒன்றை கேரிங்ஸ் என்னும் பெயரில் அரசு செயல்படுத்தியுள்ளது. 2016-17-ஆம் ஆண்டில் இருந்து 2020-21 (2021 பிப்ரவரி 3) வரை 725 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்கள் முதல் 6 வருடங்கள் வயது வரையிலான குழந்தைகளுக்காக தேசிய தொட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 1724 குழந்தைகள் காப்பகங்களுக்கு 2017-18-ஆம் ஆண்டில் ரூ. 4,10,13,960.00 வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களுக்கு குடிதண்ணீர், கழிவறை உட்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளுக்கு 2017-18-ஆம் ஆண்டில் ரூ 52469.95 லட்சமும், 2018-19-ஆம் ஆண்டில் ரூ 73451.70 லட்சமும், 2019-20-ஆம் ஆண்டில் ரூ 74546.32 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...