முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் ஆணையத்தின் தபால் ஓட்டு வசதி சரியானதுதான்: சென்னை உயர் நீதிமன்றம்


தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் தபால் ஓட்டு வசதி சரியானதுதான்: எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 60(சி) பிரிவையும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கொவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள்/ தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு உள்ளானோர் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட வாக்குச் சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு வசதி தொடர்பான விதிகளையும், எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் 2021 மார்ச் 17ம் தேதி தள்ளுபடி செய்தது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

“56.  வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத சில பிரிவினருக்கு விலக்கு அளித்து, அவர்களும் ஜனநாயக திருவிழாவான தேர்தலில் ஒருங்கிணைந்து பங்கேற்க, தபால் ஓட்டை பயன்படுத்த தேர்தல் ஆணையம் செய்துள்ள அனைத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும். வாக்குச் சீட்டின் ரகசியத்தையும், நியாயமான தேர்தல்கள் நடத்துவதையும் பாராட்ட வேண்டும் என்று எஸ். ரக்பிகர் சிங் கில் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். வாக்குச்சீட்டின் இரகசியத்தையோ அல்லது தேர்தல்களை நடத்துவதில் உள்ள நியாயத்தையோ சமரசம் செய்யாமல், இந்த செயல்முறை அனைத்தையும் உள்ளடக்கியதாக மாற்றினால், அது, அதை  நடத்தும் அமைப்பான தேர்தல் ஆணையத்தைக்  கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் ஒரு பெரிய காரணியாக இருக்கும்  என்று ஒருவர் பணிவுடன் கூறலாம்.

1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளின்படி, தபால் ஓட்டு அளிக்க அனுமதிக்கப்பட்ட நபர்களின் வகைப்பாட்டில், எந்த விதிமுறைமீறலையும் இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.  

“60. அதேபோல், 1961 ஆம் ஆண்டின் விதிமுறைகள்படி, தபால் ஓட்டு  மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நபர்களின் வகைப்பாட்டில் எந்தவிதமான விதிமுறைமீறலும்  இருப்பதாகத் தெரியவில்லை. வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டது போல் தெரிகிறது.  அவ்வாறு இருந்தால், 2019 மற்றும் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களால் அனுமதிக்கப்பட்ட  பிரிவினரில் எந்த விதிமுறை மீறலோ இல்லை.  குறிப்பாக, அந்த பிரிவினருக்கு ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க அவர்களுக்கான அடிப்படை உரிமையையை வழங்குவதே நோக்கம் எனத் தெரிகிறது.’’ 

தேர்தல்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவது, தேர்தல் ஆணையத்தின்  முழுமையான அதிகாரங்களுக்குள் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது:

“62. இறுதியாக, அரசியலமைப்பின் 324வது பிரிவின் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டள்ளதால், தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கான அதிகாரம் இல்லை என்ற மனுதாரரின் வாதம், நிராகரிக்கப்பட வேண்டும். மேலும், நாடாளுமன்ற விதியோ, சட்டமன்ற விதிமுறையோ இல்லாதபோது, தேர்தல்களை நடத்துவதற்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என ஏ.சி.ஜோஷ் தீர்ப்பில் உள்ளது.   தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் எந்தவித பிரிவும் இல்லாதபோது,  324 பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, சட்டத்துக்கு உதவும் வகையில், கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் காட்டுப்பாடு விஷயத்தில் இது போன்ற அதிகாரத்தைக் காண முடிந்தது.”  மேலும், தேர்தலை நடத்துவதற்கான எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை நீதிமன்ற தீர்ப்பு அங்கீகரித்துள்ளது...’’ 

2019ம் ஆண்டு ஜார்கண்ட் தேர்தலில் இருந்தே, சில பிரிவினருக்கு தபால் ஓட்டு முறையை தேர்தல் ஆணையம் தொடங்கியது.  2020ம் ஆண்டு நடத்தப்பட்ட பிகார் பொது தேர்தல்களிலும், தபால் ஓட்டு வசதி, இந்த அனைத்து பிரிவினருக்கும் நீட்டிக்கப்பட்டது.  இதில் 52,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர்.  எந்த வாக்காளரும் விடுபடாமல், அனைவரும் உள்ளடங்கிய தேர்தலை நடத்தும்  நோக்கத்தில் நடைபெறும் தேர்தல்களிலும், இடைத்தேர்தல்களிலும், தபால் ஓட்டுகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழங்கியுள்ளது’’.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாக்குச் சாவடிக்கு செல்ல முடியாத அளவுக்கு உடல் நிலை உள்ளவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியைப் பெறுவதுதான் இந்த வசதியின் நோக்கம்.  உடல்நிலை பாதிக்கப்பட்ட பல வாக்காளர்களுக்கு இந்த வசதி பலனளித்துள்ளது.   மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோரும் வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்களிக்கத் தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமானது.  மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச போக்குவரத்து வசதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த