முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான இணைய கருத்தரங்கில் பிரதமர் உரை





பிரதமர் அலுவலகம்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் உரை

வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகளவில் தேவை என வலியுறுத்தினார்

அரசின் தொலை நோக்கில், சிறு விவசாயிகளின் மேம்பாடு முக்கியமானதாக உள்ளது: பிரதமர்

பதப்படுத்தப்பட்ட உணவுக்கான உலக சந்தைக்கு நமது நாட்டின் வேளாண்துறையை நாம் விரிவு படுத்த வேண்டும்: பிரதமர்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்  தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். 

இந்த இணைய கருத்தரங்கில், வேளாண்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய வேளாண்துறை அமைச்சரும் இந்த இணைய கருத்தரங்கில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அரசின் தொலை நோக்கில் சிறு விவசாயிகள் முக்கியமான இடத்தில் இருப்பதை எடுத்துரைத்தார்.  சிறு விவசாயிகளை மேம்படுத்துவது, பல பிரச்னைகளில் இருந்து  விவசாயத்துறை விடுபட மிகவும் உதவும் என்றார்.

 இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளத்துறைக்கு முன்னுரிமையுடன், வேளாண் கடன் இலக்கை ரூ.16,50,000 கோடியாக உயர்த்தியது,  ஊரக கட்டமைப்பு நிதியை ரூ.40,000 கோடியாக உயர்த்தியது, சொட்டு நீர் பாசனத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியது, அழிந்துபோகும் நிலையில் இருந்த தயாரிப்புகளுக்கு ஆபரேஷன் பசுமை திட்டத்தை விரிவுபடுத்தியது, மேலும் 1000 மண்டிகளை இ-நாம்-உடன் இணைத்தது போன்ற  விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய விஷயங்களை அவர் சுட்டிக் காட்டினார்.

அறுவடைக்கு பிந்தைய உணவு பதப்படுத்துதல் புரட்சி, இதுவரை இல்லாத அளவுக்கு வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்கு மத்தியில்,  21ம் நூற்றாண்டில் மதிப்பை கூட்டுதல்  ஆகிய இந்தியாவின் தேவைகளை அவர் வலியுறுத்தினார்.  இது போன்ற பணிகள் 2 அல்லது 3 சதாப்தங்களுக்கு முன்பே செய்யப்பட்டிருந்தால், நாட்டுக்கு நன்றாக இருந்திருக்கும் என அவர் கருத்து தெரிவித்தார்.

உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மீன்கள் போன்ற விவசாயம் தொடர்பான ஒவ்வொரு துறையிலும், பதப்படுத்துதலை மேம்படுத்த வேண்டும் என பிரதமர்  வலுவாக வலியுறுத்தினார்.  இதற்கு, விவசாயிகளுக்கு, அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே சேமிப்பு கிடங்கு வசதிகள் இருக்க வேண்டியது அவசியம்  என அவர் கூறினார். 

விவசாய உற்பத்தியை வயல்களில் இருந்து, பதப்படுத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் முறையில் முன்னேற்றம் தேவை என கூறிய பிரதமர்,  இந்த பதப்படுத்துதல் மையங்களை விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.  நாட்டின் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருளை விற்பதற்கான வாய்ப்புகளை விரிவாக்க வேண்டிய தேவையுள்ளது என அவர் வலியுறுத்தினார்.

 ‘‘பதப்படுத்தப்பட்ட உணவுக்கான உலக சந்தைக்கு நமது நாட்டின் விவசாயத்துறையை நாம் விரிவாக்க வேண்டும். கிராமங்களுக்கு அருகிலேயே வேளாண் தொழிற்சாலை தொகுப்புகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும்’’ என பிரதமர் கூறினார்.  இதில் ஆர்கானிக் தொகுப்புகள் மற்றும் ஏற்றுமதி தொகுப்புகள் முக்கிய பங்காற்றும் என அவர் கூறினார். 

வேளாண் பொருட்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும், தொழிற்சாலை தயாரிப்புகள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும் கொண்டுச்  செல்லும் சூழலுக்கு நாம் செல்ல வேண்டும் என  அவர்  கூறினார்.  ஒரு மாவட்டத்துக்கு ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் நமது தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் வழிகளை ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மீன் பிடி தொழில் மற்றும் ஏற்றுமதியில் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும்,  பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு குறைவாக உள்ளது என பிரதமர்  வருத்தத்துடன் கூறினார்.  இந்த சூழலை மாற்ற, தயார் நிலை உணவுகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், கடல் உணவுப் பொருட்கள் , பால் பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, சீர்திருத்தங்களுடன் ரூ.11,000 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 ‘ஆபரேசன் கிரீன்ஸ்’ திட்டத்தின் கீழ், காய்கறிகள் மற்றும் பழங்கள் போக்குவரத்துக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.  கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 350 கிசான் ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 1,00,000 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டன என அவர் கூறினார்.

ஒட்டு மொத்த நாட்டின் விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் குளிர்பதன கிடங்காக இந்த கிசான் ரயில் செயல்படுகிறது. 

தற்சார்பு சார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை உருவாக்க வலியுறுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார்.

பிரதமரின்  சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு உதவிகள் அளிக்கப்படுகின்றன. டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள்  மற்றும் இதர விவசாய இயந்திரங்களை  சிறு விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு வாடகைக்கு விடுவது ஆகியவற்றுடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

விவசாய பொருட்களை மலிவான விலையில் சந்தைக்கு கொண்டு செல்ல ஒப்பந்த லாரிகளை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் கூறினார்.  மண்வள அட்டை வழங்கும் வசதியை நீட்டிக்க வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். 

மண்வளம்  பற்றிய விவசாயிகளின் விழிப்புணர்வை அதிகரிப்பது, விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என அவர் கூறினார்.

வேளாண்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில், தனியார் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். 

கோதுமை மற்றும் அரிசி மட்டும் பயிரிடாமல், இதர பொருட்கள் உற்பத்தி செய்யும் வாய்ப்பையும் நாம் வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார். 

ஆர்கானிக் உணவு முதல், காய்கறிகள் வரை பல விவசாய உற்பத்தி பொருட்களை அவர் குறிப்பிட்டார்.  கடற்பாசி மற்றும் தேன் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  இது விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் என அவர் கூறினார்.  தனியார் துறை பங்களிப்பு அதிகரிப்பது, விவசாயிகளின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் என அவர் கூறினார்.

ஒப்பந்த விவசாய முறை,  நாட்டில் நீண்டகாலமாக இருப்பதாக பிரதமர் கூறினார். இந்த ஒப்பந்த முறை விவசாயம், வர்த்தக நோக்கத்துடன் மட்டும் இல்லாமல், நிலத்துக்கான நமது பொறுப்பையும் பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் விவசாயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும், நீர்ப்பாசனம் முதல் விதைத்தல், அறுவடை மற்றும் விற்பனை வரை விரிவான தொழில்நுட்ப தீர்வுகளை காண வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.  வேளாண் துறை தொடர்பான தொடக்க நிறுவனங்களை நாம் ஊக்குவித்து இளைஞர்களை நாம் இணைக்க வேண்டும் என அவர் கூறினார். 

கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கடன் அட்டை திட்டம்,  கால் நடை வளர்ப்போர், மீனவர்கள் என  கொஞ்சம், கொஞ்சமாக விரிவுபடுத்தப்படுவதாகவும், கடந்த ஓராண்டில் 1.80 கோடி விவசாயிகளுக்கு, கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

கடந்த 6-7 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒப்பிடும்போது, கடன் வசதிகள் இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகியுள்ளன.  நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 1000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுடன் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கூட்டுறவுகளை வலுப்படுத்துகிறது என அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த