பிரதமர் அலுவலகம்
கீதா பதிப்பகத்தின் தலைவர் ராதேஷ்யம் கெம்கா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
கீதா பதிப்பகத்தின் தலைவர் ராதேஷ்யாம் கெம்கா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘கீதா பதிப்பகத்தின் தலைவரும், மக்களுக்கு சனாதன இலக்கியத்தை கொண்டு வந்தவருமான ராதேஷ்யாம் கெம்கா மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர் கெம்கா. இந்த சோகமான நேரத்தில், அவரது குடும்பத்துக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள்.. ஓம் சாந்தி !’’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
முன்னாள் மத்தியமைச்சர் திரு திக்விஜய்சிங் ஜலா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் திரு திக்விஜய்சிங் ஜலா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ முன்னாள் மத்திய அமைச்சர் திரு திக்விஜய்சிங் ஜலா மறைவால் வேதனையடைந்தேன்.
குஜராத் மற்றும் தேசிய அரசியலில் அவர் முக்கிய பங்காற்றினார். அவரது சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வத்துக்காக அவர் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்துக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்