தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் பொறுப்பேற்பு பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து பிரதமர் அலுவலகம்
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
அதேபோல்
புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது சுட்டுரைச் செய்தியில், “புதுச்சேரியின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துகள். எதிர்வரும் பதவிக்காலத்திற்கு நல்வாழ்த்துகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை தமிழ்க் முதல்வர் பதவியை ஏற்றார் அவருடன் மந்திரிசபையும் பதவியேற்றார்கள் பின்னர் தலைவர்களின் நினைவிடங்களில் வணங்கி பின்னர் நல்ல நேரத்தில் தலைமைச் செயலகத்தில் பொறுப்பை ஏற்றபின் முதல் கோப்பில் கையெழுத்திட்டார்
கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹.4000.முதல் கட்டமாக ₹ 2,000 வழங்கப்படும்
அடுத்து
ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு. (மே மாதம் 16 ஆம் தேதி முதல் அமல்).அரசு நகரப் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்
மற்றும்
தனியார் மருத்துவமனையில் கொரோனா கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அரசு உத்தரவு அறிவித்தார் மேலும் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பொறுப்பு ஏற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதித்துறை நிலை குறித்து யார் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்கள்? வட்டி இதுவரை எவ்வளவு கட்டி இருக்கிறீர்கள்? போன்ற பத்து கேள்விகள் முந்தைய ஆட்சியாளர்களிடம் கேட்கப்பட இருக்கிறது எனவும் மற்றும் நிதி நிலை வெள்ளை அறிக்கை கேட்டு இருக்கிறோம் அது அதிகாரபூர்வமா வெளியிடப்படும்
அதன் பின்னர் நிதி நிலை தெரியும். எனவும் அதிரடி செயல்பாடு மக்கள் வியக்கும் நிலை அதேபோல்
- புதுச்சேரி யூனியன் பிரதேச பொறுப்பாளர்
மத்திய பாஜக இணை அமைச்சர் கிஷன்ரெட்டி பேட்டி..
3 என்.ஆர்.காங் அமைச்சர்கள்...3 பாஜக அமைச்சர்கள் என ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது..இதில் துணை முதல்வரும் அடங்கும்..துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள்..எனத் தெரிவித்தார் தமிழ்க் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அடுத்தடுத்து 5 கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார் அதன்பின் நிர்வாகம்
மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார் அதன்படி
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சிறப்புத் திட்டம் அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதிஷ் ஐஏஎஸ் நியமனம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச் சந்திரன், உமாநாத், அனு ஜார்ஜ், எம்.எஸ் சண்முகம் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்ய ப்பட்டனர்.
கருத்துகள்