முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ 2479 கோடி ஒதுக்கீடு

ஜல்சக்தி அமைச்சகம்  ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ 2479 கோடி ஒதுக்கீடு



ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரமான தண்ணீர் குழாய் இணைப்பை வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு ரூ. 2479.88 கோடியை ஜார்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரூ.572.24 கோடியாக இருந்தது. இந்த நான்கு மடங்கு உயர்த்தப்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்கையில், 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு ஊரக வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது நாடு முழுவதும் மொத்தமுள்ள 19.20 கோடி ஊரக வீடுகளில் வெறும் 3.23 கோடி (17%) வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்பு இருந்தது. கடந்த 22 மாதங்களில் கொவிட்-19 பெருந்தொற்றையும் பொருட்படுத்தாது ஜல் ஜீவன் இயக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதனால் 4.39 கோடி வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நம் நாட்டில் இதுவரை 7.62 கோடி (சுமார் 40%) ஊரக வீடுகளுக்கு இந்த வசதி செய்துத் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி, கோவா, தெலங்கானா, அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்தத் திட்டம் ஏற்கனவே 100% நிறைவடைந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் 29,752 கிராமங்களில் மொத்தமுள்ள 58.95 லட்சம் வீடுகளில் வெறும் 7.72 லட்சம் (13%) வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது அந்த மாநிலத்தில் 3.45 லட்சம் (5.85%) வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்பு இருந்தது. கடந்த 22 மாதங்களில் 4.27 லட்சம் (7.24%) வீடுகளுக்கு இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. எனினும் தேசிய சராசரி அளவான 23%துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த 2020-21ஆம் ஆண்டில் வெறும் 2.99 லட்சம் இணைப்புகள்  வழங்கப்பட்டது. இந்த வேகம் நீடித்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் எஞ்சியுள்ள 51.23 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்குவது மிகவும் சவாலாக இருக்கும்.

இந்தத் திட்டத்தை மிக மெதுவாகவே செயல்படுத்தியதால் 2020-21ஆம் ஆண்டிற்கான மானியத்தை ஜார்கண்ட்  மாநிலத்தால் பயன்படுத்த முடியவில்லை. இதே ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மொத்தத் தொகையான ரூ. 572.24 கோடியில் ரூ. 143.06 கோடியை மட்டுமே இந்த மாநிலம் பயன்படுத்தி ரூ.429.18 கோடியைத் திருப்பித் தந்தது. இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் தண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக இந்த மாநிலத்தின் வசம் மொத்தம் ரூ. 5235.62 கோடி உறுதி தொகை உள்ளது. எனினும் மத்திய ஒதுக்கீட்டின் முதல் தவணையை விடுவிப்பதற்கான முன்மொழிவை மாநில அரசு இன்னும் அனுப்பவில்லை.

2024-ஆம் ஆண்டிற்குள் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக அனைத்து கிராமங்களிலும் இதற்கான பணியை முடுக்கிவிடுமாறு  அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், ஜார்கண்ட் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். முழு தொகையையும் பயன்படுத்தி இந்தத் திட்டத்தின் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், இத்தகைய மிக உயரிய முதலீடு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், ஊரகப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...