காவல் துறைக்கு எதிரான புகார்களை விசாரிக்க குழு அமைக்கக் கோரிய வழக்கில் அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு.
காவல்துறை தவறுகள் ஊழல் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான புகார்
மீது விசாரணை நடத்த மாநில, மாவட்ட அளவில் குழு அமைக்க வழக்கு
மீது விசாரணை நடத்த மாநில, மாவட்ட அளவில் குழு அமைக்க வழக்கு
உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, காவல் துறைக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாநில, மாவட்ட அளவிலான குழு அமைக்கக் கோரிய வழக்கில் தமிழ் நாடு அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் ஜோதிபாசு தாக்கல் செய்த பொதுநல மனுவில் : காவல் துறைக்கு எதிரான புகார்களை விசாரிக்க, மாநில, மாவட்ட அளவில் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டில் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழக அரசு 2013 ஆம் ஆண்டில் காவல் துறை சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தது.
இதில் காவல் துறைக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாநில, மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில அளவிலான குழு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் மாவட்ட அளவிலான குழுவை அமைக்க வேண்டும்.
இதன்படி பக்கத்து மாநிலமான கேரளாவிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உள்துறை செயலர் தலைமையில் மாநில அளவிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் காவல் துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இது உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முரணானது.குழு பற்றி மக்களுக்கு அரசு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து தெளிவான அறிவிப்புத் தரவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாநில, மாவட்ட அளவில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன்னால் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழகத்தின் தலைமைச் செயலர், உள்துறை செயலர், சட்டத்துறை செயலர், காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், காவல்துறையினரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே, தவறுசெய்யும் காவல்துறையினர் மீது புகார் அளிக்க தனி அமைப்பை (Police Complaints Authority) உருவாக்க
வேண்டும் எனக் கடந்த 2006-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி, தனி அமைப்பை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு, தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டத்தின்கீழ் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி, காவல்துறையினர் மீது புகார் தெரிவிக்க மாநில, மாவட்ட அளவில் தனி அமைப்பு (பிசிஏ) உருவாக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது. தற்போது இந்த புதிய வழக்கு தாக்கல் ஆனது.
கருத்துகள்