சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி
பிரதமரின் வாழ்த்துச் செய்தி
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள பங்களிப்பு மற்றும் வியத்தகு சாதனைகளை பாராட்ட விரும்புகிறேன். அவர்களது வாழ்க்கைப் பயணங்கள், அவர்களது துணிச்சல் மற்றும் மன உறுதி மிகவும் ஊக்கமளிக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் விதமாக கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த, மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. சமத்துவம், எளிதில் அணுகுதல் மற்றும் வாய்ப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் 2021 சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி மதர் சிறப்புப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, மருத்துவர் எம். சிவக்குமார், தலைவர், ரோட்டரி சங்கம் .தனசேகரன், முன்னால் தலைவர் ரோட்டரி சங்கத்தின் செயலாளரான சிவசுப்பிரமணியம், மற்றும் . குமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.
கருத்துகள்