நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர், தொழிலாளர், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் இரண்டாம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும்.
உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக இன்றும் நாளையும் (மார்ச் 28, 29) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.
இது தவிர தமிழ்நாட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும் இதை ஆதரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர், தொழிலாளர், அமைப்பு சாரா நிறுவன பணியாளர் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு பணிகள் அனைத்தும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது.
இதனால் இன்றும், நாளையும் வங்கி சேவை மேலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. ஏற்கனவே 2நாள் விடுமுறை என்பதால் எடிஎம்மில் பணம் நிரப்பும் பணி நடக்கவில்லை. இன்றும் பணம் போடப்படாது என்பதால் ஏடிஎம் சேவை முடங்கும் வாய்ப்பு உள்ளது.
சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் அளித்துள்ள பேட்டியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸி, பேருந்துகள் பெருமளவில் இயங்காது என தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 1.10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றும் இன்றும், இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதன்காரணமாக நாடு முழுவதும் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி சேவைகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமலிருக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும்.
மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நேற்றும் இன்றும் (மார்ச் மாதம் 28, மற்றும் 29) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில்
இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும் இதை ஆதரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர், தொழிலாளர், அமைப்பு சாரா நிறுவன பணியாளர் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு பணிகள் அனைத்தும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள 2 நாட்களில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு ஊழியர்கள்.
இதனால் நேற்றும் இன்றும், வங்கிச் சேவை மற்றும் அஞ்சல் துறை சேவை மேலும் பாதிப்புக்குள்ளானது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 நாட்கள் விடுமுறை என்பதால் எடிஎம்மில் பணம் நிரப்பும் பணிகள் நடக்கவில்லை. இன்றும் பணம் போடப்படாது என்பதால் ஏடிஎம் சேவைகள் முடங்கும் நிலையுள்ளது.
சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் தந்த தகவல்: இன்றும் நாளையும் ஆட்டோ, கால் டாக்ஸி, பேருந்துகள் பெருமளவில் இயங்காது என தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 1.10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் மாநில துணை தலைவர் ஜி.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மையச் சங்கத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் எவரும் 28 ஆம் தேதியும் மற்றும் 29ஆம் தேதியும் இரு தினங்கள் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை மாநில மையசீ சங்கம் தெரிவித்துள்ளது.மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, தனியார் மயம் உட்பட பல்வேறு விவகாரங்களை கண்டித்து வேலை நிறுத்தம்
போக்குவரத்துத் துறையின் சிஐடியுசி, தொமுச உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தம்
சென்னை பணிமனைகளில் பேருந்துகளை இயக்க முன்வராத ஊழியர்கள்
3,500 பேருந்துகள் இயங்கும் நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தத்தை முன்னிட்டு வங்கி பணிகள் பாதிப்புஇந்தியாவில் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழு உரிமையுடையதல்ல. 1947 ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலை நிறுத்தம் கட்டுப்பாடுகளின்றி இருந்தால் நாட்டின் தொழில் அமைதி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறையும் என்ற காரணத்தால் தொழில் ககராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது பொதுவாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற கூடுதல் நிபந்தனைகளை விதிக்கிறது .இந்தியாவில் வேலை நிறுத்தம் என்பதைத் தொழிற்றகராறுகள் சட்டம் பிரிவு-2 (Q) வின் படி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் அல்லது பொதுவான நோக்கத்துடன் திட்டமிட்டு வேலையைச் செய்ய மறுத்தல் என்று வரையறையாகிறது.
தொழிலாளர்கள் அனைவரும் பொதுக்கருத்துடன் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது வேலை செய்ய மறுத்திருக்க வேண்டும்.
வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும்.
வேலை செய்ய மறுப்பது தொழிலாளர்களின் திட்டமிட்ட கூட்டுச் செயலாக இருக்க வேண்டும்.
வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் செய்யும் வேலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும. தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் வேலை நிறுத்தம் தான். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் மூலம் நிர்வாகத்தைப் பணிய வைத்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்பும், செய்யப்பட்ட பின்பும் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றாவிட்டால் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாகி விடும்.
கருத்துகள்