முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர், தொழிலாளர், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் இரண்டாம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும்.


மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக இன்றும் நாளையும் (மார்ச் 28, 29) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

இது தவிர தமிழ்நாட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும் இதை ஆதரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர், தொழிலாளர், அமைப்பு சாரா நிறுவன பணியாளர் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு பணிகள் அனைத்தும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது.


எனவே, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள 2 நாட்களில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு ஊழியர்கள்.

இதனால் இன்றும், நாளையும் வங்கி சேவை மேலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. ஏற்கனவே 2நாள் விடுமுறை என்பதால் எடிஎம்மில் பணம் நிரப்பும் பணி நடக்கவில்லை. இன்றும் பணம் போடப்படாது என்பதால் ஏடிஎம் சேவை முடங்கும் வாய்ப்பு உள்ளது.



சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் அளித்துள்ள பேட்டியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸி, பேருந்துகள் பெருமளவில் இயங்காது என தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 1.10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.


வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றும் இன்றும், இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதன்காரணமாக நாடு முழுவதும் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி சேவைகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமலிருக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும்.

மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நேற்றும் இன்றும்  (மார்ச் மாதம்  28, மற்றும்  29) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில்

இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

 தமிழ்நாட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும் இதை ஆதரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர், தொழிலாளர், அமைப்பு சாரா நிறுவன பணியாளர் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு பணிகள் அனைத்தும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள 2 நாட்களில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு ஊழியர்கள்.

இதனால் நேற்றும் இன்றும், வங்கிச் சேவை மற்றும் அஞ்சல் துறை சேவை மேலும் பாதிப்புக்குள்ளானது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 நாட்கள்  விடுமுறை என்பதால் எடிஎம்மில் பணம் நிரப்பும் பணிகள் நடக்கவில்லை. இன்றும் பணம் போடப்படாது என்பதால் ஏடிஎம் சேவைகள் முடங்கும் நிலையுள்ளது.

சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் தந்த தகவல்: இன்றும் நாளையும் ஆட்டோ, கால் டாக்ஸி, பேருந்துகள் பெருமளவில் இயங்காது என தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 1.10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் மாநில துணை தலைவர் ஜி.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மையச் சங்கத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் எவரும் 28 ஆம் தேதியும் மற்றும் 29ஆம் தேதியும்  இரு தினங்கள் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை மாநில மையசீ சங்கம் தெரிவித்துள்ளது.மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, தனியார் மயம் உட்பட பல்வேறு விவகாரங்களை கண்டித்து வேலை நிறுத்தம்

போக்குவரத்துத் துறையின் சிஐடியுசி, தொமுச உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தம்

சென்னை பணிமனைகளில் பேருந்துகளை இயக்க முன்வராத ஊழியர்கள்

3,500 பேருந்துகள் இயங்கும் நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்

 வேலை நிறுத்தத்தை முன்னிட்டு வங்கி பணிகள் பாதிப்புஇந்தியாவில் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழு உரிமையுடையதல்ல. 1947 ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலை நிறுத்தம் கட்டுப்பாடுகளின்றி இருந்தால் நாட்டின் தொழில் அமைதி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறையும் என்ற காரணத்தால் தொழில் ககராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது பொதுவாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற கூடுதல் நிபந்தனைகளை விதிக்கிறது .இந்தியாவில் வேலை நிறுத்தம் என்பதைத் தொழிற்றகராறுகள் சட்டம் பிரிவு-2 (Q) வின் படி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் அல்லது பொதுவான நோக்கத்துடன் திட்டமிட்டு வேலையைச் செய்ய மறுத்தல் என்று வரையறையாகிறது. 

தொழிலாளர்கள் அனைவரும் பொதுக்கருத்துடன் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது வேலை செய்ய மறுத்திருக்க வேண்டும்.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

வேலை செய்ய மறுப்பது தொழிலாளர்களின் திட்டமிட்ட கூட்டுச் செயலாக இருக்க வேண்டும்.

வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் செய்யும் வேலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும. தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் வேலை நிறுத்தம் தான். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் மூலம் நிர்வாகத்தைப் பணிய வைத்து கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்பும், செய்யப்பட்ட பின்பும் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றாவிட்டால் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாகி விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த