கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு அக்னிப் பால்குடத் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் பிரசித்தி பெற்ற கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவில் அக்னி பால்குடத் திருவிழா நடைபெற்றதில் கோவில் முன்பு 14 அக்னிக் குண்டங்கள் வளர்க்கப்பட்டதில் கொன்னையூரைச் சுற்றியுள்ள செம்பூதி, செவலூர், மேலமேலநிலை, மூலங்குடி, கொன்னைப்பட்டி, ரெட்டியாபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், வேகுப்பட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பால்க்குடம் சுமத்தும், காவடி எடுத்தும், உடம்பில் அலகு குத்தியும், கோவில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள அக்னிக் குண்டத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்வுகளில் பொன்னமராவதி தீயணைப்பு துறையினர் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்னிப் பால்குட திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் செயல் அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.. ஆலயத்தின் வரலாற்றுக் குறிப்புகள் வருமாறு:-
முற்காலத்தில் கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. யாதவ இனப் பெரியவர் , அதிகாலையில், பால் கறந்து, தலைச் சுமையில் தூக்கிச் சென்று ஊருக்குள் விற்று வருவது வழக்கம். அக் காலத்தில், ஊர் மக்களை பல விசித்திரமான நோய்கள் தாக்கியதனால், நிலத்தில் விவசாயம் செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவையெல்லாம், நீர் பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட... குடிப்பதற்குத் தண்ணீர் கஷ்டம் அடுத்தடுத்துப் பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்தன. அதனால் மக்கள் அனைவரும் வேண்டினர். அவர்களின் நோய்கள் யாவும் குணமாகவேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்; பூமி செழித்துத் , அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்கவேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்து கொண்டாள். பாலை எடுத்துக்கொக்ண்டு, வழக்கம்போல் அந்தப் பெரியவர் வரும்போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட, தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்துபோனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழே மண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது.
பெரியவர் கவலையானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றை மரத்தின் வேரை வெட்டினார். அப்படி வெட்டிய கனம் முதல் இரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்துபோன பெரியவர். விஷயமரிந்து, ஊர் கூடியது. இன்னும் தோண்டிப் பார்க்க .... அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்ட அம்மன் ! விக்கிரகத்தை பள்ளத்திலிருந்து எடுத்து , மேடான பகுதியில் வைத்தது தான் தாமதம்... உடலையே துளைத்தெடுப்பது போல் பெய்த, கன மழை ! கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின; பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்குச் சென்று, விதைகளைக் குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள் யாவும் நீங்கின.
ஆடி அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு மற்றும் பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கும் பங்குனி திருவிழா, பூச்சொரிதல் திருவிழா ஆகியவை விழாக்களாகும். காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை என்ற வகையில் மூன்று கால பூசைகள் நடத்தப்பெறுகின்றன.
சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் வழிபடுகின்ற முக்கியக் கோவிலாகக் கருதப்படுகிறது. பங்குனித் திருவிழாவின் ஒரு பகுதியாக இங்கு நடைபெறுகின்ற நாடு செலுத்துதல் விழா சிறப்பானதாகும். விழாவின்போது அருகிலுள்ள நான்கு பகுதி நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பு, ஈட்டி, பல்வேறு வேடத்தை அணிந்து தத்தம் ஊரிலிருந்து கால்நடையாகச் சென்று நாடு செலுத்தி வழிபாடு செய்தனர். குறிப்பாக ஆலவயல் நாட்டைச் சேர்ந்த மக்கள் நேர்த்திக் கடன்களுக்காக உடலில் சகதி பூசி வருவது சிறப்பாகக் காணப்படுகிறது.
கருத்துகள்