இந்திய அறிவுசார் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது அவசியம்: பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்
புதுவை பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சார்பில் மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் “இந்திய அறிவு முறைக்கு வட்டார இலக்கிய பாரம்பரியத்தின் பங்களிப்பு” என்கிற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. சமூக அறிவியலிலுக்கான இந்திய அவையத்துடன் இணைந்து நடத்தப்படும்.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் இந்திய அறிவுசார் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் அவசியத்தை அதன் முக்கியத்துவத்தை முன்வைத்து பேசினார். காலனிய மற்றும் மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால் இன்றைய இளைய சமூகம் இந்திய அறிவுசார் பாரம்பரியத்தை இழந்து நிற்பது வேதனைக்குரியது. நமது பாரம்பரிய அறிவுசார் தரவுகளை, முறைகளை அறிந்து கொள்வதில் இன்றைய இளைஞர்களிடம் ஆர்வக்குறைபாடு இருப்பதை சுட்டிக்காட்டிய துணைவேந்தர் இத்தகைய கருத்தரங்குகள் மட்டுமே இந்த குறைபாட்டை நீக்கி பாரம்பரிய அறிவுசார் அமைப்புகளை கல்வி முறையின் ஒரு முக்கியமான அங்கமாக்க இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மைய உரை ஆற்றிய ஆந்திர மத்திய பழங்குடி பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. டீ வி கட்டிமணி இக்கருத்தரங்கின் இன்றைய தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் இந்திய பாரம்பரிய அறிவு முறைகளை உள்ளடக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார். செவ்வியல் தத்துவ மரபிலிருந்து நாட்டுப்புற மக்கள் இசை வரை அனைத்தும் இந்திய பாரம்பரிய கலாச்சார பனுவல்களில் இலக்கிய பிரதிகளில் அறிவுச்சுரங்கமாய் கொட்டிக்கிடக்கிறது என்றார். வாய்மொழி இலக்கியங்களை பழங்குடி மொழிகளை கலாச்சார அடையாளங்களை மீட்டெடுப்பது காலத்தின் தேவை. மிகச்சாதாரண வீட்டு வேலை தொடங்கி வயல்வெளி வேலைகள் வரை அனைத்துமே ஒரு விதத்தில் மனம், உடல், எண்னங்களை உள்ளடிக்கிய கலைகளே. பழங்குடி மொழிகள் அழிந்து வருவதை எச்சரித்த துணைவேந்தர் அவற்றை கல்வி பாடத்திட்டத்தில் உள்ளடக்கி காப்பாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். பட்டப்படிப்போடு செயல்முறையும் கைகோர்த்து நின்றால் தான் முழுமையான கல்வி அறிவு சாத்தியம் என்றும் அதற்க்கு இந்திய பாரம்பரிய அறிவு முறைகள் வழிவகுக்கும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் மனிதவியல் புல முதன்மையர் பேரா கிளமெண்ட் லூர்து, ஆங்கிலத்துறை தலைவர் பேரா மார்க்ஸ், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உஜ்வல் ஜனா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வறிஞர்கள் கலந்து கொண்டனர். அறிவுசார் சொத்துரிமை பொருள் சார்ந்த சொத்துரிமையின் நீடிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒருவர் தனது உழைப்பால் பெளதீகப் பொருட்களை உருவாக்குகிறாரோ அல்லது சேமிக்கிறாரோ அதே போல ஒருவரின் உழைப்பின் ஊடாகவே அறிவுசார் படைப்பு உருவாக்கப்படலாம். எப்படிச் சொத்துரிமை பாதுகாக்கப்படுகிறதோ அப்படியே அறிவுசார் சொத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பலரது வாதம்.
புவிசார் குறியீடுகளும் இந்த சொத்துரிமையின் கீழ் வருவதாகும். இந்தியாவில் மதுரை மல்லிகைப்பூ, மற்றும் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை, திருப்பதி ஆலயத்தில் வழங்கும் லட்டு போன்றவைகள் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
கருத்துகள்