முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப் பேரவையில் நிறைவேற்றம்.

பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா தமிழகத்தில் நிறைவேற்றம்

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநில சட்ட மன்றப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இச் சட்ட முன்வடிவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்ப்பதாக அஇஅதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர் தமிழ்நாட்டில் 13 மாநிலப் பல்கலைக்கழகங்களின்


துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் பல்கலைக்கழகச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவுள்ளதாக, ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்த நிலையில்


சட்டமன்றத்தில் பல்கலைக்கழக திருத்தச் சட்ட முன்வடிவினை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.  பல்கலைக்கழக நிர்வாகங்களில் குளறுபடி குறித்து சில கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு பேசும் போது, "தமிழ்நாடு அரசின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வேந்தராக ஆளுநரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் உள்ளனர்.


கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாதது, உயர்கல்வியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்து வந்த நிலையில்,




கடந்த 4 ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலை தூக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இது மக்களாட்சித் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது மேலும் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், "அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக் கூடாது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும்" எனக் குறிப்பிட்டது.

மேலும், "துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பது என்பது அதிகார மோதலுக்கு வித்திடும்" எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய அரசால் மாநில அரசிடம் கருத்து கேட்கப்பட்ட போது தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் ஆணையத்தின் அறிக்கையை எற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளன.


மேலும், திமுக அரசு எனது தலைமையில் அமைந்ததும் பூஞ்சி ஆணைய பரிந்துரை தொடர்பாக மாநில அரசின் கருத்து கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. அதனை ஏற்று துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாதென்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் எப்படி நடக்கிறது எனப் பார்த்த போது, குஜராத், ஆந்திரா, தெலங்கானாவில் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார். எனவே, பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்த குஜராத்திலுள்ளது போல தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட முன்வடிவினை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்



கடந்த ஜனவரியில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான திருத்தச் சட்டம் குறித்து உயர் கல்வி அமைச்சர் பேசியதை நினைவூட்டிய முதலமைச்சர், "அது நிறைவேறும் சூழலுக்கு வந்திருக்கிறது. குஜராத்தில் மாநில அரசு தான் துணை வேந்தர்களை நியமனம் செய்கிறது. 2017 அ.தி.மு.க ஆட்சியிலும் ஆணையத்தின் பரிந்துரையை ஆதரித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை ஆதரிப்பதில் அ.தி.மு.கவுக்கு நெருடலிருக்க வாய்ப்பில்லை. இது மாநில அரசின் உரிமை மற்றும் கல்வி தொடர்பான பிரச்னை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமை. இதனை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

இதையடுத்து, "சட்டமுன்வடிவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என அமைச்சர் பொன்முடி தெரிவிக்க, அவை முன்னவர் துரைமுருகன் வழிமொழிந்தார். இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து பா.ஜ.க வெளிநடப்பு செய்தது. தொடக்க நிலையிலேயே எதிர்ப்பதாக அ.இ.அ.தி.மு.க உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான அன்பழகன் தெரிவித்தார்.

பின்னர், சட்ட முன்வடிவினை ஆதரித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், "மாநில அரசுகள் இழந்து வரும் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார். பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவை வரவேற்கிறோம். குஜராத், கர்நாடகா, தெலங்கனா ஆகிய மாநிலங்களில் உள்ளதைப் போல மாநில முதல்வரின் உத்தரவுக்கேற்ப அமைச்சர் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டைச் சாராத வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கடந்த காலங்களில் துணைவேந்தர்களாக கொண்டு வந்தனர். வரும் நாள்களில் வேந்தர் என்ற இடத்தில் முதலமைச்சர் பெயர் இடம்பெற வேண்டும்" என்றார்.

அடுத்துப் பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், "பொறுமைக்கும் ஓர் அளவு இருக்கிறது. அண்ணா காலத்திலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆளுநர் பிரச்னை என்பது இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை என்பது ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு என்பதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசுக்கு அளிக்கும் வகையில் பல்வேறு சட்டமன்றங்களில் சட்டம் நிறைவேற்றியுள்ளனர். ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்துள்ள முடிவு என்பது அத்தனை மாநிலங்களும் பயன் தருவதாக அமையும்" என்றார்.

மாநில ஆளுநர், துணைவேந்தர்களை நியமனம் செய்து வரும் நிலையில்,  அந்த அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கே  மாற்றும் சட்ட மசோதா.    25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டது . ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் சாசன சட்ட கடமையை நிறைவேற்றுவது மட்டுமே ஆளுநரின் வேலையாக இருக்கவேண்டும்.

இந்த தலையை எண்ணுகிற வேலையையே ஜனாதிபதி அல்லது  துணை ஜனாதிபதி நெருக்கடி ஏற்படும் மாநிலத்திற்கு தேவைப்படும்போது சென்று செய்யலாம்.என்பது பல அரசியல் வல்லுனர்கள் கருத்து.    நாடு முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்தவர்களின் அரசு நிர்வாகத்தில் தலையிடும் அளவுக்கு எந்த அதிகாரமும் ஆளுநருக்கு  இருக்கக்கூடாது என்பது பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சியின் நிலைப்பாடாகும். கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டத்தின் படி துணைவேந்தர்கள் மாநில அரசின் ஒப்புதலுடன் தான் நியமனம் செய்ய முடியும். அந்த அடிப்படையில், 1923 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகச் சட்டம் உட்பட, 13 பல்கலைக்கழகங்களில் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. அதில், அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் சட்டங்கள் திருத்தப்படவுள்ள மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் மாநில ஆளுநர் ஆர்.என் ரவி.தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகற நிலையில், இந்தச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...