கரூரில் உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது
கரூர் எல்.வி.பி. நகர் சரவணன். இவர் தனக்கு சொந்தமான தோரணக்கல்பட்டியில் உள்ள இடத்திற்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். கரூர் நகர நில அளவையர் ரவி. இவர் தோரணக்கல்பட்டி பகுதிக்கு கூடுதல் நில அளவை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் சரவணனிடம் உட்பிரிவு செய்த பட்டா மாற்றம் செய்ய நில அளவையர் ரவி ரூபாய் .8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சரவணன் ரூபாய் .5 ஆயிரம் தருவதாக தெரிவித்ததாக தெரிகிறது. அதற்கு அவர் மறுக்கவே
அதையடுத்து சரவணன் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து நில அளவையரை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை சரவணனிடம் கொடுத்து அவரிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுறுத்தி அனுப்பினர்.
அதன்படி கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவைத்துறை அலுவலகத்தில் நில அளவையர் ரவியிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை சரவணன் லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையிலான போலீசார் நில அளவையர் ரவியை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து கரூர் நில அளவையர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நில அளவையர் ரவியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அதேபோல பட்டா மாறுதலுக்கு ரூ 6000 லஞ்சம் வாங்கிச் சிக்கிய சர்வேயர்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் பட்டா மாற்றம் செய்வதற்கு விவசாயிடம் 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர்
மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 35). இவரது தாய் பெயரிலிருந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் அளித்த பட்டா உட்பிரிவு மாறுதல் மனுவிற்கு சர்வேயர் சிவ தங்கராஜ் ரூபாய். 6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், இலஞ்சம் கொடுக்க விரும்பாத நீலகண்டன் கடலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்ததன் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன், ஆய்வாளர்கள் மாலா, மற்றும் திருவேங்கடம் மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சர்வேயரை கையுடன் பிடிக்க முடிவு செய்ததையடுத்து அவர்கள் கூறிய அறிவுரைபடி பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய்.6 ஆயிரத்தை நீலகண்டன் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திலிருந்த சிவ தங்கராசுவிடம் கொடுக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த அவர், அந்த பணத்தை கிராம உதவியாளர் ஆனந்தன் ( வயது 56) என்பவரை வாங்குமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நீலகண்டனிடமிருந்து ரூ.6,000 ஆனந்தன் வாங்கி, சிவதங்கராசுவிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த
கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், லஞ்சம் வாங்கிய இருரையும் கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
கருத்துகள்