அஞ்சலக ஊழியர்கள் பணிகளுக்குத் தேர்வான பலர் போலியான பள்ளிச் சான்றிதழ்களை அளித்துள்ளது குறித்து விசாரணை நடத்துமாறு, பள்ளிக் கல்வித் துறையிடம், தபால் துறை வேண்டுகோள்.
தபால் துறை சார்பில், கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படும் நிலையில். தமிழ் தாய் மொழி கொண்ட தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், தற்போது பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், 1,500 நபர்களுக்கும் மேற்பட்டவர்கள், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை அளித்த மாற்றுச் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். தமிழக அஞ்சல் அலுவலகப் பணிக்குத் தேர்வானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, 10 ஆம் வகுப்புச் சான்றிதழ்களின் மெய்த்தன்மை குறித்து தேர்வு அதிகாரிகளுக்குசா சந்தேகம் எழுந்தது; வித்தியாசமிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, அந்த மாற்றுச்சான்றிதழில், முதல் மொழி பாடமாக, ஹிந்தி இடம் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்புச் சான்றிதழில், சம்பந்தப்பட்ட மாணவர் ஹிந்தியில் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழக அரசின் முத்திரையுடன், பள்ளிக் கல்வி துறைக்கு பல வகைகளில் பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. 'ஸ்டேட் கவர்ன்மென்ட் போர்டு ஆப் தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு ஆப் எக்ஷாமினேஷன்ஸ், போர்டு ஆப் ஹையர் செகண்டரி எக்சாமினேஷன்ஸ்' உள்ளிட்ட ஐந்து பெயர்கள், அந்தச் சான்றிதழ்களில் அச்சிடப்பட்டுள்ளன . தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்ற பெயரில், www.tamilnadustateboard.org/ என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது போலியானது.
மாணவர்கள் படித்த பள்ளிகளைப் பொறுத்தவரை, 'சென்னை செகண்டரி பப்ளிக் ஸ்கூல், சென்னை சீனியர் ஸ்கூல்' என, கற்பனையான பள்ளியின் பெயர்கள், சான்றிதழில் இடம் பெற்றுள்ளன. இவ்வளவு குளறுபடிகளுடன் போலியாகத் தயாரிக்கப்பட்ட, 10 ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ்களைக் கொடுத்து, தபால் துறையில் நுாற்றுக்கணக்கானவர்கள் மோசடியாகச் சேர்ந்துள்ள, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து, பள்ளிக் கல்வி துறை தரப்பில் விசாரணை நடத்தி, உரிய மெய்த்தன்ம அறிக்கை தருமாறு, தபால் துறையிலி இருந்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் பலர் சிக்குவார்கள் .இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் நிலையம் கொண்டு உலகின் மிகப்பெரிய துறையாகும் இதில் சீனா இரண்டாமிடம், 57,000 தபால் அலுவகங்கள் மட்டுமே. இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 5,93,878 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கிச் சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் நிலையம் என்ற விகிதத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.
இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764 முதல் 1766 ஆம் ஆண்டுகளில் பம்பாய் (தற்போது மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா (தற்போது கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் துறை சேவையைத் துவக்கியது. பிரித்தானிய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய கவர்னர் ஜெனரல் வாரன் ஹோஸ்டிங் இருந்த போது அஞ்சல் துறை சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியபோது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு ) காசு வசூலிக்கப்பட்டது.
அஞ்சல் சேவையின் அவசியத்தை பலர் உணர்ந்தவுடன் அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை சேவைகள் தபால் தந்தி செயல்படத் தொடங்கியது. 1839 ஆம் ஆண்டில் வடமேற்கு பகுதியில், 1860 ஆம் ஆண்டில் பஞ்சாப் பகுதியில், 1861 ஆம் ஆண்டில் பர்மா மற்றும் மியான்மார் பகுதி, 1866 ஆம் ஆண்டில் மத்திய மாகாணம், 1869 ஆம் ஆண்டில் சிந்து மாகாணம், 1871 ஆம் ஆண்டில் ராஜபுதனா, 1873 ஆம் ஆண்டில் அஸ்ஸாம், 1877 ஆம் ஆண்டில் பீகார், 1878 ஆம் ஆண்டில் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில்அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை விரிவாக்கம் செய்து செயல்படத் துவங்கியது. பின்னர் 1914 ஆம் ஆண்டு வாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு ஏழு அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம் & அஸ்ஸாம், பிகார் & ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, சென்னை, பஞ்சாப் & வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய பிரதேசங்கள் இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 சூலை மாதம்1852 ஆம் ஆண்டில் சிந்து மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா மகாராணியின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன. அப்படி பறந்து விரிந்துள்ளது இதில் தமிழகத்தில் நியமனம் போலியான சான்றிதழ் கொடுத்து நடந்திருக்கிறது என்ற நிலையில் இந்திய அணைத்து மாநிலத்தில் இது குறித்து சோதனை நடத்தப்படும் பட்சத்தில் பலர் சிக்குவது உறுதி நடிகர் வடிவேலு படத்தில் கூறும் நகைச்சுவை காட்சியில் நாய்களைப் பார்த்து கூறுவார் பிழைக்க வந்த இடத்தில் குரைக்க வேண்டும், கடிக்கக் கூடாது . என்பார் அதுபோலவே தற்போது வடமாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்த பலரும் இப்போது கடிக்கத் துவங்கிய நிலையில் போலியான சான்றிதழ் கொடுத்து ஏமாற்றி வேலை பெற்ற நபர்கள் சிக்குவது நமது கவனத்தை ஈர்க்கும் நிலையில் இனி எச்சரிக்கை தேவை என்பதே பொதுவான நீதியாகும்.
கருத்துகள்