முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஞ்சல் நிலையப் பணிக்கு போலிச் சான்றிதழ் சிக்கப் போகும் வட மாநிலத்தவர்கள்

அஞ்சலக ஊழியர்கள் பணிகளுக்குத் தேர்வான பலர் போலியான பள்ளிச் சான்றிதழ்களை அளித்துள்ளது குறித்து விசாரணை நடத்துமாறு, பள்ளிக் கல்வித் துறையிடம், தபால் துறை வேண்டுகோள்.

தபால் துறை சார்பில், கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படும் நிலையில். தமிழ் தாய் மொழி கொண்ட தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர்  மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், தற்போது பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களில், 1,500 நபர்களுக்கும் மேற்பட்டவர்கள், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை அளித்த மாற்றுச் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். தமிழக அஞ்சல் அலுவலகப் பணிக்குத் தேர்வானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, 10 ஆம் வகுப்புச் சான்றிதழ்களின் மெய்த்தன்மை குறித்து தேர்வு அதிகாரிகளுக்குசா சந்தேகம் எழுந்தது; வித்தியாசமிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, அந்த மாற்றுச்சான்றிதழில், முதல் மொழி பாடமாக, ஹிந்தி இடம் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்புச் சான்றிதழில், சம்பந்தப்பட்ட மாணவர் ஹிந்தியில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழக அரசின் முத்திரையுடன், பள்ளிக் கல்வி துறைக்கு பல வகைகளில் பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. 'ஸ்டேட் கவர்ன்மென்ட் போர்டு ஆப் தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு ஆப் எக்ஷாமினேஷன்ஸ், போர்டு ஆப் ஹையர் செகண்டரி எக்சாமினேஷன்ஸ்' உள்ளிட்ட ஐந்து பெயர்கள், அந்தச் சான்றிதழ்களில் அச்சிடப்பட்டுள்ளன . தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்ற பெயரில், www.tamilnadustateboard.org/ என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது போலியானது.

மாணவர்கள் படித்த பள்ளிகளைப் பொறுத்தவரை, 'சென்னை செகண்டரி பப்ளிக் ஸ்கூல், சென்னை சீனியர் ஸ்கூல்' என, கற்பனையான பள்ளியின் பெயர்கள், சான்றிதழில் இடம் பெற்றுள்ளன. இவ்வளவு குளறுபடிகளுடன் போலியாகத் தயாரிக்கப்பட்ட, 10 ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ்களைக் கொடுத்து, தபால் துறையில் நுாற்றுக்கணக்கானவர்கள் மோசடியாகச் சேர்ந்துள்ள, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து, பள்ளிக் கல்வி துறை தரப்பில் விசாரணை நடத்தி, உரிய மெய்த்தன்ம அறிக்கை தருமாறு, தபால் துறையிலி இருந்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் பலர் சிக்குவார்கள் .இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் நிலையம் கொண்டு உலகின் மிகப்பெரிய துறையாகும்  இதில் சீனா இரண்டாமிடம், 57,000 தபால் அலுவகங்கள் மட்டுமே. இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 5,93,878  ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கிச் சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் நிலையம் என்ற விகிதத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.

இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764 முதல் 1766 ஆம் ஆண்டுகளில் பம்பாய் (தற்போது மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா (தற்போது கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் துறை சேவையைத் துவக்கியது. பிரித்தானிய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய கவர்னர் ஜெனரல் வாரன் ஹோஸ்டிங்  இருந்த போது அஞ்சல் துறை சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியபோது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு ) காசு வசூலிக்கப்பட்டது.

அஞ்சல் சேவையின் அவசியத்தை பலர் உணர்ந்தவுடன்  அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை சேவைகள்  தபால் தந்தி செயல்படத் தொடங்கியது. 1839 ஆம் ஆண்டில் வடமேற்கு பகுதியில், 1860 ஆம் ஆண்டில் பஞ்சாப் பகுதியில், 1861 ஆம் ஆண்டில் பர்மா மற்றும் மியான்மார் பகுதி, 1866 ஆம் ஆண்டில் மத்திய மாகாணம், 1869 ஆம் ஆண்டில் சிந்து மாகாணம், 1871 ஆம் ஆண்டில் ராஜபுதனா, 1873 ஆம் ஆண்டில் அஸ்ஸாம், 1877 ஆம் ஆண்டில் பீகார், 1878 ஆம் ஆண்டில் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில்அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை விரிவாக்கம் செய்து செயல்படத் துவங்கியது. பின்னர் 1914 ஆம் ஆண்டு வாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு ஏழு அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம் & அஸ்ஸாம், பிகார் & ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, சென்னை, பஞ்சாப் & வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய பிரதேசங்கள் இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 சூலை மாதம்1852 ஆம் ஆண்டில் சிந்து மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா மகாராணியின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன. அப்படி பறந்து விரிந்துள்ளது இதில் தமிழகத்தில் நியமனம் போலியான சான்றிதழ் கொடுத்து நடந்திருக்கிறது என்ற நிலையில் இந்திய அணைத்து மாநிலத்தில்  இது குறித்து சோதனை நடத்தப்படும் பட்சத்தில் பலர் சிக்குவது உறுதி நடிகர் வடிவேலு படத்தில் கூறும் நகைச்சுவை காட்சியில் நாய்களைப் பார்த்து கூறுவார்  பிழைக்க வந்த இடத்தில் குரைக்க வேண்டும், கடிக்கக் கூடாது . என்பார் அதுபோலவே தற்போது வடமாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்த பலரும் இப்போது கடிக்கத் துவங்கிய நிலையில் போலியான சான்றிதழ் கொடுத்து ஏமாற்றி வேலை பெற்ற நபர்கள் சிக்குவது நமது கவனத்தை ஈர்க்கும் நிலையில் இனி எச்சரிக்கை தேவை என்பதே பொதுவான நீதியாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த