இரயில்வேயில் கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு கால நீட்டிப்பு.
மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட இரயில்வே அமைச்சர்
இரயில்வேயில் கருணை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலம் பத்தாம் வகுப்புக்கு குறைந்த கல்வித் தகுதி உடையவர்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரில் வேளையில் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டாலும் நிரந்தரமாக்கப்படாமல் இருந்தது .அவர்கள் ஐந்தாண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது .கோவிட் -19 பரவல் போன்ற காரணங்களால் அவர்கள் இந்த கால அவகாசத்துக்குள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியாமல் வேலைநீக்கம் செய்யப்படும் அபாய நிலையிலிருந்தது.
குறித்து ரயில்வே அமைச்சருக்கு அவர்களின் கல்வித்தகுதி நிபந்தனையை ஒருமுறை விலக்களித்து அவர்களை நிரந்தரம் செய்யவோ அல்லது அவர்கள் கல்வித் தகுதி பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவோ உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்ட உறுப்பினருக்கு
ரயில்வே அமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வதற்கான கால அவகாசத்தை மே மாதம் 2023 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளதாக பதில் அளித்துள்ள தன் மூலம் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த உத்தரவை நல்கிய ரயில்வே அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கோரிக்கையை தனது கவனத்துக்கு கொண்டு வந்த தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்
கருத்துகள்