புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை நிறுவனரும் பிரபல காய்கனி வணிகருமான எஸ்.ஆர்எம். என அழைக்கப்படும் மரம் இராஜா அவர்களின் 59 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு முள்ளூர் புதுக்கோட்டை அரசினர் மருத்துவக்கல்லூரியில் 151 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பூவதி தலைமையில்.இருக்கை மருத்துவர் திருமதி.இந்துராணி முன்னிலையில்... சமூக மருத்துவர் இராம்தாஸ்.மற்றும்
புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் அறிவுடைநம்பி.. மற்றும் எஸ்.ஏ.எஸ்.சேட்டு, சூழலியல் செயல்பாட்டாளர்சாய் கேட்டரிங் சந்துரு,மரம் அறக்கட்டளை நிர்வாகிகள் கார்த்திக்,சிவகுமார்,சத்தியமூர்த்தி,ஆறுமுகம்வழக்கறிஞர் உபையதுல்லா.சிலம்பரசன்.. உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் அனைவரும் பங்கேற்று
நாவல்,பூவரசு,ஆற்றுப்புரச,பாதாம், சிவகுண்டலம்..உள்ளிட்ட மரக் கன்றுகள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நட்டுச் சிறப்பித்தனர்.
மேலும் அணைவரும் சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து புத்தகங்கள் பரிசளித்தார்.இன்று கென்யாவைச் சேர்ந்த கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்ற வங்காரி மாத்தாய் மற்றும் இராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிஙக சேதுபதி உள்ளிட்டவர்களின் பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு.
கருத்துகள்