முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நகை வணிகத்தின் அறமற்ற மோசடிகள் தடுக்க அறச்சீற்றமில்லாத மக்கள் தீர்வில்லா நிலை

வியாபாரங்களில் அதிக அளவில் மோசடி நடப்பது தங்க வியாபாரம். தங்கம் வாங்குவோரை சில நேரங்களில் யோசிக்க வைக்கிறது

இந்தக் குற்றச்சாட்டுகளில் நிஜமிருக்கும் பட்சத்தில் மக்களுக்கு அது குறித்த கவலைகள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இப்போதும் நகைக்கடைகளில்  தேனீக்களைப் போல் மக்கள் கூட்டம்.

பதிக்கப்பட்ட கல்லுக்கும் தங்கத்தின் எடை கொண்ட விலையை வாங்குகிறார்கள்

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் அமெரிக்கன் டைமன் எனும் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் என வியாபார விதிமுறை மீறல்கள் நாற்பது கிராம் ஹால்மார்க் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் அமெரிக்கன் டைமன் கல்லுக்குக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.


ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம் மக்களிடம் வாங்கி விடுகின்றனர். ‘தங்கத்தின் விலையும் கல்லின் விலையும்’ சமமானவை அல்ல. இதை வர்த்தக அமைச்சகம் வியாபார ஒழுங்கு முறை சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்தால் அன்றி மக்கள் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை தான் காலகாலமாக நீட்டித்து வருகிறது, இரண்டுக்குமிடையே எட்ட முடியாத வித்தியாசமுண்டு.


நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மிகப்பெரிய மோசடி. ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசமென்று கூறி மக்களை மேலும் குழப்பமாக விளம்பரங்கள் செய்து பெரிய நிறுவனங்கள் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு ‘கல்லுக்கு தனியாகவும்’ பணத்தை வாங்கி ‘இரட்டை மோசடியும்’ செய்கிறார்கள்.


அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் ‘கல்லை அப்புறப்படுத்தி விட்டு’ தங்கத்தை மட்டும் எடை போட்டுத் தானே பணம் தருகிறார்கள். வாங்க விற்க இருவேறு நிபந்தனைகள் இருக்க முடியாது இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா எனத் தெரியவில்லை. இதில்



இரண்டாவது மோசடி எனப் பார்த்தால்

சொக்கத் தங்கம் எனப்படும் 24 கே எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு எனும் பித்தளை கலந்தால் தான் நகை செய்ய முடியும். ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM எனச் சொல்லப்படுகிறது.

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு எனும் பித்தளை சேர்த்து விட்டு 1000 கிராம் அதில் பித்தளை கலந்த தங்கத்துக்கும் தங்கத்தின் விலை போடப்பட்டு வாங்கப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ள நிலை போக

மூன்றாவது மோசடியாக

தங்கத்துக்கு இன்றைய காலத்தில் ‘இரண்டு விலை’ உள்ளது.

ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் 

தயார் செய்வதற்கான கூலியாகும்.

ஐந்து பௌன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால், ஐந்து பௌன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு ‘சேதாரம்’ என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது ஐந்து பௌனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் வாங்கி விடுகிறார்கள்.

நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரமாவது கிடையாது என்பது பொற்கொல்லர்

நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூகள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் மெழுகு மூலம் எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.

இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத தொழில்நுட்ப வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி நடக்கிறது. இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை. அவர்களுக்குள் ஒரு சின்டிகேட்  உண்டு

அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரமெல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.

ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. 

அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டும் தானே, அப்படிக் கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தரும் நிலையில் இதுவும் பகல் கொள்ளை தான்

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களில் நிஜமில்லை எனில் தங்க நகை விற்பனையாளர்கள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுத்து  மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக விளக்கம் தரலாம். விளக்கமும் நமது இதழில் வெளியிடப்படும். அதிகமாக விளம்பரங்கள் செய்யும் லலிதா ஜுவல்லரி போல பல நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு கடை எப்படி உருவானதும்,வட மாநிலத்தை சேர்ந்த மார்வாடிகள் மற்றும் நம்நாட்டில் ஒரு குறிப்பிட்ட தெலுங்கு பேசும் மக்கள் மட்டுமே இந்த வியாபாரிகள் நடத்தும் நிலையில் 

தங்கம் பற்றி சரியான  விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை . சில போலியான விளம்பரங்கள் சேதாரம் இத்தனை சதவீதம் என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை நிலை தான்  என்ன ?ஒரு பவுன் தங்கச் சங்கிலி செய்ய 

1.5 கிராம் செம்பு அதாவது பித்தளை சேர்த்தால் மட்டும் தான் நகை செய்ய முடியும். இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் 

8 கிராம் தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 

6.5 கிராமில் உள்ள தங்கம் மட்டுமே நகை செய்யப்படுகின்றது. ஆனால் சாமானிய மக்கள் நகை வாங்கும்போது 6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அதாவது பித்தளை இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் GST சேர்த்து போடுகின்றார்கள். அது மட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பாகிய பித்தளை  தங்கம் எனக் கூறி சேர்க்கப்பட்டதாக பொய் கூறி செம்பை தங்க விலைக்கே விற்கின்றார்கள். இதில் நாம் சொல்லுவது என்ன வென்றால்  6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டுமில்லாமல் 3 கிராம் செம்பையும் சேர்த்து தங்கத்தின் விலையை பித்தளைக்கும் சேர்த்து போட்டு விற்பனை செய்து விடுகின்றார்கள். ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு வாங்கும் நபர்கள் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் இந்த நகைக் கடைகாரர்கள்.ஆக இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தால் நிச்சயம் நடவடிக்கை வரும். ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் நகை வணிகத்தின் மோசடி நபர்கள் ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நாம் மேலே கூறிய  கணக்குதான் உண்மை நிலை. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை .... பவுனுக்கு 3 கிராம் என் ஏமாற்றி வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை .....?   கணக்கு !

1 கிராம் தங்கம் ரூ. 3765/-

8 கிராம் தங்கம் ரூ. 30,120/-

1 கிராம்  செம்பு - 4.80

1.5 கிராம் செம்பு - 7.20 அல்லது 7/-

6.5 கிராம் தங்கம் - 24,472/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு 

அடக்கவிலை-24,472+7=24,479/-

1 பவுனுக்கு தங்கத்தில் - 30,120 - 24,479 

லாபம்= 5,641

சேதாரம் 1.5 கிராம் = 5647/-

 1 பவுனுக்கு மொத்த லாபம்  11,288 ரூபாய் வியாபாரம் செய்த நபருக்கு இலாபம்.              நமக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை நிச்சயமாகக் குறையும். விழிப்புணர்வு ஏற்படுத்த எதுவும் மக்களால் முடியும். மக்களால் மட்டுமே முடியும்.                ."மண்ணக மடந்தை வான்துயர் கூரக்

காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்

கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து"

சிலப்பதிகாரம்:16: 215-17)                          "பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன்"         (சிலப்பதிகாரம்: 20: 74-75)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த