இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் தேசியவிளையாட்டு தினக் கொண்டாட்டம்
இந்திய ஹாக்கி விளையாட்டு ஆளுமையான மேஜர் தியான்சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சர்வதேச ஹாக்கி விளையாட்டு வீரர்கள் திரு. கார்த்தி மற்றும் திரு. மாரீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டு மேஜர் தியான் சந்த் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, ஹாக்கி வீரர் மாரீஸ்வரன் மேஜர் தியான் சந்த் பற்றியும், அவரது சாதனைகள் குறித்தும் பேசினார். இளம் விளையாட்டு வீரர்கள் அதிகமான முயற்சி எடுத்து, தங்களது விளையாட்டில் ஜொலிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்துகள்