பலதரப்பட்ட கருத்துக்களுக்கு மதிப்பளித்து பொதுமக்கள் ஜனநாயகத்தை கட்டமைக்க முன்வரவேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தல்.
ஆந்திர மாநிலத்திலுள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசியவர், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த, துடிப்புடன் கூடிய லட்சியத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, ஊழல், இலஞ்சம் உள்ளிட்ட சிந்தனைகள் மக்களுக்கு வரக்கூடாதெனவும்.
அநீதிகளை பொறுத்துக்கொள்ளும் சிந்தனைகளை விலக்கி வைக்கவேண்டுமென்வும் கூறினார்.
நிலையான வளர்ச்சிக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சிந்திக்க வேண்டுமெனவும் இதற்கு சமூகத்தில் முன்னோடியான சாதனையாளர்களைக் கருத்தில் வைத்துச் செயல்படவேண்டுமெனவும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
கருத்துகள்