புலம்பெயர்ந்த இந்தியர்கள் இணைந்து செயல்படும் போது விரைவில் நம் நாடு வளர்ந்த நாடாகும்: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியா, புலம்பெயர்ந்த இந்தியர்கள் இணைந்து செயல்படும் போது விரைவில் நம் நாடு வளர்ந்த நாடாகும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
இந்தியாவும், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களும் இணைந்து செயல்படும் போது விரைவில் நம் நாடு வளர்ந்த நாடாகும் என்று மத்திய தொழில்துறை, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் அமெரிக்கப் பயணத்தின் இறுதி நாளன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் அமெரிக்காவில் தான் நடத்திய உரையாடல்களைப் பற்றி பேசிய மத்திய அமைச்சர், அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது என்றார். செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு பெருமளவு இருக்கும் என்றும், அவர்களின் செயல்பாடுகள் தங்களது தாய் நாட்டிற்கு நன்றிக்கடன் பட்டதை உணரும் வகையில் இருக்கிறது என்றும் கூறினார்.
“இந்தியா இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது, உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பது மற்றும் அதற்கு உதவிகரமான ஸ்டார்ட்-அப் செயல்பாடுகள் மூலம்
முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பது ஆகும்” என்று மத்திய அமைச்சர் தெளிவு படுத்தினார்.
அமெரிக்காவிலிருந்து வரும் யோசனைகள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவில் உள்ள பங்குதாரர்களுடன் இணைப்பதில் அரசாங்கம் வகிக்கக்கூடிய சில பங்கு தொடர்பான பல பரிந்துரைகள் உள்ளன என்று கூறினார்.
முன்னதாக, அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணண் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் தெற்கு கலிபோர்னியாவின் வணிகர்களுடன் கலந்துரையாடினார்.லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயத்திற்கு திரு பியூஷ் கோயல் சென்றிருந்தார்
பிஏபிஎஸ் சுவாமி நாராயண் ஆலயம் உலகம் முழுவதும் உள்ள சமூகத்திற்கு மகத்தான சேவை செய்வதாக மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் என்று தெரிவித்தார். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயத்திற்கு சென்றபின் இந்திய சமூகத்தினரிடம் அவர் உரையாற்றினார்.
லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலய வளாகத்தின் அழகு குறித்து வியப்பு தெரிவித்த அவர் இந்த ஆலயம் பத்தாண்டுகளை நிறைவு செய்வதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்தியர்கள் பங்களிப்பு, இந்தியர்கள் இந்தப் பகுதியில் வாழ்வதன் சிறப்பு ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமானதாக இந்த ஆலயம் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பிரமுக் சுவாமி மகராஜின் நூறாவது பிறந்த நாளில் அவருக்குப் புகழாரம் சூட்டிய அமைச்சர், அவரது ஆசியைப் பெறுவதற்கும் அவரிடமிருந்து சிறந்தவற்றைக் கற்பதற்கும்
உலகம் முழுவதும் உள்ள நம் அனைவருக்கும் இது மிகவும் சிறப்பான தருணம் என்றார். கடந்த பல ஆண்டுகளாக பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் சிறந்த உறவை வைத்திருப்பது தமக்கு பெருமை அளிப்பது என்று குறிப்பிட்ட திரு கோயல் சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில்
பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை தாம் பெற்றிருந்ததாகவும் கூறினார்.
உலகம் முழுவதும் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயங்களுக்கு செல்லும் நல்வாய்ப்புகளைத் தாம் எப்போதும் பெற்றிருந்ததாகக் கூறிய திரு கோயல், இந்த ஆலயம் மிகவும் தனித்துவமானது; அழகாக வடிவமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது என்றார். இந்த ஆலயத்திற்கு வரும்போதே ஆன்மீக உணர்வைப் பெறுவது இதன் தனித்துவம் என்று அவர் கூறினார்.
சுவாமி நாராயண் பகவான் எப்போதும் மனித குலத்தின் மீதும் ஆன்மீகம் மற்றும் சமூக சேவையிலும் நம்பிக்கை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய திரு கோயல், மனித குலத்திற்கு நாம் பெருமளவில் திருப்பி செலுத்த வேண்டிய பங்குகளை அவரது போதனைகள் கவனப்படுத்துவதாக தெரிவித்தார். ஞானம், பக்தி, பணி எனும் சிறப்புமிக்க போதனைகளை சுவாமி நாராயண் நமக்கு போதித்துள்ளார். பிரமுக் சுவாமி மகாராஜின் சிந்தனை நம்மோடு எப்போதும் நிலைத்திருக்கும். அவரது போதனைகள் நமக்கு ஊக்கமளிப்பதும் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டுவதும் தொடரும் என்று திரு கோயல் கூறினார்.
கருத்துகள்