முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலம்பெயர்ந்த இந்தியர்கள் இணைந்து செயல்படும் போது விரைவில் நம் நாடு வளர்ந்த நாடாகும்: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியா, புலம்பெயர்ந்த இந்தியர்கள் இணைந்து செயல்படும் போது விரைவில் நம் நாடு வளர்ந்த நாடாகும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்


இந்தியாவும், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களும் இணைந்து செயல்படும் போது விரைவில் நம் நாடு வளர்ந்த நாடாகும் என்று மத்திய  தொழில்துறை, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் அமெரிக்கப் பயணத்தின் இறுதி நாளன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் அமெரிக்காவில் தான் நடத்திய உரையாடல்களைப் பற்றி பேசிய மத்திய அமைச்சர், அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது என்றார். செய்தியாளரின்  கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு பெருமளவு இருக்கும் என்றும், அவர்களின் செயல்பாடுகள் தங்களது தாய் நாட்டிற்கு நன்றிக்கடன் பட்டதை உணரும் வகையில் இருக்கிறது என்றும் கூறினார்.

“இந்தியா இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது, உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பது மற்றும் அதற்கு உதவிகரமான  ஸ்டார்ட்-அப் செயல்பாடுகள் மூலம்


முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பது ஆகும்” என்று மத்திய அமைச்சர் தெளிவு படுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து வரும் யோசனைகள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவில் உள்ள பங்குதாரர்களுடன் இணைப்பதில் அரசாங்கம் வகிக்கக்கூடிய சில பங்கு தொடர்பான பல பரிந்துரைகள் உள்ளன என்று கூறினார்.

முன்னதாக, அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணண் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் தெற்கு கலிபோர்னியாவின் வணிகர்களுடன்  கலந்துரையாடினார்.லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயத்திற்கு திரு பியூஷ் கோயல் சென்றிருந்தார்

பிஏபிஎஸ் சுவாமி நாராயண் ஆலயம் உலகம் முழுவதும் உள்ள சமூகத்திற்கு மகத்தான சேவை செய்வதாக மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் என்று தெரிவித்தார். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயத்திற்கு  சென்றபின் இந்திய சமூகத்தினரிடம் அவர் உரையாற்றினார்.

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள  ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலய வளாகத்தின் அழகு குறித்து வியப்பு தெரிவித்த அவர்  இந்த ஆலயம் பத்தாண்டுகளை நிறைவு செய்வதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின்  வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்தியர்கள் பங்களிப்பு, இந்தியர்கள் இந்தப் பகுதியில் வாழ்வதன் சிறப்பு ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமானதாக இந்த ஆலயம் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

பிரமுக் சுவாமி மகராஜின் நூறாவது  பிறந்த நாளில் அவருக்குப் புகழாரம் சூட்டிய அமைச்சர், அவரது ஆசியைப் பெறுவதற்கும் அவரிடமிருந்து சிறந்தவற்றைக் கற்பதற்கும்

உலகம் முழுவதும் உள்ள நம் அனைவருக்கும் இது மிகவும் சிறப்பான தருணம் என்றார்.  கடந்த பல ஆண்டுகளாக பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் சிறந்த உறவை வைத்திருப்பது தமக்கு பெருமை அளிப்பது என்று குறிப்பிட்ட திரு கோயல் சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில்

பிரமுக்  சுவாமி மகராஜ் அவர்களின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை தாம் பெற்றிருந்ததாகவும் கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயங்களுக்கு செல்லும் நல்வாய்ப்புகளைத் தாம் எப்போதும் பெற்றிருந்ததாகக் கூறிய திரு கோயல்,  இந்த ஆலயம் மிகவும் தனித்துவமானது; அழகாக வடிவமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது என்றார். இந்த ஆலயத்திற்கு வரும்போதே ஆன்மீக உணர்வைப் பெறுவது இதன் தனித்துவம் என்று அவர் கூறினார்.

சுவாமி நாராயண் பகவான் எப்போதும் மனித குலத்தின் மீதும் ஆன்மீகம் மற்றும் சமூக சேவையிலும் நம்பிக்கை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய திரு கோயல், மனித குலத்திற்கு நாம் பெருமளவில் திருப்பி செலுத்த வேண்டிய பங்குகளை அவரது போதனைகள் கவனப்படுத்துவதாக தெரிவித்தார்.  ஞானம், பக்தி, பணி எனும் சிறப்புமிக்க போதனைகளை சுவாமி நாராயண் நமக்கு போதித்துள்ளார். பிரமுக் சுவாமி மகாராஜின் சிந்தனை நம்மோடு எப்போதும் நிலைத்திருக்கும். அவரது போதனைகள் நமக்கு ஊக்கமளிப்பதும் வாழ்நாள் முழுவதும்  வழிகாட்டுவதும் தொடரும் என்று திரு கோயல் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு